கனடாவில் விபத்து: இந்திய மாணவர் பலி| Dinamalar

டொரான்டோ : கனடாவில் இந்திய மாணவர் ஒருவர், டிரக் மோதி பலியானார். வட அமெரிக்க நாடான கனடாவின் டொரன்டோ நகரில் உள்ள கல்லுாரியில், நம் நாட்டின் ஹரியானாவைச் சேர்ந்த கார்த்திக் சைனி, 20, என்ற மாணவர் படித்து வந்தார். சமீபத்தில் கல்லுாரிக்கு சைக்கிளில் சென்ற அவர், சாலையைக் கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த டிரக் அவர் மீது மோதியது. சிறிது துாரம் இழுத்துச் செல்லப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். கார்த்திக்கின் உடலை இந்தியாவுக்கு கொண்டு … Read more

சீன கரோனா கலவரம் | செய்தியாளர் மீது தாக்குதல்; மன்னிப்பு கோரும் செய்தி நிறுவனம்

ஷாங்காய்: சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கரோனா தொற்று காரணமாக அங்கு கடுமையான ஊரடங்கு உத்தரவுகள் அமலாக்கப்பட்டு வருகிறது. கட்டுப்பாடுகளை எதிர்த்து ஷாங்காய் நகரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் பற்றி களத்தில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிபிசி செய்தியாளர் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்திற்காக சீன அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த செய்தி நிறுவனம் கோரியுள்ளது. இது தொடர்பாக வெளியான வீடியோ ஒன்றில் செய்தியாளரை சில காவலர்கள் சுற்றி … Read more

ஊரடங்குக்கு எதிராக சீனாவில் போராட்டம் அதிபர் ஜிங்பிங் பதவி விலக வலியுறுத்தல்| Dinamalar

பீஜிங் : நம் அண்டை நாடான சீனாவில் கொரோனா தொற்று பரவல் ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில், அரசின் கடுமையான தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு விதிகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. அதிபர் ஜிங்பிங் பதவி விலக வலியுறுத்தி, மக்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். சீனாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 40 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியானது. நாடு முழுதும் கடும் ஊரடங்கு … Read more

ஃபிஃபா கால்பந்து: மொராக்கோ வெற்றியால் ஆத்திரம்; பெல்ஜியத்தில் கலவரம்

ப்ரூசல்ஸ்: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மொரோக்கோ அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது பெல்ஜியம் அணி. இதனையடுத்து பெல்ஜிய தலைநகர் ப்ரூசல்ஸில் நடந்த கலவரத்தில் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் பெல்ஜியத்தை வென்று அதிர்ச்சி கொடுத்துள்ளது மொராக்கோ அணி. குரூப் சுற்றுப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல் பெல்ஜியம் தலைநகர் ப்ருசல்ஸில் சிலர் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது கார், … Read more

விஞ்ஞானிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற வட கொரிய அதிபர் கிம் மகள்| Dinamalar

சியோல் : வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், மீண்டும் தன் மகளுடன் பொது இடத்தில் தோன்றியது உலக அளவில் பெரும் ஆச்சர்யத்தையும், விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. கிழக்காசிய நாடான வட கொரியாவைப் பற்றி வெளி உலகிற்கு எந்தத் தகவலுமே கசியாது. இங்கு சர்வாதிகார ஆட்சி நடத்தும் கிம் ஜோங் உன், தன் நாட்டை ஒரு மர்மப் பிரதேசமாக வைத்துள்ளார். நாட்டை மட்டுமின்றி தன் குடும்பத்தைப் பற்றியும் கூட எந்தத் தகவலையும் வெளியிட்டது இல்லை. ஆனாலும், அவருக்கு … Read more

7 மாதம் வீட்டை விட்டு வெளியேறிய நபர்! திரும்பி எப்படி வந்தார் என்று பாருங்கள்!

