80 வயதிலும் கம்பு ஊன்றிச் சென்று பனையேறும் தொழிலாளி.. முதியோர் உதவித்தொகை வழங்கும்படி அரசுக்குக் கோரிக்கை!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கடாட்சபுரத்தில் 80 வயதிலும் கம்பு ஊன்றிச் சென்று பனை ஏறும் தொழிலாளி முதியோர் உதவித்தொகை வழங்கும்படி அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். மனைவி, மகன்கள் முன்னரே இறந்துவிட்ட நிலையில் மகளின் ஆதரவில் பனையேறிப் பிழைப்பு நடத்தும் பனைத்தொழிலாளி சாலமோன், பனையேற்றுத் தொழில் இல்லாக் காலங்களில் பிழைப்பு நடத்துவது சிரமமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  Source link

எம்ஜிஆர் உயிலின்படி 80% தொண்டர்கள் ஆதரிக்கும் நபரே அதிமுகவை வழிநடத்த முடியும்: செல்லூர் ராஜூ 

மதுரை: எம்ஜிஆர் எழுதிய உயிலின்படி, 80 சதவீத தொண்டர்கள் ஆதரிக்கும் நபரே அதிமுக கட்சியை வழிநடத்த முடியும் என, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ கூறினார். இது தொடர்பாக மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ”திமுகவின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் எம்ஜிஆர். இவரது தியாகத்தை மதிக்காமல் கருணாநிதி கட்சியைவிட்டு நீக்கினார். அண்ணா தொடங்கிய இயக்கத்திற்கு எதிராக புதிய கட்சி தொடங்க எம்ஜிஆர் யோசித்தார். ஆனாலும் மக்கள் வெகுண்டு எழுந்தனர். திமுகவினர் கரை வேட்டி கட்ட முடியாத சூழல் … Read more

”அதிமுகவில் என்னுடைய தலைமையைதான் தொண்டர்கள் விரும்புகிறார்கள்” – சசிகலா பேட்டி!

அதிமுக நிச்சயம் ஒற்றை தலைமையின் கீழ் வரும் என வி.கே.சசிகலா தெரிவித்திருக்கிறார். அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே அண்மைக்காலமாக போட்டியே நிலவி வருகிறது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அரசியல் சுற்றுப்பயணமாக திருத்தணிக்கு சென்றிருக்கும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும், அதிமுகவின் பொதுச்செயலாளரேதான் என கூறிக் கொண்டிருக்கும் வி.கே.சசிகலா அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதன் விவரம் பின்வருமாறு:- “எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு இதுப்போன்ற … Read more

பாறைமீதமர்ந்து நட்சத்திரம் பார்த்தல்: எஸ்.வி.ராஜதுரையின் இலக்கியக் கட்டுரைகள்

அழகிய பெரியவன் உலகின் ஒவ்வொரு மொழியிலும் தலைமுறைகளைக் கடந்து எழுதுகின்ற, அறிவுத் துறையுடன் இடையறாமல் தொடர்ந்து உரையாடி விவாதங்களையும் செல்நெறிகளையும் கட்டியெழுப்புகின்ற ஆளுமைகள் அரிதாகவே இருப்பார்கள். சில மொழிகளில் அவ்வாறு இல்லாமலும் இருக்கலாம். ஆனால் தமிழுக்கு அந்த நல்வாய்ப்பு எஸ்.வி.ராஜதுரை அவர்களின் மூலம் கிடைத்திருக்கிறது. என்னுடைய பத்தொன்பது வயதில், 1987 ஆம் ஆண்டு முதன்முதலாக அவரது எக்சிஸ்டென்ஷியலிசம் நூலைப் படித்தேன். அப்போது நான் வேலூர் ஊரீசுக் கல்லூரியில் விலங்கியல் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்தேன். 1975 ஆம் ஆண்டில் … Read more

#BREAKING : அதிமுகவை காக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது – சசிகலா பரபரப்பு பேட்டி.!

