அமெரிக்க ஏரியில் மூழ்கி தெலுங்கானா மாணவர்கள் பலி| Dinamalar

ஹூஸ்டன்: அமெரிக்காவில் ஏரியில் குளித்த இரண்டு இந்திய மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த உதேஜ் குன்டா, 24, சிவ கெல்லிகரி, 25 இருவரும், அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் உள்ள பல்கலையில் படித்து வந்தனர். கடந்த 26ம் தேதி அங்குள்ள ஓசர்க்ஸ் ஏரிக்கு சென்றனர். முதலில் ஏரியில் குதித்த உதேஜ் ஆழமான பகுதிக்கு சென்று தத்தளித்தார். அவரைக் காப்பாற்ற கெல்லிகரி ஏரியில் குதித்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக இருவருமே நீரில் மூழ்கினர்.

மீட்புப் படையினர் வந்து, இரண்டு மணி நேரத்துக்குப் பின், உதேஜ் உடலை கண்டுபிடித்தனர். கெல்லிகரியின் உடல் மறுநாள்தான் கிடைத்தது. அமெரிக்க ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரு மாணவர்களுக்கும், தெலுங்கானா அமைச்சர் ராமாராவ் இரங்கல் தெரிவித்துள்ளார். இருவர் உடல்களையும் தெலுங்கானாவுக்கு எடுத்துவர அனைத்து உதவிகளையும் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.