சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! (05.06.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 05/06/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 21/16/14 நவீன் தக்காளி 60 நாட்டு தக்காளி 50/45 உருளை 35/30/22 சின்ன வெங்காயம் 45/30/26 ஊட்டி கேரட் 42/40/35 பெங்களூர் கேரட்  பீன்ஸ் 60/50 பீட்ரூட். ஊட்டி 50/45 கர்நாடக பீட்ரூட் 35 சவ் சவ் 30/28 முள்ளங்கி 20/17 முட்டை கோஸ் 40/30 வெண்டைக்காய் 25/10 உஜாலா கத்திரிக்காய் 25/15 வரி கத்திரி … Read more

திமுக அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் – அண்ணாமலை இன்று வெளியிடுகிறார்

சென்னை: திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை இன்று வெளியிட உள்ளார். பாஜகவின் மாநில தலைவராக கே.அண்ணாமலை, கடந்த ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்றார். அதன் பிறகு, திமுக அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இதனால், திமுக-பாஜக இடையேயான கருத்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இதுமட்டுமின்றி, தனியார் நிறுவனத்துக்கு அனல் மின் உற்பத்தி தொடர்பான ஒப்பந்தம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு குற்றம்சாட்டினார். இந்நிலையில், … Read more

வேதாரண்யம்: வளர்ப்பு நாய்களுக்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்த குடும்பத்தினர்

வேதாரண்யம் அருகே கர்ப்பமாக இருந்த வளர்ப்பு நாய்களுக்கு தம்பதியர் வளைகாப்பு நடத்தி மகிழ்ந்த நிகழ்ச்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறையைச் சேர்ந்தவர்கள் கோபி – பிரியா தம்பதிகள். இவர்கள் தாங்கள் வளர்த்து வந்த செல்ல நாய்களுக்கு உறவினர்கள் ஒன்றுகூடி வளைகாப்பு நடத்தி மகிழ்ந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கர்ப்பம் தரிக்காமல் இருந்த பப்பி மற்றும் டைகர் ஆகிய வளர்ப்பு நாய்கள் கடந்த 45 நாட்களுக்கு முன்பு கர்ப்பம் தரித்தது. இதில் மகிழ்ச்சி அடைந்த … Read more

தமிழ்நாட்டின் டாப் 3 தலைவர்கள் யார்? புதிய கருத்துக் கணிப்பு முடிவுகள்

Tamilnadu top leader and DMK govt functionalities survey results: தமிழ்நாட்டில் சிறந்த தலைவர்கள் யார் என தனியார் செய்தி தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் திமுக அரசு அமைந்து ஓராண்டு நிறைவுப்பெற்றுள்ள நிலையில், ஆட்சியை பற்றி மக்கள் மனநிலை, தலைமையின் செயல்பாடுகள், எதிர்க்கட்சிகள் எப்படி செயல்பட்டன, தற்போதைய நிலையில் மக்களின் மனம் கவர்ந்த தலைவர் யார் போன்ற கருத்துக் கணிப்புகளை, தமிழ்நாட்டின் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் ஒன்றான புதிய தலைமுறை … Read more

பாஜகவுக்கு கூடுவது காக்கை கூட்டம் – செல்லூர் ராஜு காட்டம்.!

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது, “தமிழக மக்களுக்காக என்றுமே அதிமுக சேவை செய்கின்ற ஒரு இயக்கமாகும். தமிழகத்தைப் பொருத்தவரை எப்போதும் அதிமுக-திமுக ஆகிய இரண்டு கட்சிகள் தான் பிரதான கட்சிகள். ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கட்சியை சேர்ந்த நிர்வாகிகளை ஊக்கப்படுத்துவதற்காக பலவகைகளில் அரசியல் செய்து வருகிறார்.  முன்பு பாஜக மாநிலத் தலைவராக செயல்பட்ட தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பாக பணியாற்றியிருந்தார். அவருக்கு ஒரு பதவி கிடைத்தது … Read more

நண்பர்களுடன் கடலில் குதித்து மாணவன் நீரில் மூழ்கிய நெஞ்சை பதற வைக்கும் காட்சி..! இது விபரீதத்தின் உச்சம்..!

காசிமேடு கடலில் நண்பர்களுடன் குளிப்பதற்காக குதித்த பாலிடெக்னிக் மாணவன் நீச்சல் தெரியாமல் தத்தளித்து மூழ்கும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. கூடா நட்பு கேடாய் முடிந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. தண்டையார்பேட்டை, நேரு நகர், மெயின் தெருவைச் சேர்ந்தவர் ஏஜாஸ் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று தன்னுடன் படிக்கும் நண்பர்களுடன் காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் உள்ள சிமெண்டு வார்ப்பு பகுதியில் குளிக்க சென்றார். அப்போது, 3 நண்பர்களுடன் … Read more

சென்னை-புதுச்சேரி சொகுசு கப்பல் சுற்றுலா திட்டம் – கட்டண விவரம், பொழுதுபோக்கு அம்சங்கள் என்ன?

சென்னை: சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் நிறுவனத்தின் சொகுசு பயணிகள் கப்பல் சேவை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். ‘கோர்டிலியா குரூஸ்’ என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் ஆழ்கடல் பகுதிகளுக்கு சொகுசு கப்பலில் பயணிக்கும் வகையிலான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான தொடக்க விழா சென்னை துறைமுகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சொகுசு கப்பல் சுற்றுலா … Read more

`ஆதீன பாரம்பரியங்களில் இந்து அறநிலையத் துறை தலையிடாது’- அமைச்சர் தகவல்

‘சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை இந்து அறநிலைத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை’ என்று மயிலாடுதுறையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பேட்டியளித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்திற்கு நேற்று சென்றிருந்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சென்ற அமைச்சர், ஆதீனத்தின் 27வது குருமகாசன்னிதானம் … Read more