Rewind 2022 | மனித உரிமை மீறல்களும், எழுச்சிப் போராட்டங்களும் – ஓர் உலகளாவிய பார்வை

வளர்ச்சியை நோக்கி மனித இனம் எவ்வளவு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறதோ, அதே வேகத்தில் நாகரிகத்தைப் பின்னோக்கி இழுக்கும் மனித உரிமை மீறல்களும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. உலக அளவில் 2022-ஆம் ஆண்டில் நடந்த மனித உரிமை மீறல்களையும், மக்களின் எழுச்சிப் போராட்டங்களையும் ஒரு விரைவுப் பார்வையாக நோக்குவோம். உக்ரைன் – ரஷ்யா போர்: வருடத்தின் தொடக்க நிகழ்வாக அமைந்த உக்ரைன் – ரஷ்யா போர், வருடம் முழுவதும் தொடர்ந்தது. ஆம், ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு … Read more

கனடாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒவ்வொரு வீடாக புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் – 5 பேர் பரிதாபமாக பலி

கனடாவின், டொரண்டோ நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில், ஒவ்வொரு வீடாக புகுந்து மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்த போலீசார், அந்த நபரை சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர். அங்கு, உயிருக்கு போராடிக்கொண்டிருந்த குடியிருப்புவாசி ஒருவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். தாக்குதலுக்கான நோக்கம் குறித்து போலீசார் ஆராய்ந்துவருகின்றனர். கனடாவில், கைத்துப்பாக்கிகள் விற்பனைக்குத்தடை விதிக்கப்பட்டு, 2 ஆண்டுகள் நிறைவடைந்தபோதும், அங்கு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அண்மை காலமாக அதிகரித்துள்ளன. Source link

நான் டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டுமா?: கருத்துக்கணிப்பை தொடங்கிய எலான் மஸ்க்

வாஷிங்டன், டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், தனது சமீபத்திய டுவிட்டில் ‘டுவிட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார். மேலும், கருத்துக் கணிப்பு முடிவைக் கடைப்பிடிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். முன்னதாக, டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்ற விரும்பவில்லை என்று மஸ்க் கூறியிருந்தார். அந்த வேலைக்கு வேறு ஒருவரைக் நியமிப்பேன் என்று சூசகமாகத் தெரிவித்திருந்தார். சமீபத்தில் அவரது செயல்பாடுகள் திருப்திகரமானதாக இல்லாததால், கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். … Read more

தலைமை பொறுப்பிலிருந்து விலக கோரி எலான் மஸ்கிற்கு நெருக்கடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்து எலான் மஸ்க் விலக வேண்டும் என டுவிட்டர் பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருகின்றன. உலகின் சில முக்கியமான செய்தியாளர்களின் கணக்குகளை கடந்த வியாழக்கிழமை முடக்கினார் எலான் மஸ்க். பிற சமூக வலைதளங்களின் பதிவுகளை டுவிட்டரில் விளம்பரப்படுத்தும் நோக்கில் மறு பதிவு செய்வதற்கு எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்து … Read more

கடலில் மிதக்கும் நகரம்; ராட்சஸ கடல்மீன் வடிவில் 7000 பேர் வசிக்க கூடிய அதிசய நகரம்!

மிதக்கும் நகரம்: உலக மக்கள் தொகை 8 பில்லியனைத் தாண்டியுள்ளது. நிலத்தில் வாழக்கூடிய இடம் குறைந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், எதிர்கால ஆப்ஷன்கள் குறித்த ஆராய்ச்சிகளும் விவாதங்களும் தொடங்கியுள்ளது. மனிதன் இப்போது மிதக்கும் நகரங்களில் வாழத் தயாராகிறான். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் வாழலாம். இந்த மிகப்பெரிய நகரம் ராட்சஸ  கடல் மீன் அளவில் இருக்கும். ஒரு கற்பனைப் படத்தின் நகரம் போல்  தோற்றமளிக்கும் இந்த நகரத்தில் 7000 பேர் வசிக்கலாம். கடல் அலைகளில் இது நகரும் என்பதால், … Read more

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியால் சோர்வடைந்த வீரர்களுக்கு ஊக்கமளித்த பிரான்ஸ் அதிபர் – வைரலாகும் வீடியோ..!

