குழந்தையின் உடல் உறுப்புகளை திருடிய மருத்துவமனை; தாயின் 48 ஆண்டு கால பாசப்போராட்டம்.!

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஒரு தாய் தனது இறந்த குழந்தையின் உடல் உறுப்புகளுக்கு என்ன ஆனது என்பதைக் கண்டறிய நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக போராடி வந்த நிலையில், தனது மகனின் எச்சங்களை குழந்தை இறந்து 48 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றதால், இறுதியாக இந்த வழக்கு மூடப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கை இன்று தெரிவித்துள்ளது. ஸ்காட்லாந்தின் எடின்பரோவைச் சேர்ந்த 74 வயதான லிடியா ரீட், கடந்த 1975 இல் தனது இறந்து பிறந்த தனது மகன் அவரது சவப்பெட்டியில் மனித எச்சங்கள் … Read more

ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு… அதிபரை பிடிக்க அரெஸ்ட் வாரண்ட் – சர்வதேச நீதிமன்றம் உத்தரவு!

Arrest Warrant Against Putin: நெதர்லாந்தில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ரஷ்யாவிற்கு  சட்டவிரோதமாக குழந்தைகள் உள்பட அனைத்து மக்களையும் நாடுகடத்திய போர்க்குற்றத்திற்காக புதின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு எதிராக உக்ரைனில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்காக பிடிவாரண்ட்டை பிறப்பித்தது. கூடுதலாக, இதேபோன்ற குற்றச்சாட்டில் ரஷ்யாவின் குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையர் மரியா அலெக்ஸீவ்னா லவோவா-பெலோவாவுக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் … Read more

சூடு பிடிக்கும் உக்ரைன் விவகாரம்; ரஷ்யா செல்லும் சீன அதிபர்.!

உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் பயணம் செய்த நிலையில், சீன அதிபர் ஜின்பிங் அடுத்த வாரம் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருடம் முடிந்து விட்டது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தரும் ஆயுத உதவியால் இந்த போர் நீண்டு கொண்டே செல்கிறது. பரம எதிரிகயான ரஷ்யாவிற்கு செக் வைக்க, உக்ரைனில் அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகளை நிலைநிறுத்தும் முயற்சிகளை மேற்கொண்டதால், ரஷ்யா இந்த போரை தொடங்கியது. இது ஒரு … Read more

கோதுமை இன்றி தவிக்கும் மக்கள்! மறுபுறம் பதுக்கி வைக்கும் பாகிஸ்தான் அதிகாரிகள்!

பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசமாகி வருகிறது. இங்கு பெட்ரோல் டீசல் முதல் மாவு பருப்பு வரை விலை விண்ணை தொடுகிறது. இருந்த போதிலும், பாகிஸ்தான் அதிகாரிகள் தங்கள் ஊழல் பழக்கத்தை கைவிடவில்லை. இந்த அதிகாரிகள் மீது குடோன்களில் வைக்கப்பட்டிருந்த 40,000 டன் கோதுமையை திருடியதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. லட்சக்கணக்கான பாகிஸ்தானிய ஏழைகளின் பசியை தீர்க்கக்கூடிய இந்த கோதுமை, அந்த கோதுமை அனைத்தும் நாட்டின் ஊழல்வாதிகளால் திருடப்பட்டது. இதன் காரணமாக, தற்போது இந்த 67 அதிகாரிகள் மீது நடவடிக்கை … Read more

சவூதி அரேபியாவில் வறண்ட பாலைவனத்தில் ஒட்டகப் பந்தயம்.. வெற்றி பெற்ற ஒட்டகங்களுக்கு சுமார் 21 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு..!

வடமேற்கு சவூதி அரேபியாவின், அல் உலா நகரில் உள்ள வறண்ட பாலைவனத்தில் ஒட்டகப் பந்தயம் நடைபெற்றது. மார்ச் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒட்டக உரிமையாளர்களும், வளர்ப்பாளர்களும் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற ஒட்டகங்களுக்கு சுமார் 21 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை வழங்கப்பட்டன. ஒட்டகப் பந்தயத்தை தவிர்த்து, அல் உலா நகரின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமான கலச்சார நிகழ்வுகள் மற்றும் … Read more

உக்ரைன் போருக்கு மத்தியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யா பயணம்

மாஸ்கோ, சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாள் பயணமாக வரும் திங்கள்கிழமை ரஷ்யா செல்கிறார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யிங், ”ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் அழைப்பை ஏற்று அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யா செல்ல உள்ளார். வரும் 20-ம் தேதி ரஷ்யா செல்லும் அதிபர், வரும் … Read more

கம்போடியாவிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்ட 900 ஆண்டுகள் தொன்மைவாய்ந்த முருகப்பெருமானின் சிலை மீட்பு..!

கம்போடியாவிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்ட 900 ஆண்டுகள் தொன்மைவாய்ந்த முருகப்பெருமானின் சிலை மீட்கப்பட்டு கம்போடியாவிற்கே திருப்பி கொண்டுவரப்பட்டுள்ளது. 1960-களில் நடைபெற்ற உள்நாட்டு போரின்போது, பல புராதன சிலைகள் திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டன. கம்போடிய அரசின் நடவடிக்கையால், அமெரிக்காவிலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் ஏராளமான சிலைகள் மீட்கப்பட்டு, பிரதமர் அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பத்தாம் நூற்றாண்டில், மயில் மேல் வீற்றிருப்பதுபோல், வடிக்கப்பட்ட போர் கடவுள் முருகனின் சிலை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. Source link

உக்ரைனில் குடியிருப்பு கட்டிடங்கள் மீது ரஷியா குண்டு வீசி தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு, 7 பேர் படுகாயம்

கீவ், உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. இதற்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் நிலையில், இருதரப்பிலும் ஏராளமான உயிர் சேதங்கள் ஏற்பட்ட்டுள்ளன. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் வழங்கி வருகின்றன. இதனிடையே உக்ரைனின் உள்கட்டமைப்பை தகர்க்கும் நோக்கில் ரஷியா தொடர்ந்து தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் … Read more

கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 2 வயது குழந்தை மீட்பு..!

பெருவில், கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 2 வயது குழந்தை மீட்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. யாகு புயல் காரணமாக பெய்த கனமழையால் ஜிமர்கா நகரில் மண்சரிவு ஏற்பட்ட நிலையில், அதில் காஸ்டிலோ என்பவர் தனது குழந்தையுடன் சிக்கிக் கொண்டார். சேறும் சகதியும் அடித்து வரப்பட்டதில் குழந்தையை காப்பாற்ற முடியாமல் காஸ்டிலோ திணறிய போது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபர், சேற்றில் இருந்து இழுத்து குழந்தையை காப்பாற்றினார். இதில் காயமடைந்த தந்தை, மகன் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், … Read more

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேர் விடுதலை

கொழும்பு, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நாகை, மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறைபிடித்து சென்றது. அவர்கள் சென்ற படகு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 12 பேரும் கைதுசெய்யப்பட்டனர். இதனால், அவர்களது உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இந்த நிலையில், இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் 12 பேரையும் விடுதலை செய்துள்ளது. விடுதலை செய்யப்பட்டுள்ள … Read more