பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 கோர விபத்து: பேருந்து தீப்பிடித்ததில் 41 பேர் உயிரிழப்பு, படகு விபத்தில் 10 சிறுவர்கள் மூழ்கினர்

கராச்சி: பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரிலிருந்து சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சிக்கு 43 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஒன்று லாஸ்பேலா மாவட்டத்தில் உள்ள பெல்லா நகரில் மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. பள்ளத்தில் விழுந்த பேருந்து தீப்பற்றி எரிந்தது. இதனால், பேருந்தின் உள்ளே இருந்த பயணிகளில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து பெலாநகர் காவல் துறை உதவி ஆணையர் ஹம்சா நதீம் கூறுகையில், “பெண்கள், குழந்தைகள் உட்பட 40 உடல்கள் … Read more

பெருவில் சுற்றுலா பஸ் மலையில் இருந்து உருண்டு விழுந்து விபத்து: 25 பேர் உயிரிழப்பு

லிமா, தென்அமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லிமாவில் இருந்து அந்த நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா நகரமான டம்ப்ஸ் நகருக்கு சுற்றுலா பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் ஆர்கனோஸ் நகரில் உள்ள மலைப்பாங்கான சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிக்கெட்டு ஓடிய பஸ் மலையில் இருந்து உருண்டு கீழே விழுந்தது. இதில் பஸ் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் … Read more

பாக்.,கில் பஸ் கவிழ்ந்து விபத்து; தீப்பிடித்து எரிந்ததில் 42 பேர் பலி | Pak., Kill bus overturned accident; 42 people died in the fire

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அதி வேகமாகச் சென்ற பஸ், பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்ததில், அதில் பயணித்த 42 பேர் உடல் கருகி பலியாகினர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில், 48 பயணியருடன், குவெட்டாவில் இருந்து கராச்சி நோக்கி, பஸ் ஒன்று நேற்று சென்றது. பலுசிஸ்தான் மாகாணத்தின் லாஸ்பெலா பகுதியில் வளைவு ஒன்றில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த பஸ், பாலத்தில் இருந்த துாண் மீது மோதிய பின், பள்ளத்தில் கவிழ்ந்தது. இதையடுத்து அந்த பஸ் தீப்பற்றி எரிந்தது; அதில் … Read more

இளவரசி டயானாவின் ஆடை ரூ. 5 கோடிக்கு விற்பனை | Princess Dianas dress cost Rs. 5 crore for sale

நியூயார்க் : ஐரோப்பிய நாடான பிரிட்டனின் இளவரசி, மறைந்த டயானாவின் ஆடை, அமெரிக்காவில் நடந்த ஏலத்தில், 5 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த பிரபல ஏல நிறுவனமான சாத்பைஸ், தங்களிடம் உள்ள பொருட்களை சமீபத்தில் ஏலத்தில் விற்பனை செய்தது.அப்போது, 1997ல் கார் விபத்தில் பலியான, பிரிட்டன் இளவரசி டயானாவின் ஆடைகள் ஏலத்தில் விடப்பட்டன. இதில், இவர் பயன்படுத்திய கவுன் 4.9 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. ஏலத்தில் எடுத்தவரின் பெயர் வெளியிடப்படவில்லை. … Read more

வரி ஏய்ப்பு: பிரிட்டன் மந்திரி பதவி பறிப்பு| Tax evasion: British minister sacked

லண்டன்: வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிக்கிய பிரிட்டன் அமைச்சரும், பழமைவாத கட்சியின் தலைவருமான நதிம் ஸஹாவியை பதவி நீக்கம் செய்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் நேற்று உத்தரவிட்டார். ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் அமைச்சரவையில், இலாகா இல்லாத அமைச்சராக பதவி வகிப்பவர் நதிம் ஸஹாவி. மேற்காசிய நாடான ஈராக்கில் பிறந்த நதிம், ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இவர் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அமைச்சராக பதவி … Read more

பாகிஸ்தானில் இந்து சிறுபான்மையினர் வீடுகள் இடிப்பு – 100 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்..!