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த பிரான்ஸ் அணி வீரர்களை ஊக்கமூட்டும் வகையில், அந்நாட்டு அதிபர் மேக்ரான் பேசிய வீடியோ, இணையதளத்தில் அதிகம் பகிரப்படுகிறது. இறுதிப்போட்டியில் கடைசி வரை போராடி கோப்பை வெல்லும் வாய்ப்பை பிரான்ஸ் அணி தவறவிட்டது. இந்நிலையில், போட்டியை மைதானத்தில் கண்டுரசித்த அதிபர் மேக்ரான், ஆட்டம் முடிந்தபின் சோர்வடைந்திருந்த அணி வீரர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், வீரர்களின் அறைக்கு சென்ற அவர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக, அவர்களிடம் ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றினார்.

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி குறித்து நேற்று கூகுளில் அதிகம் பேர் தேடல் – சுந்தர் பிச்சை வியப்பு..!

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி தொடர்பாக நேற்று கூகுளில் தேடப்பட்டதைப்போல், கடந்த 25 ஆண்டுகளில் வேறெதுவும் தேடப்படவில்லை என அதன் சி.இ.ஒ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். உலகின் ஒட்டுமொத்த கவனமும் கால்பந்து இறுதிப்போட்டியின் மீதிருந்ததாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தியாவில், இந்தாண்டு, கூகுளில் அதிகம் தேடப்பட்ட தலைப்புகளில், கால்பந்து உலகக்கோப்பை மூன்றாவது இடத்தில் உள்ளது. Source link

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி குறித்து நேற்று கூகுளில் அதிகம் பேர் தேடல் – சுந்தர் பிச்சை வியப்பு..!

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி தொடர்பாக நேற்று கூகுளில் தேடப்பட்டதைப்போல், கடந்த 25 ஆண்டுகளில் வேறெதுவும் தேடப்படவில்லை என அதன் சி.இ.ஒ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். உலகின் ஒட்டுமொத்த கவனமும் கால்பந்து இறுதிப்போட்டியின் மீதிருந்ததாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தியாவில், இந்தாண்டு, கூகுளில் அதிகம் தேடப்பட்ட தலைப்புகளில், கால்பந்து உலகக்கோப்பை மூன்றாவது இடத்தில் உள்ளது. Source link

கத்தார் தேசிய தினம் மற்றும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை முன்னிட்டு சாகசம் நிகழ்த்திய விமானப்படை விமானங்கள்

கத்தார் நாட்டின் தேசிய தினத்தை முன்னிட்டும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தை சிறப்பிக்கும் வகையிலும் கத்தார் விமானப்படை விமானங்கள் வர்ண புகைகளை கக்கியவாறு வானில் சாகசம் நிகழ்த்தியது. கால்பந்து இறுதிப்போட்டி நடைபெற்ற லுசைல் மைதானத்தின் மீது கத்தார் நாட்டின் தேசியகொடியின் நிறங்களான சிகப்பு மற்றும் வெள்ளை நிறங்களை வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட சாகச நிகழ்ச்சியை ஏராளமானவர்கள் பார்த்து ரசித்தனர். Source link

நடுக்கடலில் மூழ்கிய தாய்லாந்தின் சிறிய ரக போர்க்கப்பல்.. 33 கடற்படையினரை தேடும் பணியில் தாய்லாந்து ராணுவம் தீவிரம்

தாய்லாந்து வளைகுடா கடற்பகுதியில், சிறிய ரக போர் கப்பல் ஒன்று நள்ளிரவு மூழ்கிய நிலையில், அதிலிருந்த 33 கடற்படையினரை தேடும் பணியில் தாய்லாந்து ராணுவம் ஈடுபட்டுள்ளது. சக்திவாய்ந்த கடல் அலையால், HTMS Sukhothai போர் கப்பலின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டு, கடல் நீர் உட்புகுந்தது. இதனால், கப்பல் ஒருபுறமாக சாய்ந்த நிலையில், அதிலிருந்த 106 பேரில் 73 பேரை பாதுகாப்பாக மீட்டதாக தாய்லாந்து கடற்படை தெரிவித்துள்ளது. எஞ்சிய 33 பேரை தேடும் பணியில் மூன்று கடற்படை கப்பல்களும், … Read more