'துயரம் ஏற்பட்ட சமயத்தில் உலகம் இந்தியாவின் பக்கம் நின்றது' – வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேச்சு

வின்ட்ஹோக், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், நமீபியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக நமீபியாவின் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார். முன்னதாக நமீபியா வாழ் இந்தியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது பேசிய அவர், ஒடிசாவில் நடந்த கோரமான ரெயில் விபத்தைத் தொடர்ந்து பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இந்திய அரசுக்கு தங்களது … Read more

ஆண்கள் விடுதியில் துப்பாக்கிச்சூடு – 8 பேர் பலி

கேப்டவுன், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கேப்டவுன் நகரின் உமெஷி பகுதியில் ஆண்கள் விடுதி உள்ளது. இந்த விடுதியில் நேற்று அதிகாலை 12 பேர் மதுக்குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது மது குடித்துக்கொண்டிருந்தவர்களின் அறைக்கு சென்ற சிலர் மதுபோதையில் இருந்த அனைவர் மீதும் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் அறையில் மதுக்குடித்துக்கொண்டிருந்த 8 பேர் உயிரிழந்தனர். அதேவேளை, துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பிக்க அறையில் இருந்து கீழே குதித்த 2 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் … Read more

மீண்டும் தென்பட்டது 100 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போனதாகக் கருதப்பட்ட அரியவகை பட்டாம்பூச்சி..!

இங்கிலாந்தில் 100 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போனதாகக் கருதப்பட்ட அரியவகை பட்டாம்பூச்சி மீண்டும் பார்வையில் தென்பட்டது. லண்டனில் தென்கிழக்குப் பகுதியில் முட்டைக்கோஸ் பட்டாம்பூச்சிகள் எனப்படும் இனத்தைச் சேர்ந்த வண்ணத்துப்பூச்சிகள் இரண்டாம் சார்லஸ் மன்னரின் காலத்தில் அரிய வகையாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 1925ம் ஆண்டில் இந்தப் பட்டாம்பூச்சி வகைகள் அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன் தனித்துவமிக்க முட்டைக்கோஸ் பட்டாம்பூச்சிகள் குறிப்பிட்ட சில இடங்களில் பார்க்கப்பட்டதாக பூச்சியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 100 ஆண்டுகளுக்குப் பின் … Read more

ஒடிசா ரெயில் விபத்து – ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் இரங்கல்

நியூயார்க், மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே கடந்த 2-ந்தேதி இரவு சுமார் 7 மணியளவில் விபத்தில் சிக்கின. இந்த கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்திருப்பதோடு, பலரும் படுகாயம் அடைந்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் … Read more

ஆணாதிக்க தாலிபன்களின் விஷ முகம்! 1-6 வகுப்பு மாணவிகளுக்கு நஞ்சு கொடுத்த பள்ளிகள்

Afghan Girl Students Poisoned: படிப்பதற்கு தண்டனை! ஆப்கானிஸ்தானில் ஒன்று  முதல் ஆறாம் வகுப்பு படிக்கும் 80 பள்ளிச் சிறுமிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது

ஜப்பானில் 3 நாட்களாக பெய்துவரும் கனமழை.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாலைகள்

ஜப்பானில் 3 நாட்களாக பெய்துவரும் கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெப்பமண்டல புயலான மார்வார், நாட்டின் முக்கிய தீவான ஹொன்ஷூவில் கரையை கடந்த நிலையில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன்காரணமாக கிழக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் சுமார் 7 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மத்திய ஜப்பானில் சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், வாகனங்களும் வெள்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டன. இதனிடையே, நாட்டின் மேற்கு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஜப்பான் வானிலை … Read more

ஒடிசா ரயில் விபத்து : போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக போப் பிரான்சிஸ் பிரார்த்தனை மேற்கொண்டார். கடந்த 2ம் தேதி ஒடிசாவில் 2 பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 275 பேர் பலியாகினர். இந்தியாவில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மிக மோசமான விபத்தாக இது பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரயில் விபத்தில் இறந்தவர்களுக்காகவும் அவர்களது குடும்பத்தினருக்காகவும் வாடிகனில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார். Source link

ஷெர்வானி அணிந்து இந்திய மாப்பிள்ளை போல தோற்றமளிக்கும் எலான் மஸ்க்

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட எலான் மஸ்கின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்திய மாப்பிள்ளை போல எலான் மஸ்க் ஷெர்வானி அணிந்துகொண்டு குதிரை மீது அமர்ந்துள்ளது போலவும், நடனமாடுவது போலவும் உள்ள புகைப்படங்களைப் பார்த்த பலர், இது எப்போது என இணையத்தில் விவாதம் நடத்திய நிலையில், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது தெரியவந்தது. மும்பையை சேர்ந்த ரோலிங் கேன்வாஸ் என்ற திருமணப் புகைப்பட கலைஞர், செயற்கை நுண்ணறிவில் மிட்ஜர்னி என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மஸ்கின் புகைப்படங்களை … Read more

உக்ரைன் போரில் 500 குழந்தைகளை ரஷ்யா கொன்றது: ஜெலன்ஸ்கி

கீவ்: உக்ரைன் மீதான போரில் ரஷ்யா குறைந்தது 500 குழந்தைகளைக் கொன்றுள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை பேசுகையில், “உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 16 மாதங்கள் ஆகின்றன. குறைந்தது 500 உக்ரேனிய குழந்தைகளை ரஷ்யா கொன்றது. ரஷ்ய ஆயுதங்கள் மற்றும் வெறுப்பு, ஒவ்வொரு நாளும் உக்ரேனிய குழந்தைகளின் உயிரைப் பறித்து அழித்துக் கொண்டே இருக்கிறது. பிப்ரவரி 24, 2022 அன்று ரஷ்யா உக்ரைனின் மீது … Read more