பாக்., மாஜி அமைச்சரின் மகனுக்கு மரண தண்டனை| Death sentence for son of former minister in Pak

லாகூர்,-பாகிஸ்தானில், மூன்று திருநங்கையரை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சரின் மகனுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முன்னாள் அமைச்சர் அஜ்மல் சீமாவின் மகன் அஹமது பிலால் சீமா. இவர், ௨௦௦௮ல் சியால்கோட்டில் உள்ள பண்ணை வீட்டில் தன் நண்பர்களுக்கு விருந்து அளித்துள்ளார். இதில், நடனமாடுவதற்காக திருநங்கையர் மூன்று பேரை அழைத்து வந்துள்ளார். அப்போது, அவருடைய மற்றும், அவரது நண்பர்கள் விருப்பப்படி நடனமாடாததால், … Read more

நேபாளத்தில் 2 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம்

காத்மாண்டு, நேபாளத்தில் உள்ள 2 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து மூன்று முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. பாக்லுங் மாவட்டத்தில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 1:23 மணி, 2:07 மணி மற்றும் 3:28 மணி அளவில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் முறையே 4.7, 5.3 மற்றும் 4 என்ற அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு அல்லது பொருட்சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. தினத்தந்தி Related … Read more

பிலிப்பைன்சில் வெள்ளம்: பலியானோர் எண்ணிக்கை 29 ஆக உயர்வு

மணிலா, பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் கிறிஸ்துமஸ் தினத்தன்று பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இடைவிடாது கொட்டிய பேய் மழையால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாகின. குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. டஜன் கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. கனமழை, வெள்ளத்தால் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் சுமார் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கிய 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு … Read more

சீனாவில் 400-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதல்; பலர் காயம், வைரலான வீடியோ

பீஜிங், சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ஜெங்ஜவ் நகரில் உள்ள பாலம் ஒன்றில் இன்று காலை பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஒன்றின் மேல் மற்றொன்று நிற்கும் வகையிலான விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில், கார்கள், லாரிகள் என 400-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி கொண்டன. குளிர்கால சூழலை முன்னிட்டு காலையில் தெளிவற்ற வானிலை காணப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக இந்த சம்பவம் நடந்துள்ளது என கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்து தீயணைப்பு துறையை சேர்ந்த 11 … Read more

சீனாவில் கொரோனா பலி; பிளாஸ்டிக் பைகளில் சுற்றி குவிக்கப்பட்ட உடல்கள்: பரபரப்பு வீடியோ

பீஜிங், சீனாவில் முதன்முறையாக 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா பெருந்தொற்று பின்பு உடனடியாக, கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்நாட்டு அரசின் பெருமுயற்சியால் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர், குளிர்கால சூழலில் சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது. தினசரி தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கடந்த 1-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலான நாட்களில் சீனாவில் 24 கோடியே 80 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு … Read more

உக்ரைனின் கெர்சன் நகரில் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்ய ராணுவம்!

ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து உக்ரைன் படைகளால் விடுவிக்கப்பட்ட கெர்சன் நகரில், ரஷ்யா மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ஏவுகணை மற்றும் பெரிய ரக துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய வீரர்கள், கடந்த 24 மணி நேரத்தில் 33 ஏவுகணைகள் மூலம் கெர்சன் பகுதியை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Bakhmut நகரில் கடுமையான சண்டை நடைபெறும் நிலையில், கிழக்கு உக்ரைன் பகுதியில் தாக்குதல் நீடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லையின் முன்கள பகுதியில் ரஷ்யா தளவாடங்களையும், படைகளையும் குவித்துள்ளதாக, பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் … Read more

கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை.. ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா கொடுக்கும் ஷாக்… இந்தியாவுக்கு ஜாக்பாட்!

ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு ரஷ்ய அதிபர் புடின் தடை விதித்துள்ளார். பிப்ரவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும் இந்த தடை, ஜூலை 1, 2023 வரை அமலில் இருக்கும். ரஷ்யாவின் இந்த முடிவால் ஐரோப்பாவில் எரிப்பொருட்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் எண்ணெய்க்காக ரஷ்யாவை பெரிதும் நம்பியுள்ளன. பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்கனவே எரிசக்தி பற்றாக்குறையை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், ரஷ்யாவின் இந்த … Read more

ரஷ்யா அணு ஆயுதம் பயன்படுத்தும்; நேட்டோ துணை பொதுச் செயலாளர் உறுதி.!

உக்ரைன் நேட்டோவில் இணைய அதிபர் ஜெலன்ஸ்கி நடவடிக்கைகள் மேற்கொண்டதால், ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது. அதன்படி உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. தாக்குதலை தொடுத்த ரஷ்யா, இரண்டே நாளில் உக்ரைன் தலைநகர் கீவ் வரை முன்னேறியது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா ஆயுதங்களை தாராளமாக உக்ரைனுக்கு வழங்க ஆரம்பித்தது. அதேபோல் பல்வேறு நேட்டோ உறுப்பு நாடுகளும் தாராளமாக ஆயுதங்களை வழங்கின. இதனால் கடந்த 10 மாதங்களாக போர் முடிவுக்கு வராமல் நீண்டு … Read more

அமெரிக்காவிலும் டிக்டாக் தடை; உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு.!

பிரபல சீன வீடியோ செயலியான டிக்டாக் ஆனது, அமெரிக்க பிரதிநிதிகள் சபையால் நிர்வகிக்கப்படும் அனைத்து சாதனங்களிலிருந்தும் தடைசெய்யப்பட்டுள்ளது. பிரதிநிதிகள் சபை நிர்வாகப் பிரிவின்படி, அமெரிக்க அரசாங்க சாதனங்களில் இருந்து பயன்பாட்டைத் தடைசெய்யும் சட்டத்தை விரைவில் நடைமுறைக்கு வரும். இந்தச் செயலியானது “பல பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாக அதிக ஆபத்தாகக் கருதப்படுகிறது” என்று பிரதிநிதிகளின் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி (CAO) செவ்வாயன்று அனைத்து சட்டமியற்றுபவர்களுக்கும் ஊழியர்களுக்கும் அனுப்பிய செய்தியில் கூறினார். மேலும் அவை நிர்வகிக்கப்படும் அனைத்து சாதனங்களிலிருந்தும் … Read more

ஹாங்காங்கில் அனைத்து விதமான கொரோனா கட்டுப்பாடுகளும் நாளை முதல் ரத்து!

ஹாங்காங்கில் அனைத்து விதமான கொரோனா கட்டுப்பாடுகளும் நாளை முதல் நீக்கப்படுவதாக ஹாங்காங் நிர்வாக தலைவர் ஜான் லீ அறிவித்துள்ளார். ஹாங்காங் வரும் மக்கள் இனி கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமில்லை என்றும் பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி பாஸ் காண்பிக்க வேண்டியது அவசியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பொது இடங்களில் மக்களுக்கு விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டாலும், மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டுமென்ற கட்டுபாடு தொடர்ந்து அமலில் உள்ளதாக ஜான் லீ குறிப்பிட்டுள்ளார்.  Source … Read more