நடுவானில் விமானத்தின் அவசர கால கதவை திறந்து காத்து வாங்கிய பயணி….!

194 பயணிகளுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த ஆசியானா ஏர்லைன்ஸ் விமானத்தின் அவசரகாலக் கதவை பயணி ஒருவர் திடீரெனத் திறந்ததால், பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். தென் கொரியாவில் ஜேஜூ என்ற தீவில் இருந்து அந்த விமானம் டாயேஜூ என்ற நகருக்கு பறந்துக் கொண்டிருந்தது. ஒருமணி நேரப்பயணத்திற்குப் பின் தரையிறங்குவதற்காக 700 அடி உயரத்தில் விமானம் பறந்துக் கொண்டிருந்தபோது பயணி கதவைத் திறந்துவிட்டார். இதையடுத்து அவரை விமான நிலையத்தில் பாதுகாப்புப் பிரிவினர் கைது செய்தனர்.விமானத்தில் பயணிகள் எடுத்த … Read more

Foreign diplomats inspecting the construction work of a Hindu temple | ஹிந்து கோவில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த வெளிநாட்டு தூதர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் நிறுவப்பட உள்ள முதல் ஹிந்து கோவிலின் கட்டுமானப் பணிகளை, 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டு துாதர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். கலைநயம் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில், சுவாமி நாராயணன் கோவிலுக்கான கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஏறத்தாழ 55 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் இக்கோவிலில், கலைநயத்துடன் கூடிய சிற்ப வேலைபாடுகள் … Read more

சீனாவில் புதிய கரோனா அலை தீவிரம் – வாரத்துக்கு 6.5 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை

பெய்ஜிங்: கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் பகுதியில் கரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அங்கிருந்து 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது கரோனா வைரஸ் பரவல் குறைந்திருப்பதால் சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு நீக்கியிருக்கிறது. எனினும் கரோனா பெருந்தொற்று முழுமையாக ஓயவில்லை. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் முன்னாள் விஞ்ஞானி சவுமியா … Read more

ஜப்பானின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சிபா மாகாணத்தில் இருந்து 50 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆகப் பதிவானது. இதன் தாக்கம் தலைநகர் டோக்கியோவில் கடுமையாக உணரப்பட்டதன் காரணமாக கட்டடங்கள் குலுங்கின. இதையடுத்து ரயில் சேவைகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. மேலும், டோக்கியோவுக்கான சர்வதேச நுழைவாயிலான நரிட்டா விமான நிலையத்தில் ஓடுபாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் சுனாமி … Read more

விமானம் தரையிறங்கும் போது அவசரகால கதவை திறந்த பயணி.. கைது செய்த போலீசார்..!

தென்கொரியாவில் ஏசியானா ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் நேரத்தில், விமானத்தின் அவசர கால கதவை திறந்துவிட்ட பயணியை போலீசார் கைது செய்தனர். ஜேஜு தீவில் இருந்து 194 பயணிகளுடன் புறப்பட்ட விமானம், டேகு சர்வதேச விமான நிலையத்தை தரையிறங்கிய போது, அதிலிருந்த ஒரு நபர் திடீரென கதவை திறந்துவிட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர். எனினும், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால் பயணிகள் அனைவரும் உயிர்தப்பினர். விமானம் தரையிறங்கியவுடன் விமானத்தின் கதவை திறந்த 30 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், விமானம் … Read more

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

டோக்கியோ, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள ஒசாகா மாகாணத்தில் தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் ஏர் பேக் இன்ஃப்லேட்டர் தயாரிப்பு தொழிற்சாலையை 83 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டைசல் நிறுவனத்தின் இயக்குனர் கென் … Read more

மனித மூளையில் சிப் பொருத்தி பரிசோதிக்கும் முறைக்கு அமெரிக்காவின் FDA அனுமதி

மனித மூளையில் சிப் பொருத்தி சோதனை செய்யும் முறைக்கு அமெரிக்காவின் FDA அமைப்பின் அனுமதி கிடைத்துள்ளதாக எலன் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம் அறிவித்துள்ளது. மூளையில் சிப் பொருத்துவதன் மூலம் ஆட்டிஸிம், உடல் பருமன், மன அழுத்தம், மனக்கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தலாம் என கடந்த ஆண்டு எலன் மஸ்க் தெரிவித்திருந்தார். மிகவும் பாதுகாப்பான முறையில் சிப் பொருத்தப்படும் என்றும், தனது குழந்தைகளுக்கு கூட அதனை பொருத்தலாம் எனவும் அவர் கூறியிருந்தார். இந்த பரிசோதனை தொடர்பாக FDA எனப்படும் உணவு … Read more

ஜப்பானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

டோக்கியோ, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று மதியம் 3.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் சுமார் 6.1 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை தினத்தந்தி Related Tags : நிலநடுக்கம் 

திருடி விடுவார்களோ என அச்சம்.. பல ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 230 பழமையான கார்கள் ஏலம்..!

வெளி உலகிற்கு தெரியாமல், பல ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 230 பழமையான கார்கள் நெதர்லாந்தில் ஏலம் விடப்பட்டுள்ளன. பழமையான கார்களை சேகரிப்பதை வாடிக்கையாகக் கொண்ட பால்மென், அவற்றை யாரேனும் திருடி விடுவார்களே என்ற அச்சத்தில், எங்கேயும் எடுத்து செல்லாமல் குடோனில் ரகசியமாக மறைத்து வைத்துள்ளார். அதனால், கார்கள் பழுதாகிவிடக்கூடாது என்பதற்காக கார் எஞ்சினை முறையாக ஸ்டார்ட் செய்துவந்துள்ளார். வயதாகி நோய்வாய்பட்டதாலும், வாரிசுகள் இல்லாததாலும் அவற்றை கார் டீலர் ஒருவரிடம் அண்மையில் பால்மென் விற்றுவிட்டார். தற்போது அந்த கார்கள் … Read more

விமானத்தின் அவசரகால கதவை திறந்த நபர் – சக பயணிகளுக்கு திடீர் மூச்சு திணறல்

சியோல், தென் கொரியாவின் ஜேஜூ விமான நிலையத்திலிருந்து 194 பயணிகளுடன் இன்று தேயாகு விமான நிலையம் வந்தடைந்த ஏசியானா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ321-200 ரக விமானம் தரை இறங்க தயாராகி கொண்டிருந்தது. தரையில் இருந்து சுமார் 200மீ உயரத்தில் விமானம் இருந்தபோது, அவசரகால வெளியேற்ற கதவின் அருகே அமர்ந்திருந்த ௩௦ வயது மதிக்கத்தக்க நபர் கதவை திறந்துள்ளார். இதனால் விமானத்தின் உள்ளே அமர்ந்திருந்த பயணிகள் பதற்றம் அடைந்தனர். பலருக்கு மூச்சு திடீரென திணறல் ஏற்பட்டது. பிறகு … Read more