நம் கடற்படை தளபதி கடும் எதிர்ப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இலங்கை சென்றுள்ள நம் கடற்படை தலைமை தளபதி ஆர்.ஹரிகுமார், அந்நாட்டு துறைமுகத்தில் சீன உளவு கப்பல் நிறுத்தப்பட்டதற்கு, கடும் எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் உளவு கப்பலான ‘யுவான் வாங் 5’ இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் எரிபொருள் நிரப்பிச் செல்ல, இலங்கை அரசு கடந்த ஆகஸ்டில் அனுமதி அளித்தது. இந்த உளவு கப்பலை, இலங்கையில் சீனா நிறுத்தினால், இந்திய ராணுவம் மற்றும் கடற்படை தளங்களை … Read more

பெரு நாட்டில் காஸ்டிலோ ஆதரவாளர்களின் போராட்டத்தில் வன்முறை – 7 பேர் உயிரிழப்பு

லிமா, தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. 2020-ம் ஆண்டில் அந்த நாடு 5 நாளில் 3 அதிபர்களைக் கண்டது. இந்த நிலையில் பள்ளி ஆசிரியராக வாழ்வைத் தொடங்கிய இடதுசாரியான பெட்ரோ காஸ்டிலோ, வலதுசாரியான கெய்கோவை வீழ்த்தி பெரு நாட்டின் அதிபராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால் அவற்றை காஸ்டிலோ திட்டவட்டமாக மறுத்து வருகிறார். … Read more

விந்தணுவை ஊசி மூலம் செலுத்திக் கொண்டு கர்ப்பம் அடைந்த சிறுமி! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கர்ப்பம் தரித்தது குறித்து அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். 19 வயதில் தான் கர்ப்பமாக இருந்ததாகவும், விந்தணுவை உட்செலுத்த  ஊசியைப் பயன்படுத்தி கர்ப்பமானதாகவும் சிறுமி கூறுகிறார். தற்போது 23 வயதாகும் அவர் இப்போது பெண் குழந்தைக்கு தாயாக உள்ளார். மேலும் டிக்டோக் செயலியில் தாயாக இருந்த அனுபவங்களை அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார். மான்செஸ்டரைச் சேர்ந்த ஷானன் நசரோவிச், ஷானன் கர்ப்பம் அடைய விந்தணுவை ஊசியை பயன்படுத்தி செலுத்திக் கொண்டதாகக் கூறியதைக் கண்டு மக்கள் … Read more

உலக பணக்காரர்கள் பட்டியல்: எலான் மஸ்க் பின் தங்கினார்

கலிபோர்னியா, உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருந்து 2-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த திங்கள் கிழமை டெஸ்லா நிறுவன பங்குகளில் ஏற்பட்ட சரிவே இதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை பெர்னார்ட் அர்னால்ட் பிடித்துள்ளார். டெஸ்லா பங்குகள் 4 சதவீதம் வீழ்ச்சியை கண்டுள்ளது. இதனால், இரண்டாவது இடத்தில் 164 பில்லியன் டாலர்களுடன் எலான் மஸ்க் பின்தங்கி உள்ளார். முதலிடத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் 171 பில்லியன் … Read more

பிரேசில் நாட்டில் போல்சனாரோ ஆதரவாளர்கள் தொடர் போராட்டம் – வாகனங்கள் தீ வைப்பு

பிரேசிலியா, உலகின் 4-வது மிகப்பெரிய ஜனநாயக நாடான பிரேசிலில் கடந்த அக்டோபர் 2-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. அதிபர் பதவிக்கான போட்டியில் அப்போதைய அதிபர் ஜெயீர் போல்சனரோ உள்பட மொத்தம் 9 பேர் களத்தில் இருந்தனர். போல்சனரோ அரசு மக்களிடம் கடும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டதால் இந்த தேர்தலில் அவரது வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாக இருந்தது. இதையடுத்து தேர்தல் முடிவுகளின்படி இடதுசாரி தலைவரும், முன்னாள் அதிபருமான லுலு டா சில்வா 50.90 சதவீத வாக்குகள் பெற்று … Read more

உக்ரைன் மீது தொடர் ட்ரோன் தாக்குதல் நடத்தும் ரஷியா…! 5 முக்கிய கட்டிடங்கள் சேதம்

கீவ், தனது அண்டை நாடான உக்ரைனை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்கிற நோக்கில் அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி போரை தொடங்கியது. மிகப்பெரிய படைபலத்தின் மூலம் உக்ரைனை எளிதில் அடிபணிய வைத்துவிடலாம் என எண்ணி போரை தொடங்கிய ரஷியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் ராணுவம் ரஷிய படைகள் துணிவுடன் எதிர்த்து நிற்கிறது. அதே வேளையில் ரஷியாவும் போரில் இருந்து பின்வாங்குவதாக … Read more

ஈரான் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: 400 பேருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை

தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட சுமார் 400 போராட்டக்காரர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் சமீபத்தில் நடந்த ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களுக்கு ஈரான் சிறைத் தண்டனை அறிவித்துள்ளது. அதன்படி, 160 பேருக்கு 5 முதல் 10 ஆண்டு சிறைத் தண்டனையும், 80 பேருக்கு 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையும், 160 பேருக்கு 10 ஆண்டுகள் வரையும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று … Read more

உக்ரைன் ராணுவத்திடம் சரணடைய விரும்பும் ரஷ்ய வீரர்களுக்காக, பிரத்யேக டிரோன் சேவை – உக்ரைன் அரசு

உக்ரைன் ராணுவத்திடம் சரணடைய விரும்பும் ரஷ்ய வீரர்களுக்காக, பிரத்யேக டிரோன் சேவைகளை உக்ரைன் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த டிரோன்கள் முன்பாக சரணடைவது எப்படி? என்பதை விளக்கும் காணொலியையும், ரஷ்ய மொழியில் உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ளது. சரணடைய விரும்பும் ரஷ்யர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஹாட்லைன் எண்ணை தொடர்புகொண்டு, எதிர்முனையில் பேசுபவர் கூறும் இடத்திற்கு, சரியான நேரத்தில் வந்து சேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இடத்தை வந்தடைந்ததும், அங்கு வரும் டிரோன் முன் சரணடைவதுபோல் கைகளை உயர்த்தி, அது பின்னாலேயே நடந்து சென்றால், உக்ரைன் … Read more

எல்லையில் பதற்றம்: இந்தியா – சீனாவுக்கு ஐ.நா., வேண்டுகோள்!

இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சினை நீண்டகாலமாக நிலவி வருகிறது. இந்திய – சீன லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் தேதி இரு நாட்டு ராணுவத்தினர் இடையே மோதல் வெடித்தது. எல்லை கட்டுப்பாட்டு பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து படைகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் நடவடிக்கையின் போது, இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட இந்த சண்டையில் இரு தரப்புக்கும் இடையே உயிரிழப்புகள் … Read more

காங்கோ குடியரசில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 141 பேர் பலி..!

ஆப்ரிக்க நாடான காங்கோ குடியரசில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ள நிலையில் உயிரிழப்பு  மேலும் அதிகரிக்க கூடும் என அந்த நாட்டின் சுகாதரத்துறை அமைச்சர் Jean-Jacques அச்சம் தெரிவித்துள்ளார். தலைநகர் Kinshasa உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. பல தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால்  போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. மழை வெள்ளத்தில் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டதுடன் பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.  Source link