ஆப்கானிஸ்தானில் 20 பேருக்கு சவுக்கடி| Dinamalar

காபூல்: ஆப்கானிஸ்தானில் விபச்சாரம், திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட 20 ஆண்களுக்கு நேற்று சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்பட்டது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை, கடந்த ஆண்டு ஆகஸ்டில் தலிபான்கள் அதிரடியாக கைப்பற்றி ஆட்சி செய்து வருகின்றனர். இவர்களின் ஆட்சி அமைத்தவுடன் குற்றச்செயல்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்படுள்ளன. இந்நிலையில், ஹெல்மெண்ட் மாகாண அரசின் செய்தி தொடர்பாளர் முஹமது காசிம் ரியாஸ் கூறியதாவது: விபசாரம், திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட 20 ஆண்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது விசாரணை … Read more

வங்கிக் கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட ரூ.4.6 கோடியை ஆடம்பரமாக செலவிட்ட ஆஸ்திரேலிய இளைஞருக்கு 18 மாதம் சிறை

சிட்னி: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தம்பதியினர் கோரே மற்றும் தாரா தோர்ன். இவர்கள் சிட்னி கடற்கரையையொட்டி வீடு வாங்க நினைத்தனர். புரோக்கர் ஆதம் மாக்ரோ மூலம் நல்ல வீடு ஒன்று விலைக்கு வந்தது. இந்நிலையில், வீட்டுக்கான தொகை ரூ.4.6 கோடியை அனுப்புமாறு புரோக்கரின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அந்தத் தம்பதியினருக்கு தகவல் வந்துள்ளது. அதன்படி ரூ.4.6 கோடியை அந்தத் தம்பதியினர் அனுப்பினர். அதன்பின் புரோக்கரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்து காவல் துறையிடம் தம்பதியினர் புகார் … Read more

 உலக கோப்பை கால்பந்து: பைனலுக்கு முன்னேறியது பிரான்ஸ்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் தோஹா: உலக கோப்பை கால்பந்து இரண்டாவது அரை இறுதியில் மொரோக்கோவை வீழ்த்தி பைனலுக்கு தகுதி பெற்றது பிரான்ஸ் . இதையடுத்து பைனலில் அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது பிரான்ஸ் கத்தாரில் 22வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. லுசெய்ல் மைதானத்தில் நடந்த முதலாவது அரையிறுதியில் அர்ஜென்டினா, குரோஷியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டம் துவங்கிய 34வது நிமிடத்தில், பெனால்டி முறையில் நட்சத்திர வீரர் மெஸ்சி, முதல் கோல் அடித்து அர்ஜென்டினா அணிக்கு முன்னிலை … Read more

குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு கூடுதலாக 48,000 ரூபாய் வழங்க ஜப்பான் புதிய திட்டம்!

பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில், குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு கூடுதலாக 48,000 ரூபாய் வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதியினருக்கு பிரசவம் மற்றும் குழந்தை பராமரிப்பு தொகை மானியமாக 2 லட்சத்து 52 ஆயிரம் ரூபாயை அந்நாட்டு அரசு வழங்கி வருகிறது. பொருளாதார பற்றாக்குறை, உறுதித் தன்மையற்ற வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றால் குழந்தை பெற்றுக் கொள்வதில் அந்நாட்டு மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். இந்நிலையில், கூடுதலாக 48,000 ரூபாய் சேர்த்து 3 லட்சமாக … Read more

பேருந்து ஒன்று தலைகீழாக கவிழ்ந்த விபத்து: 17பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.!

நேபாள நாட்டின் Kavrepalanchok மாவட்டத்தில் பேருந்து ஒன்று தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மத விழாவில் கலந்து கொண்டவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற விபத்து எதிர்பாராதவிதமாக சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Source link

ரஷ்யாவுடன் இணைந்து பெலாரஸ் ராணுவ வீரர்கள் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் கூட்டுப்போர் பயிற்சி

ரஷ்யா மற்றும் பெலாரஸ் ராணுவ வீரர்கள் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில், கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை, ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ரஷ்யா – பெலாரஸ் எல்லையில் உள்ள வனப்பகுதியில் இருநாட்டு வீரர்களும் இரவு – பகலாக போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. வனப்பகுதியில் தற்காலிக பாலம் அமைத்து, அதனை வெடி வைத்து தகர்க்க, வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. Source link

இந்தியா, சீனாவுக்கு அமெரிக்கா அறிவுரை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: எல்லை பிரச்னை இந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ள வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதியில் உள்ள யங்ட்சேயில், கடந்த 9 ம் தேதி சீன ராணுவம் அத்துமீற முயன்றது. இதை நம் ராணுவம் தடுத்து நிறுத்தியது. அப்போது ஏற்பட்ட மோதலில் இரு நாட்டு வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டதாக நம் ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து பார்லிமென்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் … Read more

"அறிகுறி இல்லாத கொரோனா பாதிப்புகளை இனி பதிவு செய்யப்போவது இல்லை" – சீனா அறிவிப்பு

பெய்ஜிங், சீனாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டது. இதனால் சீனாவில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன. இதன் பலனாக தற்போது அங்கு கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து தற்போது 10 ஆயிரத்துக்கும் கீழ் தினசரி பாதிப்பு பதிவாகி வருகிறது. இதனை மேலும் கட்டுப்படுத்தி கொரோனா பாதிப்புகளை முழுவதுமாக குறைக்க சீன சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து … Read more

உக்ரைனுக்கு அதி நவீன வான்பாதுகாப்பு அமைப்புகளை அனுப்ப அமெரிக்கா பரிசீலனை..!

உக்ரைனுக்கு அதிநவீன வான்பாதுகாப்பு அமைப்புகளை அனுப்ப, அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.  இந்த பாதுகாப்பு அமைப்புகள் கிடைக்கப்பெற்றால், உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் ரஷ்ய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கெதிராக, உக்ரைனால் தற்காத்துக்கொள்ள முடியும். இதற்கிடையே, ரஷ்யாவின் தாக்குதல் மற்றும் உறைபனியால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனியர்களுக்கு உதவ, அதன் நட்பு நாடுகள் 1 பில்லியன் யூரோக்களை வழங்கவும் முன்வந்துள்ளன. Source link

நம் கடற்படை தளபதி கடும் எதிர்ப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இலங்கை சென்றுள்ள நம் கடற்படை தலைமை தளபதி ஆர்.ஹரிகுமார், அந்நாட்டு துறைமுகத்தில் சீன உளவு கப்பல் நிறுத்தப்பட்டதற்கு, கடும் எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் உளவு கப்பலான ‘யுவான் வாங் 5’ இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் எரிபொருள் நிரப்பிச் செல்ல, இலங்கை அரசு கடந்த ஆகஸ்டில் அனுமதி அளித்தது. இந்த உளவு கப்பலை, இலங்கையில் சீனா நிறுத்தினால், இந்திய ராணுவம் மற்றும் கடற்படை தளங்களை … Read more