எனது தலைமையில் அதிமுக இருக்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர் என்று திருத்தணியில் பேட்டி அளித்த சசிகலா கூறியுள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சர்ச்சை வெடித்துள்ள நிலையில், இன்று சசிகலா தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். சென்னையில் இருந்து திருத்தணி சென்ற சசிகலாவிற்கு பல்வேறு இடங்களில் அதிமுக கொடியுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில், திருத்தணியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சசிகலா கூறியதாவது:- அதிமுகவை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. எனது … Read more

“ஓலா” கால் -டாக்சி ஓட்டுநரின் கழுத்தை அறுத்து விட்டு காருடன் தப்பித்த கும்பல்

செங்கல்பட்டில், ஓலா நிறுவன கால் டாக்சி ஓட்டுநரின் கழுத்தை அறுத்து விட்டு காருடன் தப்பி சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். வல்லம் பேருந்து நிலையம் அருகே கழுத்தறுக்கப்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அர்ஜூன் என்ற அந்த நபரின் டாக்சியை சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து ஓலா நிறுவனம் மூலம் புக் செய்த கும்பல், நள்ளிரவில் செங்கல்பட்டு மாவட்டம் வல்லம் பகுதியில் வைத்து, அர்ஜுனின் கழுத்தில் … Read more

ஜூலை 11-ல் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார்: பொள்ளாச்சி ஜெயராமன்

திருப்பூர்: “வரும் ஜூலை 11-ம் தேதி , நிச்சயமாக ஒரே தலைமையாக அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு மூலம் ஏகோபித்து ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார். சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், திமுகவை எதிர்க்கின்ற வல்லமை படைத்த ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமிதான்” என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். திருப்பூர் மாநகர அதிமுக ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பின்னர், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். … Read more

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தைப் போல் தற்போது இபிஎஸ்-க்காக மாபெரும் எழுச்சி: ஆர்.காமராஜ்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் ஏற்பட்ட எழுச்சியை போல் தற்போது எடப்பாடி பழனிச்சாமி காலத்திலும் எழுச்சி ஏற்பட்டு அதிமுக எழுந்து நிற்பதாக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கூத்தாநல்லூரில் மாற்று கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ், அ.தி.மு.க.வின் செயல்பாடுகள் செம்மைப்படுத்தப்பட்டு வருவதாகவும், கடந்த நான்கு ஆண்டுகள் இரண்டு மாதங்கள் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக … Read more

TNPSC Group 4 VAO தேர்வு; ஒரு மாதத்தில் இப்படி படித்தால்… வெற்றி உறுதி!

TNPSC group 4 VAO exam preparation tips for aspirants: குரூப் 4 தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு! தேர்வுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், இந்த ஒரு மாதத்தில் என்ன படிக்க வேண்டும்? எப்படி படிக்க வேண்டும்? எதை செய்யக் கூடாது போன்ற முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம். குரூப் 4 தேர்வுக்கு தயாராகுபவர்கள், குறைவான நாட்களே உள்ளதால் அதற்கேற்றப்படி தயாராக வேண்டும். நீங்கள் ஏற்கனவே நன்றாக படித்து முடித்து விட்டீர்கள் … Read more

பள்ளிக்கு செல்ல சொன்னதால் மாணவன் எடுத்த விபரீத முடிவு.. சேலம் அருகே நிகழ்ந்த சோகம்..!

பள்ளிக்கு செல்ல கூறியதால் 9ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி.  இவருக்கு திருணமாகி உமா என்ற மனைவியும் ஜீவன், கிஷோர், முருகவேல்  ஆகிய மூன்று மகன்களும் உள்ளனர். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுப்பாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். உமா தனது மூத்த மகன் ஜீவனை வாழப்பாடியில் உள்ள அரசு பள்ளியில்  10ம் வகுப்பு சேர்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்து வந்தார். ஆனால், … Read more