பாகிஸ்தானில் சிறுபான்மையினர்களின் வீடுகள் இடிக்கப்பட்டு அவர்கள் துரத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ராவல்பிண்டி கண்டோன்மென்ட் நகரில் சுமார் 70 ஆண்டுகளாக வசித்து வரும் இந்து, கிறிஸ்தவ மற்றும் ஷியா பிரிவினரின் 5 வீடுகளை சுமார் 100 பேர் கொண்ட கும்பல் இடித்து விட்டு வீடுகளிலிருந்த பொருட்களை தெருவில் வீசியதோடு, அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தானில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித்து நீதிமன்றங்கள் கூட மவுனம் காப்பதாக சிறுபான்மையினர் கவலை தெரிவித்துள்ளனர்.  Source link

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாக். அரசு.. பெட்ரோல், டீசல் விலை ரூ.35 அதிகரிப்பு..!

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு 35 பாகிஸ்தானி ரூபாய் அளவிற்கு உயர்த்தியுள்ளது. தற்போது பெட்ரோல் 250 பாகிஸ்தானி ரூபாயாகவும், ஹை ஸ்பீட் டீசல் 263 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 262 ரூபாய் என வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. அந்நிய செலவாணி 3 புள்ளி 7 பில்லியன் டாலராக குறைந்து, பாகிஸ்தான் அரசு திவாலாகும் நிலையில் உள்ளதால், IMF-ன் உடனடி நிதி … Read more

இந்த நாட்டு மக்கள் இன்னும் 2015 இல் தான் இருக்காங்க..அது எப்படி?

கிரிகோரியன் நாள்காட்டி: கிரெகொரியின் நாட்காட்டி என்பது உலக அளவில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, பயன்படுத்தப்படும் நாட்காட்டியாகும். இந்த நாட்காட்டி மேற்கத்திய நாட்காட்டி எனவும் கிறித்துவ நாட்காட்டி எனவும் வழங்கப்பெறுகிறது. இந்த நாட்காட்டி பன்னாட்டுத் அஞ்சல் ஒன்றியம், ஐக்கிய நாடுகள் போன்றவற்றினால் அங்கீகரிப்பட்டுள்ளது. இன்று உலகில் பரவலாகப் பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியான இது கிமு 45-இல் உரோமைப் பேரரசர் யூலியசு சீசரால் உருவாக்கப்பட்ட யூலியன் நாட்காட்டியின் ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும். இத்தாலியரான அலோயிசியசு இலிலியசு என்ற மருத்துவரால் முன்வைக்கப்பட்டது. … Read more

நியூசிலாந்தில் வெள்ளம்: 3 பேர் பலி; ஆக்லாந்து நகரில் அவசரநிலை பிரகடனம்

அக்லாந்து: நியூசிலாந்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. “கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஆக்லாந்து நகரில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். வெள்ளம் காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். ஒருவர் மாயமாகியுள்ளார். அக்லாந்து விமான நிலையத்தில் வெள்ள … Read more

திவாலாகும் நிலையில் பாகிஸ்தான்; பெட்ரோல் லிட்டருக்கு 35 ரூபாய் உயர்வு.!

பணவீக்கம் அதிகரிப்பு, அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி, வெள்ளம் ஆகியவை பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, பாகிஸ்தானின் எரிசக்தி துறையின் கடன் சுமை தாங்கமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அந்த நாட்டின் அன்றாட வாழ்கை முறையை புரட்டிப்போட்டுள்ளது. பாகிஸ்தான் மின்சார துறையின் கடன் கடந்தாண்டு செப்டம்பர் நிலவரப்படி ரூ.2.253 லட்சம் கோடியாக (பாக். மதிப்பில்) இருந்தது. இது, தற்போது ரூ.2.437 லட்சம் கோடியாக கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தான் மக்கள் மின்சார பயன்பாட்டை வெகுவாக குறைத்துக் … Read more