சீனாவில் அதிபருக்கு எதிராக உச்சத்தை எட்டும் ஆர்ப்பாட்டங்கள்! மக்களை அடக்கும் போலீஸ்

பெய்ஜிங்: நாட்டில் கோவிட் எதிர்ப்புகள் அதிகரிப்பதைத் தடுக்க சீனா அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஷி ஜின்பிங்கை அதிபர் பதவியில் இருந்து விலகக் கோரும் போராட்டக்காரர்களை வீட்டிற்கு அனுப்ப நாடு முழுவதும், குறிப்பாக பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். கோவிட் கட்டுப்பாடுகள் நாட்டில் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்து பொருளாதாரத்தை சேதப்படுத்தியுள்ளன. இருப்பினும், கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது என்று சீன அரசு உறுதியாக இருக்கிறது.   சமூக ஊடகங்களில் வைரலாகும் … Read more

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்| Dinamalar

லண்டன்: சீனா உடன் நிலவிய உறவின் பொற்காலம் முடிந்துவிட்டது என பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார். அரசின் வெளியுறவுக் கொள்கையை விளக்கும் வகையில் லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் ரிஷி சுனக் பேசியதாவது: வரும் 2050ம் ஆண்டில் உலக வளர்ச்சியில் இந்தோ- பசிபிக் பிராந்தியங்களில் பங்களிப்பு 50 சதவீதத்திற்கும் மேலாக இருக்கும் என்பதால், இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக உறவு மேற்கொள்ள விரும்புகிறேன். பிரிட்டன் – சீனா உறவில் நிலவிய பொற்காலம் முடிந்துவிட்டது. பொருளாதார ஸ்திரத்தன்மை, காலநிலை … Read more

டுவிட்டரை மிரட்டுது ஆப்பிள்: எலான் மஸ்க் காட்டம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனம் டுவிட்டரை நிறுத்தி வைப்பதாக மிரட்டியுள்ளது என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். நஷ்டத்தில் இயங்கும் டுவிட்டர் நிறுவத்தை வாங்கிய எலான் மஸ்க், அதை சீர்செய்ய பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மற்றும் ஆட்குறைப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இதனால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், மஸ்க் ஒரு புதிய டுவிட்டர் கொள்கையை அறிவித்தார். மேலும் சமூக ஊடக தளம் இனி வெறுப்பூட்டும் … Read more

9 மனைவிகள் பத்தலையாம்… 10வதும் வேணுமாம்! அடம்பிடிக்கும் பிரபலம்!

ஒரு சிலரின் காதல் உறவுகள், திருமண உறவுகள் உள்ளிட்டவை வினோதமாக இருக்கலாம். ஒருவனுக்கு ஒருத்தி என்று ஆரம்பித்து, ஒரு பெண்ணுக்கு பத்து பேர் என்பது வரை உறவுமுறைகள் காணப்படுகிறது. இவை குறித்து கேட்பதற்கு வினோதமாக இருந்தாலும், அவை அனைத்தும் அவர்களின் தேர்வுப்படியே அமைகிறது.  அந்த வகையில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் ஒருவரின் உறவுமுறை, பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுவரை 9 பெண்களை திருமணம் செய்துள்ள அந்த பிரபலம், கூடிய விரைவில் ஒருவரை விவாகரத்து செய்ய இருப்பதாகவும், … Read more

மக்கள் போராட்டம் பரவுவதால் நெருக்கடி: சீனாவில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்வு

பெய்ஜிங்: சீனாவின் பல்வேறு நகரங்களில் பொது முடக்கம் அமலில் இருப்பதை எதிர்த்து மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல்வேறு நகரங்களுக்கும் போராட்டம் பரவுவதால், சீன அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், சீனாவில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. சீனாவில் கடந்த 3 நாட்களாக தினமும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு 39,791 பேர்கரோனா தொற்றால் … Read more

