இந்தோனேஷிய நிலநடுக்கத்தில் பலி ௨௬௮ ஆக உயர்வு| Dinamalar

சியான்சுர், இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, ௨௬௮ஆக உயர்ந்துள்ளது. மேலும், ௧௫௧ பேரை காணவில்லை. இதற்கிடையே, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் உள்ள சியான்சுரில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது; இது, ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது. இந்த நில நடுக்கத்தால் பள்ளி, மருத்துவமனை மற்றும் ஏராளமான வீடுகள் இடிந்தன. … Read more

18 ஆண்டில் 14 தலைமை தேர்தல் கமிஷனர்கள் உச்ச நீதிமன்றம் வேதனை| Dinamalar

புதுடில்லி :’தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக, அரசியல் சாசனம் பெரிதாக குறிப்பிடாததால் அது இஷ்டத்துக்கு மீறப்படுகிறது. ஆனால், ௭௨ ஆண்டுக்குப் பின்னும் உரிய சட்டம் இயற்றப்படவில்லை’ என, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வேதனை தெரிவித்துள்ளது. தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமனங்களை, உச்ச நீதிமன்றத்தில், ‘கொலீஜியம்’ முறை இருப்பது போல் தேர்வு செய்ய உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை, நீதிபதி … Read more

உலகக்கோப்பையில் வெற்றி பெற வேண்டி மெக்சிகோவில் குழந்தை ஏசு சிலைக்கு கால்பந்து அணி ஜெர்சியை அணிவித்த ரசிகர்கள்..!

மெக்சிகோவில் குழந்தை ஏசு சிலைக்கு, அந்நாட்டு கால்பந்து அணியின் ஜெர்சியை அணிவித்து, ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். டகுபா என்ற நகருக்கு அருகேயுள்ள சான் மிகுவல் ஆர்கேஞ்சல் என்ற தேவாலயத்தில், உலகக்கோப்பை கால்பந்து தொடரில் தங்கள் அணி வெற்றிப்பெற வேண்டி பலர் பிரார்த்தனை செய்தனர். 1970ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரின்போதும், அங்கு கால்பந்து ரசிகர்கள் இவ்வாறு பிரார்த்தனை செய்வது வழக்கம் என கூறப்படுகிறது. Source link

அல்பேனியாவின் வடக்குப்பகுதியில் கனமழை காரணமாக கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன..!

ஷ்கோத்ரா நகரில் லீட் மசூதி வெள்ளநீரால் சூழப்பட்டுள்ள நிலையில், அதன் அருகிலிருந்த பாலமும், புனா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இடிந்தது. அல்பேனியாவின் வடக்குப்பகுதியில் கனமழை காரணமாக, கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து, மக்களை மீட்புக்குழுவினர் வெளியேற்றி வருகின்றனர். அல்பேனியா, நீர்மின் உற்பத்தியை மட்டுமே நம்பியுள்ளதால், அதற்காக இரண்டு அணைகளில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. 24 மணி நேரம் பெய்த தொடர் மழையால், அணையில் இருந்து நீரை வெளியேற்றியதால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதாக, தகவல்கள் … Read more

10 ஆயிரம் பேரை அனுப்ப திட்டம்| Dinamalar

புதுடில்லி:’மெட்டா, டுவிட்டர், அமேசான்’ ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, ‘கூகுள்’ நிறுவனமும், 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக, செய்திகள் வெளியாகி உள்ளன.அண்மைக்காலமாக, டுவிட்டர் துவங்கி அமேசான் வரை, பல்வேறு பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள், செலவுகளைக் குறைக்கும் வகையில், ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன.அந்த வரிசையில், கூகுளின் தாய் நிறுவனமான, ‘ஆல்பபெட்’ நிறுவனமும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் முடிவுக்கு வந்துஉள்ளது. மோசமாக பணியாற்றும் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு … Read more

indonesia earthquake: 200 ஐ தாண்டிய பலி எண்ணிக்கை… 25 முறை பூமி அதிர்ந்ததால் பொதுமக்கள் பீதி!

தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் அவ்வபோது நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். ஜப்பானுக்கு அடுத்தபடியாக இந்தோனேஷியாவில்தான் அதிக அளவு நிலநடுக்கம் ஏற்படுவதாக தெரிகிறது. ஜாவா தீவில்: இதனை மெய்ப்பிக்கும் விதத்தில் நேற்று மதியம், இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள குடியிருப்புகள், கட்டடங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை சில வினாடிகள்குலுங்கின. இதனால் அச்சமும், அதிர்ச்சியும அடைந்த பொதுமக்கள் அலறி … Read more

சவுதியில் 10 நாளில் 12 பேருக்கு  மரண தண்டனை நிறைவேற்றம்| Dinamalar

ரியாத்:சவுதி அரேபியாவில், கடந்த, 10 நாட்களில் மட்டும் 12 பேருக்கு வாளால் கழுத்து துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவுதி அரேபியாவில், . கொலை, பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்தது என, குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 60-க்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், போதைப் பொருள் பயன்படுத்தியது, கடத்தியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 12 பேருக்கு, கடந்த, 10 நாட்களில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது. வாளால் கழுத்து … Read more

உக்ரைனில், ஆட்சியை மாற்றுவது தங்கள் நோக்கம் இல்லை – ரஷ்யா திட்டவட்டம்..!

உக்ரைனில், ஆட்சியை மாற்றுவது தங்கள் நோக்கம் அல்ல என ரஷ்யா தெரிவித்துள்ளது.  உக்ரைனில் உருவான ரஷ்யாவிற்கெதிரான மனநிலையை எதிர்க்கவே போர் தொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. உக்ரைனின் மின்கட்டமைப்புகளை ரஷ்யா தொடர்ந்து தாக்கிவருவதால் குளிர்காலத்தில் ஒரு கோடி பேர் மின்சாரமின்றி பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஹீட்டர்களை பயன்படுத்தமுடியாமல் பலர் குளிரில் உயிரிழக்கக்கூடும் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. Source link

சவுதி அரேபியாவில் கொடூர தண்டனை! கடந்த 10 நாட்களில் 12 பேரின் தலை துண்டிப்பு!

சவுதி அரேபியாவில் மரண தண்டனை: நெஞ்சை உலுக்கும் செய்தி ஒன்று சவுதி அரேபியாவில் இருந்து வெளியாகியுள்ளது. சவூதி அரேபிய அரசின் உத்தரவின் பேரில் கடந்த 10 நாட்களில் அங்கு 12 பேர் தலை துண்டிக்கப்பட்டுள்ளனர். சவூதி அரேபியாவில் குற்றங்கள் தொடர்பாக பல கடுமையான சட்டங்கள் உள்ளன. இதன் காரணமாக கடந்த 10 நாட்களில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சவூதி அரேபியாவில் சில காலமாக அரசு தரப்பில் கடுமையான தண்டனைகள் தொடர்பாக தளர்வு செய்யப்பட்டு வந்த … Read more

மீனவர் ஒருவர் வீசிய தூண்டிலில் சிக்கிய 30 கிலோ ராட்சத கோல்டுபிஷ்..!

பிரிட்டன் மீனவர் ஒருவர் வீசிய தூண்டிலில் 30 கிலோ ராட்சத கோல்டுபிஷ் சிக்கியது. கெண்டை மீனுக்கும், அலங்கார கொய் மீனுக்கும் ஏற்பட்ட கலப்பால் உருவான இந்த மீன் கேரட் என அழைக்கப்படுகிறது. பிரான்ஸின் ஷாம்பெய்ன் பிராந்தியத்திலுள்ள மீன்பிடி ஏரியில், ஆண்டி ஹாகெட் என்ற மீனவரின் தூண்டிலில் இந்த ராட்சத மீன் சிக்கியுள்ளது. தூண்டிலை கவ்வியபடியே சுமார் நூறடி தூரம் சென்ற மீனை, 25 நிமிடங்கள் போராடி ஹாகெட் பிடித்துள்ளார். முப்பது கிலோ மீனுடன் போஸ் கொடுத்தபின் அதனை … Read more