பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்| Dinamalar

லண்டன்: சீனா உடன் நிலவிய உறவின் பொற்காலம் முடிந்துவிட்டது என பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார்.

அரசின் வெளியுறவுக் கொள்கையை விளக்கும் வகையில் லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் ரிஷி சுனக் பேசியதாவது: வரும் 2050ம் ஆண்டில் உலக வளர்ச்சியில் இந்தோ- பசிபிக் பிராந்தியங்களில் பங்களிப்பு 50 சதவீதத்திற்கும் மேலாக இருக்கும் என்பதால், இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக உறவு மேற்கொள்ள விரும்புகிறேன்.

latest tamil news

பிரிட்டன் – சீனா உறவில் நிலவிய பொற்காலம் முடிந்துவிட்டது. பொருளாதார ஸ்திரத்தன்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய பிரச்னைகளில் சீனாவின் முக்கியத்துவத்தை வெறுமனே புறுக்கணிக்க முடியாது. சீனா மற்றும் இந்தோனேஷியாவுடனான உறவிலும் தனது அரசு மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறேன்.

பிரிட்டனின் வெளியுறவுக் கொள்கை புதிய ஆண்டில் வெளியிடப்படும். இது காமன்வெல்த் நாடுகளுடனான ஒத்துழைப்பை அதிகரிக்கும். போட்டி நாடுகளை அணுகும்போது வெறும் கற்பனையை விட்டுவிட்டு வலுவான உண்மைநிலையை பிரிட்டன் பின்பற்றவேண்டும்.

latest tamil news

சீனாவில் தற்போது ஆர்ப்பாட்டம் நடத்துவோருக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். இருநாட்டுக்கும் இடையே கடந்த பத்தாண்டாக இருந்த நெருங்கிய பொருளாதார உறவு அப்பாவித்தனமானது.

பத்திரிகையாளர்கள் தங்கள் பணியை மிரட்டல் இல்லாமல் செய்ய வேண்டும். சீனாவில் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை அனைத்தையும் ஊடகங்கள் முன்னிலைப்படுத்த வேண்டும். சீன அரசின் அடக்குமுறை முயற்சிகள், நமது சொந்த சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசரத் தேவையை நமக்கு நினைவூட்டுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.