அதிபர் ஜின்பிங் பதவி விலக மக்கள் தீவிரம்| Dinamalar

பீஜிங்: சீனாவில் நேற்று ஒரே நாளில் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அதிபர் ஷீ ஜின்பிங் பதவி விலக கோரி வெடித்துள்ள மக்கள் போராட்டம், தலைநகர் பீஜிங் வரை பரவியது. சீனாவின் வூஹான் நகரில் 2019 டிசம்பரில் கொரோனா தொற்று பரவத் துவங்கியது. அங்கிருந்து உலகம் முழுதும் பரவிய தொற்று, உலக நாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக முடக்கிப்போட்டது. அனைத்து நாடுகளும் கொரோனா தொற்று பரவலில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு … Read more

அமெரிக்காவ வெளிய துரத்துங்க… FIFA World Cup-ல் வெடித்த பூகம்பம்… செம கோபத்தில் ஈரான்!

கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. போட்டிகளுக்கு மத்தியில் ரசிகர்களின் ஆரவாரமும், கொண்டாட்டமும் களைகட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளை சேர்ந்த ரசிகர்கள் கத்தார் புறப்பட்டு சென்று தங்கள் நாட்டு தேசியக் கொடியுடன் மகிழ்ச்சியுடன் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவிற்கு எதிராக புதிய சர்ச்சை வெடித்துள்ளது. ஈரான் vs அமெரிக்கா இந்திய நேரப்படி இன்று (நவம்பர் 29) நள்ளிரவு 12.30 மணிக்கு ஈரான், அமெரிக்கா இடையில் லீக் சுற்று போட்டி நடைபெறுகிறது. இதுதொடர்பாக அமெரிக்க … Read more

அமெரிக்க ஏரியில் மூழ்கி தெலுங்கானா மாணவர்கள் பலி| Dinamalar

ஹூஸ்டன்: அமெரிக்காவில் ஏரியில் குளித்த இரண்டு இந்திய மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த உதேஜ் குன்டா, 24, சிவ கெல்லிகரி, 25 இருவரும், அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் உள்ள பல்கலையில் படித்து வந்தனர். கடந்த 26ம் தேதி அங்குள்ள ஓசர்க்ஸ் ஏரிக்கு சென்றனர். முதலில் ஏரியில் குதித்த உதேஜ் ஆழமான பகுதிக்கு சென்று தத்தளித்தார். அவரைக் காப்பாற்ற கெல்லிகரி ஏரியில் குதித்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக இருவருமே நீரில் மூழ்கினர். மீட்புப் படையினர் வந்து, … Read more

குழந்தை உட்பட 21 பேர் பலி| Dinamalar

மிலன்: இத்தாலி மற்றும் கேமரூன் நாடுகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பிறந்து மூன்று வாரங்களே ஆன குழந்தை உட்பட 21 பேர் உயிரிழந்தனர். ஐரோப்பிய நாடான இத்தாலியில் அமைந்துள்ள இச்சியா தீவு, உலக அளவில் சுற்றுலாப் பயணியரின் மனம் கவர்ந்த இடமாக திகழ்கிறது. இங்கு சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இங்குள்ள காசாமிச்சியோலா என்ற இடத்தில் 26ம் தேதி அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் மண்ணுக்குள் புதைந்தனர். தகவல் அறிந்து வந்த மீட்புப் படையினர், … Read more

உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு| Dinamalar

லண்டன்: குரங்கு அம்மை நோய்க்கு ‘எம் பாக்ஸ்’ என்ற புதிய பெயரை உலக சுகாதார அமைப்பு சூட்டியுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 1958ல் ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் இந்த நோய் குறித்து ஆராய்ச்சி நடத்தி குரங்கு அம்மை என்ற பெயர் சூட்டப்பட்டது. இழிவு: ஆனால் குரங்கு அம்மை என்ற பெயர் ஆப்ரிக்க கண்டத்தை இனரீதியில் இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளது. இந்த நோய் ஆப்ரிக்க நாடுகளில் இருந்துதான் பரவுவதாகவும் அறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொற்று … Read more