பலரும் உடல் பருமன் குறித்து மிகவும் கவலையடைந்திருப்பீர்கள். உடல் பருமனை குறைக்க உணவு கட்டுப்பாட்டு, உடற்பயிற்சி என பலவற்றையும் நீங்கள் முயற்சித்திருப்பீர்கள். ஆனால், அவை எதுவும் உங்களுக்கு கைக்கொடுத்திருக்காது. எனவே, நீங்கள் மீண்டும் சோர்வடைந்து, உடல்நலத்தை பேண தவறிவிடுவீர்கள்.  அதேபோன்றுதான் அயர்லாந்தை சேர்ந்த ஒருவருக்கும் உடல் பருமனை குறைப்பதில் மோசமான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால், கடும் பின்னடைவுகளுக்கு பின்னரும் துவண்டு விடாமல் அவர் எடுத்த மாற்று முயற்சி அவரின் உடல் எடையை குறைப்பதில் எவ்வாறு பலனளித்தது என்று … Read more

கடுமையான கரோனா கட்டுப்பாடுகள்: அடுக்குமாடி கட்டிட தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு – சீன அதிபர் ஜின்பிங்குக்கு எதிராக மக்கள் போராட்டம்

ஷாங்காய்: சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் கரோனா ஊரடங்கு அமலில் இருந்த அடுக்குமாடி கட்டிட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இதனால் கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரும் போராட்டம் சீனா முழுவதும் பரவியது. சீனாவில் கரோனா தொற்று ஓயவில்லை. அங்கு இப்போது கரோனா தொற்று வேகம் எடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் சுமார் 40 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சீனாவின் பல பகுதிகளில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதிமுறைகள் அமலில் உள்ளன. … Read more

 சிவப்பு கிரக தினம்| Dinamalar

பூமியில் வசிப்பவர்கள் பல தலைமுறைகளாக நமது அடுத்த அண்டை கிரகத்தால் ஈர்க்கப்படுகிறார்கள். நாசா விண்வெளித் திட்டம் பல தசாப்தங்களாக அதைப் பற்றி மேலும் மேலும் அறியவும் முயன்று வருகிறது. சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் இந்த கிரகம் மேற்பரப்பில் துருப்பிடித்த இரும்பு காரணமாக சற்று சிவப்பு நிறத்தில் வானில் தோன்றுகிறது.சிவப்பு கிரக தினத்தின் வரலாறு 1964 ஆம் ஆண்டு நாசாவால் செவ்வாய் கிரகத்தை அடைந்த முதல் விண்கலமான மரைனர் 4 என்ற விண்கலம் ஏவப்பட்டதை நினைவுகூரும் வகையில் … Read more

வாடகைத் தாய் சேவையில் புதிய மாற்றம்; ரஷ்யா அதிரடி.!

கருப்பையில் குழந்தையைச் சுமக்க முடியாத நிலையில் இருக்கும் பெண்ணின் கருமுட்டை மற்றும் அவரது துணையின் விந்தணு இரண்டையும் எடுத்து உருவாக்கப்படும் கருவை, வேறொரு பெண் சுமந்து குழந்தை பெற்றுக் கொடுப்பார். அவர் வாடகைத் தாய் என்றழைக்கப்படுவார். குழந்தை இல்லாத தம்பதியினர் மற்றொரு பெண்ணின் மூலம் குழந்தை பெற்று எடுப்பது வாடகைத்தாய் முறை எனப்படுகின்றது. கற்பகால வாடகைத்தாய், மரபியல் வாடகைத்தாய் என வாடகைத்தாய் முறையானது இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. கற்பகால வாடகைத்தாய் முறையில் கருமுட்டை தாயிடம் இருந்தும், தந்தையிடமிருந்தும் … Read more

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்கிறார் எகிப்து அதிபர்

இந்திய குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல்-சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. எகிப்து அரபுக் குடியரசின் அதிபர் 2023ம் ஆண்டின் இந்திய குடியரசு தினத்தில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்வது இதுவே முதல் முறை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அல்-சிசிக்கு அனுப்பிய முறையான அழைப்பிதழை, கடந்த அக்டோபர் 16ம் தேதி அன்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எகிப்திய அதிபரிடம் அளித்தார் மேலும், இந்தியாவும் … Read more