உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 6-வது ஆண்டாக ஃபின்லாந்து முதலிடம்..!

உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 6-வது ஆண்டாக ஃபின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து, இஸ்ரேல், நெதர்லாந்து, சுவீடன், நார்வே, சுவிட்சர்லாந்து நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. முதல் 20 நாடுகள் பட்டியலில் லிதுவேனியா மட்டும் புதிதாக இடம்பிடித்துள்ளது. இப்பட்டியலில் இந்தியா 136-வது இடத்தில் உள்ளது. ஒரு நாட்டின் மகிழ்ச்சி, சமூக ஆதரவு, வருமானம், சுகாதாரம், சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் ஊழல் இல்லாமை ஆகியவற்றைக்கொண்டு அளவிடப்படுகிறது. மகிழ்ச்சியற்ற நாடுகள் பட்டியலில் போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் … Read more

ரஷ்யா சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு உற்சாக வரவேற்பு | Chinese President Xi Jinping, who visited Russia, received an enthusiastic welcome

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: மூன்று நாள் சுற்றுப் பயணமாக, ரஷ்யா சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த துவங்கி, ஓராண்டு மேலாக ஆகியுள்ளது. இந்நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாள் சுற்றுப் பயணமாக இன்று (மார்ச் 20) ரஷ்யா சென்றார். மாஸ்கோவில் உள்ள விமான நிலையத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தலைநகர் மாஸ்கோவில் … Read more

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று இந்தியா வருகை..!

டோக்கியோ, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, அரசு முறை பயணமாக இன்று (திங்கட்கிழமை) இந்தியா வருகை தரவுள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வரும் ஜப்பான் பிரதமர், இந்த பயணத்தின் போது பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு பரஸ்பரம், ஒத்துழைப்பு, வர்த்தகம் உள்ளிட்ட இரு நாட்டுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. குறிப்பாக இந்தோ – பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பாக முக்கியம் திட்டம் அறிவிக்கப்படலாம் … Read more

ரஷ்யாவில் ஜி ஜின்பிங்… உக்ரைனில் அமைதி ஏற்படுமா… அல்லது புடின் கரம் வலுவடையுமா!

Xi Jinping in Russia: சீன அதிபர் ஜி ஜின்பிங் திங்கள்கிழமை ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தார். அவர் உக்ரைன் போரில் சமாதானத்தை ஏற்படுத்த முயல கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், மேற்கத்திய  நாடுகளுக்கு அழுத்தத்திற்கு பதிலளிக்கும் வகையில் சீன தனக்கு ஆதரவு தர வேண்டும் எதிர்பார்க்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட பிறகு, புதினுடன் கைகுலுக்கிய முதல் உலகத் தலைவர் ஜின்பிங் ஆவார். உக்ரைன் … Read more

கலிபோர்னியாவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமான தாஹோவில் கடும் பனிப்பொழிவு..!

கலிபோர்னியாவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமான தாஹோவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களான கலிபோர்னியாவில் அசாதரணமான வானிலை நிலவும் நிலையில், தாஹோவில் சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் சுமார் 8 அடி அளவுக்கு பனி படர்ந்துள்ளது. சில பகுதிகளில் பனி உறைந்து பனிக்கட்டிகளாக மாறியுள்ளது. வழக்கமாக தாஹோவில் பிப்ரவரி மாதத்தோடு பனிப்பொழிவு நிறைவடையும் நிலையில், தற்போது மார்ச் மாதத்தில் பனிப்பொழிவை காண்பது மகிழ்ச்சி அளிப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கலிபோர்னியாவின் ஒரு பகுதி மழையால் பாதிக்கப்பட்டுள்ள … Read more

அமெரிக்காவில் இந்திய தூதரகம் மீதும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குல்| Khalistan supporters also attacked the US embassy

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சான்பிரான்சிஸ்கோ: பிரிட்டன் தலைநகர் லண்டனை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திலும் காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் வாளுடன் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. காலிஸ்தான்’ என்ற பெயரில், சீக்கியர்களுக்கு தனி நாடு கேட்டு போராட்டங்கள் நடத்திய, காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் மதத் தீவிரவாத பிரசாரகர் அம்ரித்பால் சிங்கை, 30, கைது செய்ய, பஞ்சாப் போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் இந்திய தூதரக அலுவலகம் … Read more

காங்கோ: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் பலி

கின்ஷாசா: மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. அதேவேளை காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும் பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவங்களில் பலர் உயிரிழந்து வருகின்றனர். பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் காங்கோ பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காங்கோவின் கிழக்கு இடுரி மற்றும் வடக்கு கிவு மாகாணங்களில் நேற்று பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65.54 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 கோடியே 24 லட்சத்து 69 ஆயிரத்து 926 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 2 லட்சத்து 38 ஆயிரத்து 821 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து … Read more

சீன நெட்டிசன்களால் புகழப்படும் பிரதமர் மோடி..!

பீஜிங், இந்தியா-சீனா இடையே கிழக்கு லடாக்கில் 3 ஆண்டுகளாக எல்லை தகராறு நீடித்து வந்த போதிலும், சீனாவை சேர்ந்த சமூகவலைத்தள பயனர்களான ‘நெட்டிசன்’களால் பிரதமர் மோடி புகழப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ‘தி டிப்ளோமட்’ என்ற பத்திரிகையில் மு சுன்ஷான் என்ற பத்திரிகையாளர் எழுதிய ‘சீனாவில் இந்தியா எப்படி பார்க்கப்படுகிறது?’ என்ற கட்டுரையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மு சுன்ஷான், சீன சமூக வலைத்தளங்களை ஆய்வு செய்து பிரபலமானவர். சீனாவில் டுவிட்டரை போன்ற ‘சினா வெய்போ’ … Read more

உரைக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த மரியுபோலில் ரஷ்ய அதிபர் புதின்… – நடந்தது என்ன?

கீவ்: உக்ரைனிடமிருந்து ரஷ்யா ஆக்கிரமித்த மரியுபோல் பகுதியை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பார்வையிட்டது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மரியுபோல் சென்ற புதின் அங்கு என்ன செய்தார் என்ற கேள்விகள் வலம் வந்து கொண்டிருந்தன. இதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் உக்ரைன் மீதான ரஷ்ய போரில் மரியுபோல் உள்ளிட்ட சில பகுதிகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. இந்த நிலையில் மரியுபோல் பகுதிக்கு சனிக்கிழமை இரவு, புதின் … Read more