குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்கிறார் எகிப்து அதிபர்

இந்திய குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல்-சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. எகிப்து அரபுக் குடியரசின் அதிபர் 2023ம் ஆண்டின் இந்திய குடியரசு தினத்தில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்வது இதுவே முதல் முறை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அல்-சிசிக்கு அனுப்பிய முறையான அழைப்பிதழை, கடந்த அக்டோபர் 16ம் தேதி அன்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எகிப்திய அதிபரிடம் அளித்தார் மேலும், இந்தியாவும் … Read more

ஏவுகணை விஞ்ஞானிகளுடனான ஆலோசனைக்கு மகளுடன் வந்த கிம் ஜாங் அன்..!

சியோல், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக முதல் முறையாக தனது மகளை வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்தினர். தனது நாட்டைப்போலவே தனது தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும் ரகசியம் காத்து வரும் வடகொரியா அதிபர் கிம் ஜான் அன், முதல் முறையாக தனது மகளான ஜூ ஏவுடன் வருகை தந்தது உலக அளவில் கவனம் பெற்றது. வடகொரியாவின் எதிர்கால அரசியல் தலைவராக மகளை அறிமுகப்படுத்த தயார் செய்வதற்கான முன்னோட்டமாக கிம் ஜாங் அன் மகளுடன் … Read more

எங்கு போனாலும் இடிக்கிறது… பெரிய மார்பை குறைக்க நிதி திரட்டி வரும் பெண்

லண்டன், இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கில் வசித்து வருபவர் ஜாஸ்மின் மெக்லெட்சி (வயது 33). கேக், ரொட்டி தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரது கணவர் பால் வில்லியம்ஸ் (வயது 51). இந்த தம்பதிக்கு 5 வயதில் மகள் உள்ளது. கணவர் தரையில் விரிப்பு, கம்பளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளார். ஜாஸ்மின் சிறு வயதில் பள்ளிக்கு போகும்போதே உடல் பருமனுடன் காணப்பட்டு உள்ளார். அவருடன் படிக்கும் சக மாணவிகள் உடல் பருமனை விட அவரது பெரிய மார்பை … Read more

Covid New Wave: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! கோவிட் அலையால் சீனாவில் லாக்டவுன் அமல்

பெய்ஜிங்: சீனாவில் தொடர்ந்து நான்காவது நாளாக கோவிட் வழக்குகள் அதிக அளவில் பதிவாகியுள்ளன. சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் இன்று (நவம்பர் 27)) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, நேற்று (நவம்பர் 26) நாட்டில் அதிகபட்சமாக 39,791 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன. கண்டறியப்பட்ட வழக்குகளில், 3709 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தன, 36,082 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்த அறிகுறிகள் எதுவும் இருக்கவில்லை. தொடர்ந்து நான்காவது நாளாக அதிக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

சீனாவில் தொடர்ந்து 4-வது நாளாக புதிய உச்சம்; 40 ஆயிரம் நெருங்கிய கொரோனா பாதிப்பு

பீஜிங், சீனாவில் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலக நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றது. எனினும், கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளால் பிற நாடுகளை விட முன்பே பரவலை சீனா கட்டுப்படுத்தி இருந்தது. இந்நிலையில், மீண்டும் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 39,791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் 3,709 பேருக்கு அறிகுறி காணப்படுகிறது. … Read more

அதிகமாக டிவி பார்த்த மகன்… விடிய விடிய பெற்றோர் கொடுத்த கொடூர தண்டனை…

மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதாக அவர்கள் பெற்றோர் கவலையடைந்துள்ளனர். பள்ளியில் கொடுக்கப்பட்ட வீட்டு பாடங்களை முடித்த உடன், இரவு 8.30 மணிக்கு தூங்க செல்ல வேண்டும் என அந்த சிறுவனக்கு அறிவுறுத்தியுள்ளனர்.  இருப்பினும், அந்த சிறுவன் தாங்கள் இல்லாத நேரங்களில், வீட்டுப்பாடங்களை முடிக்காமல், அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதை பெற்றோர்கள் கண்டுபிடித்துவிட்டனர். அவர்கள் வீட்டிற்கு வரும்போது, வீட்டுப்பாடங்களை முடிக்காமல் சிறுவன் தூங்கிவிடுபவதும் பெற்றோர்களுக்கு தெரியவந்தது.  பல … Read more

நிலவில் நாசாவின் ஆதிக்கத்திற்கு சவாலாக களமிறங்க சீனா திட்டம்

பீஜிங், பூமியில் மக்கள் தொகை பெருகி வரும் நிலையில், இடப்பற்றாக்குறையை போக்கும் வகையில் பூமி தவிர்த்து வேறு கிரகங்களில் மனிதர்கள் வசிப்பதற்கான சூழலை தேடும் ஆராய்ச்சியில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றில், நிலவு மற்றும் பூமியின் அருகேயுள்ள செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வியலுக்கான சூழல் பற்றிய ஆராய்ச்சியாளர்களின் தேடல் நீண்டுள்ளது. இதன்படி, அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு நிலவுக்கு கடந்த 1972-ம் ஆண்டில் விண்வெளி வீரர்களை அனுப்பியது. அதன்பின் கடந்த 50 ஆண்டுகளாக நிலவுக்கு … Read more

ஊரடங்கு கட்டுப்பாட்டால் வெகுண்டெழுந்த மக்கள்; சீனாவில் நாடு முழுவதும் போராட்டம்.!

கொரோனா தொற்றின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவில், கடந்த சில தினங்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. சீனாவில் நேற்று 40 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி கடைபிடிக்கப்படுவதால், கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. அந்தவகையில் கொரோனா பரவல் காரணமாக சீனாவின் மேற்கு … Read more

அமெரிக்கா வரை சென்று தாக்கும் வடகொரியாவின் ஹ்வாசாங்-17 ஏவுகணை: கிம் பெருமிதம்

பியாங்கியாங்: உலகின் வலிமையான அணுசக்தி ஆற்றலை பெறுவதே தங்கள் நோக்கம் என்று வடகொரிய அதிபர் கிம் தெரிவித்துள்ளார். ஹ்வாசாங்-17 என்ற ஏவுகணை பரிசோதனையை வடகொரியா சமீபத்தில் வெற்றிகரமாக செய்து முடிந்தது. அந்நாட்டின் மிகப்பெரிய ஏவுகணை பரிசோதனையாக இது அறியப்படுகிறது. இந்நிலையில் இப்பரிசோதனையில் பங்கு கொண்ட அதிகாரிகளையும், விஞ்ஞானிகளையும் சந்தித்து கிம் வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேசும்போது, “ஹ்வாசாங்-17 அமெரிக்கா வரை செல்லும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் … Read more

எல்லாம் பொய்… மெஸ்ஸியை வீழ்த்திய சவுதி வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசா? அல் ஷெஹ்ரி பளீர்!

கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் 22வது ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் முன்னாள் சாம்பியன்களை கத்துக்கட்டிகள் வீழ்த்தியது பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதில் குறிப்பிடத்தக்கது லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா. குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்த அணி தனது முதல் போட்டியில் சவுதி அரேபியா உடன் மோதியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெஸ்ஸியின் கோல் முதல் பாதியில் கச்சிதமாக வந்து சேர்ந்தது. இதை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். ஆனால் இரண்டாவது பாதியில் இரண்டு … Read more