இஸ்லாமிய சகோதரத்துவம் என்ற அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ரகசிய சமூகம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு: ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு

லண்டன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நாடு தழுவிய பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கி, தென்மாநிலங்கள், வடமாநிலங்களை கடந்து ஜம்மு மற்றும் காஷ்மீர் வரையில் அவரது பயணம் அமைந்தது. காங்கிரசின் இந்த பாதயாத்திரை கடந்த ஜனவரி இறுதியில் நிறைவடைந்தது. இந்நிலையில், ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்நிலையில், கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் அவர் பேசும்போது இந்திய ஜனநாயகம் … Read more

“எந்த நேரத்திலும் தயார்” – அமெரிக்கா, தென் கொரியாவுக்கு கிம்மின் சகோதரி எச்சரிக்கை

சியோல்: அமெரிக்கா மற்றும் தென் கொரியாவிற்கு எதிராக பெரிய அளவிலான நடவடிக்கையை எடுக்கத் தயாராக இருப்பதாக கிம்மின் சகோதரி எச்சரித்துள்ளார். கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா – தென்கொரிய படைகள் கடந்த சில நாட்களாக ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டன. மேலும், இம்மாத இறுதியில் இரு நாடுகளும் மிகப் பெரிய அளவிலான ராணுவ பயிற்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன. இந்த நிலையில், கிம்மின் சகோதரி அமெரிக்கா, தென் கொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து கிம் … Read more

இந்தியாவில் தேடப்பட்டு வந்த 4 ஐ.எஸ். கொரசான் கமாண்டர்கள் சுட்டுக் கொலை..!

இந்தியாவில் தேடப்படும் 4 ஐ.எஸ். கொரசான் பயங்கரவாத அமைப்பின் கமாண்டர்கள், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் கடந்த ஒரு மாதத்தில் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தெற்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியா நாடுகளில் செயல்படும் அந்த அமைப்பின் கமாண்டர்களாக செயல்பட்ட அவர்கள் பயங்கரவாத செயல், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆட்களை சேர்த்தது தொடர்பாக இந்தியாவில் பாதுகாப்புப் படையினரால் தேடப்பட்டு வந்தனர். அவர்கள் 4 பேரையும் தாங்களே கொன்றதாக சிந்துதேஷ் புரட்சிகர ராணுவம் என்ற அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாகவும் … Read more

அமெரிக்கா: நடுவானில் விமான ஊழியரை தாக்கி, அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்

வாஷிங்டன், அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து போஸ்டன் நோக்கி யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த விமானம் நடுவானில் பறந்து சென்று கொண்டிருந்தது. விமானம் தரையிறங்க 45 நிமிடங்களுக்கு முன்னர், முதல் வகுப்பு பகுதியை ஒட்டிய அவசரகால கதவு திறந்திருக்கிறது என விமானிக்கு தகவல் சென்றது. இதனை தொடர்ந்து, விமான ஊழியர் அந்த பகுதியை ஆய்வு செய்ய சென்றார். அப்போது, சந்தேகத்திற்குரிய 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் விமான ஊழியருடன் வாக்குவாதத்தில் … Read more

அமெரிக்கத் துறைமுகங்களில் பயன்படுத்தப்படும் சீன கிரேன்களில் உளவுக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம்..!

அமெரிக்கத் துறைமுகங்களில் பயன்படுத்தப்படும் சீன கிரேன்களில் உளவுக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் ராணுவத் தலைமையகமான பென்டகன் அதிகாரி ஒருவர், அமெரிக்காவின் பெரும்பாலான துறைமுகங்களில் சீனாவின் ZPMC நிறுவனத்தின் கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். ட்ரோஜன் ஹார்ஸ் என்று அழைக்கப்படும் இந்த பிரமாண்ட கிரேன்கள் பலவும் சென்சார்கள் மூலம் இயங்குவதால் இதன் மூலம் அமெரிக்கத் துறைமுகங்கள், அங்கு கையாளப்படும் பொருட்கள் குறித்த விபரம் சீனாவால் கண்காணிக்கப்படலாம் என அச்சம் தெரிவித்தார்.  … Read more

அகதிகள் முகாமில் தீ: 2,000 வீடுகள் சாம்பல்| Fire in refugee camp: 2,000 houses in ashes

டாக்கா, நம் அண்டை நாடான வங்கதேசத்தில் ரோஹிங்கியா அகதிகள் முகாமில்ஏற்பட்ட தீ விபத்தில், 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் கருகியதால், ஆயிரக்கணக்கானோர் வீடின்றி திறந்தவெளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மியான்மரில் இருந்து, 2017ல் வங்கதேசத்துக்கு அகதிகளாக வந்த ரோஹிங்கியா சமூகத்தினர், இங்குள்ள காக்ஸ் பஜார் பகுதியில் மிகப்பெரிய முகாம் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். இங்கு, ஓலை மற்றும் மூங்கில்களால் அமைக்கப்பட்ட குடிசைகளில் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் தங்கியிருந்தனர். இந்நிலையில், இங்கிருந்த குடிசை ஒன்றில் நேற்று முன்தினம் இரவு தீ விபத்து … Read more

ஈரானில் மாணவிகளுக்கு விஷம் | குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்: அயத்துல்லா அலிகாமெனி

தெஹ்ரான்: பள்ளி மாணவிகளுக்கு விஷம் வைத்த விவகாரம் மன்னிக்க முடியாதது என தெரிவித்துள்ள ஈரான் மத தலைவர் அயத்துல்லா அலிகாமெனி, வேண்டுமென்றே விஷம் வைக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கோம் பகுதியில் பள்ளி செல்லும் மாணவிகளுக்கு கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது. வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்வற்றால் பாதிக்கப்பட்ட மாணவிகளில் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று … Read more

இந்தியா-ரஷ்யா வர்த்தக ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை.. இரு தரப்பும் இணைந்து செயல்படுவதாக அறிக்கை..!

இந்தியா-ரஷ்யா இடையிலான வர்த்தகத்தில் உள்ள பற்றாக்குறை மற்றும் ஒத்துழைப்பு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் ரஷ்ய துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் ஆலோசனை நடத்தினார். இந்தியா-ரஷ்யா அரசுகளுக்கிடையேயான வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் கலாச்சார ஒத்துழைப்புக்கான ஆணையத்தின் மெய்நிகர் கூட்டத்தில் இருவரும் பங்கேற்றனர். இந்தியா-ரஷ்யா இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளின் முழு திறனையும் திறக்க, வர்த்தக பற்றாக்குறை மற்றும் சந்தை அணுகல் சிக்கல்களை நிவர்த்தி செய்வதன் மூலம் இருதரப்பும் இணைந்து செயல்பட ஒப்புக்கொள்வதாக … Read more

பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: 9 போலீசார் பலி| Suicide Squad Attack in Pakistan: 9 Police Killed

கராச்சி : பாகிஸ்தானில் தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் ஒன்பது போலீசார் பலியாகினர். 13 பேர் படுகாயம் அடைந்தனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள காம்ப்ரி பாலம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக, 20க்கும் மேற்பட்ட போலீசார் வாகனத்தில் சென்றனர். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நபர், தான் உடலில் மறைத்து வைத்திருந்த சக்திவாய்ந்த குண்டை வெடிக்க செய்தார். பயங்கர சத்தத்துடன் வெடித்ததில், வாகனத்தில் வந்த போலீசார் உடல் சிதறி … Read more

பெரும் பின்னடைவில் சீன பொருளாதாரம் – 50 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவு என தகவல்

பெய்ஜிங்: கடந்த 1970-ம் ஆண்டுக்குப் பின் 2022-ம் ஆண்டு சீன பொருளாதாரத்திற்கு இரண்டாவது மோசமான ஆண்டாக இருந்தாக தகவல் வெளியாகியுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சிசிபி) உயர்மட்ட அரசியல் தலைவர்களின் கூட்டம் மார்ச் 4ம் தேதி தொடங்கியது. இரண்டு அமர்வுகளாக நடக்கும் இந்த கூட்டம் இரண்டு வாரங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், சீன அரசு 2023ம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபி இலக்கை கடந்த ஆண்டுகளை விட குறைவாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில் ராணுவ … Read more