உக்ரைனின் நோவா ககோவ்கா அணையில் குண்டு வெடிப்பு.. அணையை தகர்க்க திட்டமிடப்பட்டிருப்பதாக ரஷ்யா-உக்ரைன் பரஸ்பரம் குற்றச்சாட்டு..!

உக்ரைனின் கெர்சான் நகரிலுள்ள நோவா ககோவ்கா அணையில் குண்டு வெடிக்கும் காட்சியை ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. வெடிமருந்துகள் மூலம் அணையை தகர்க்க திட்டமிட்டிருந்ததாக, ரஷ்யாவும், உக்ரைனும் ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வந்தனர். கெர்சோன் நகரில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து, அணைக்கு சேதம் ஏற்படலாம் என அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான Maxar தெரிவித்த நிலையில், மறுநாள் அணையில் குண்டு வெடித்துள்ளது. Source link

இஸ்தான்புல் குண்டு வெடிப்பு: 6 பேர் பலி; சந்தேக நபர் கைது

இஸ்தான்புல்: துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நேற்று (ஞாயிறு) நடந்த குண்டு வெடிப்பில் 6 பேர் உயிரிழந்த நிலையில் வெடிகுண்டு வைத்ததாக இன்று (திங்கள்) சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இஸ்தான்புலின் இஸ்டிக்லால் அவென்யூவில் இந்த வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில்6 பேர் உயிரிழ்ந்தனர். 81 பேர் காயமடைந்தனர். துருக்கியின் இஸ்தான்புல் நகரம் பிரபலமான சுற்றுலா தலம். இநிலையில் இங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ள அதிபர் எர்டோகன் இது … Read more

துருக்கியில் குண்டுவெடிப்பு: 6 பேர் பலி| Dinamalar

இஸ்தான்புல் : துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் ஆறு பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 53 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்காசிய நாடான துருக்கியின் இஸ்தான்புல் நகரின் மிகவும் பரபரப்பான தெரு ஒன்றில் நேற்று மாலை பயங்கர வெடிகுண்டு வெடித்தது. இதில், உடல் சிதறி ஆறு பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். காயம் அடைந்த 53 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த … Read more

அமெரிக்காவில் போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதி பெரும் விபத்து| Dinamalar

டல்லாஸ் : அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடந்த பழைய போர் விமான சாகச நிகழ்ச்சியின் போது, இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி வெடித்து சிதறின. இதில், ஆறு பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில், பழைய போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடப்பது வழக்கம். இதை நேரடியாக பார்த்து ரசிக்க ஏராளமானோர் திரள்வர். இந்நிலையில், வடக்கு டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் விமான நிலையத்தில், போர் விமான சாகச நிகழ்ச்சி நேற்று நடந்தது. … Read more

தைவானை மிரட்டும் வகையில் தனது போர் விமானங்களை எல்லை அருகே உள்ள தீவில் நிறுத்திய சீனா..!

தைவானை மிரட்டும் வகையில் தனது போர் விமானங்கள், ஏவுகணைகளை அந்நாட்டின் எல்லை அருகே உள்ள தீவில் சீனா நிறுத்தி வைத்துள்ளது. 36 ராணுவ விமானங்கள் அங்கு வட்டமிட்டு வருகின்றன. தவிர கடற்படை கப்பல்கள், நிலத்தில் இருந்து பாயும் ஏவுகணைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் 3 சீன டிரோன்கள் உளவுப் பார்ப்பதாகவும் தைவான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவின் செயல்கள் பொறுப்பற்றவை என்றும் தற்போதைய நிலைமையை மாற்றுவதற்கான முயற்சி என்றும் அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. Source link

மேலும் ஒரு இந்தியர் பலி| Dinamalar

மாலி : மாலத்தீவில், சமீபத்தில் நிகழ்ந்த தீ விபத்தில், அடையாளம் காணப்படாமல் இருந்த ஒருவரது உடல், நேற்று அடையாளம் காணப்பட்டது. அவர் இந்தியர் எனத் தெரியவந்துள்ளது. தெற்கு ஆசிய நாடான மாலத்தீவின் தலைநகர் மாலியில் நிருபெஹி என்ற இடத்தில் இந்தியா, வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியுள்ள விடுதி உள்ளது. இதன் தரைத் தளத்தில், வாகனங்களை பழுது நீக்கும் ஒர்க் ஷாப் இருந்தது. கடந்த 10ம் தேதி இரவு இந்த ஒர்க் ஷாப்பில் … Read more

Istanbul Bomb Blast Video : துருக்கியில் பயங்கர குண்டுவெடிப்பு ; 6 பேர் பலி

துருக்கி தலைநகர், இஸ்தான்புலில் உள்ள பிரதான கடைவீதி பகுதியில் நேற்று பயங்கர  குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 80க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்றும் துருக்கி நாட்டு அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.  மேலும், இது மனித வெடிகுண்டு தாக்குதல் என அந்நாட்டு துணை அதிபர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்த சம்பவம் குறித்து துருக்கி நாட்டு அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் அளித்த பேட்டியில்,”இது ஒரு … Read more

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடந்த போர் விமான சாகச நிகழ்ச்சியில் 2 விமானங்கள் மோதி 6 பேர் உயிரிழப்பு

டல்லாஸ்: அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நேற்று நடைபெற்ற போர் விமான சாகச நிகழ்ச்சியில், இரு விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்டதில் 6 பேர் உயிரிழந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க விமானப்படை பயன்படுத்திய போர் விமானங்களில் சில விமானங்கள் மட்டும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் போயிங் நிறுவனத்தின் பி-17 குண்டு வீச்சு விமானங்கள் மற்றும் பி-63 `கிங் கோப்ரா’ ரக போர் விமானங்கள் ஆகியவை போர் விமானக் கண்காட்சிகளில் பயன்படுத்தப்பட்டு வந்தன. மேலும், சில விமானங்கள் … Read more

44 வீடுகள், பள்ளி, தேவலாயம் உள்ள ஸ்பெயின் கிராமத்தின் விலை ரூ.2.1 கோடி

மாட்ரிட்: சால்டோ டி காஸ்ட்ரோ. ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு கிராமம். ஸ்பெயினுக்கும் போர்ச்சுக்கல் நாட்டுக்கும் இடையில் இந்தக் கிராமம் அமைந்திருக்கிறது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டிலிருந்து மூன்று மணி நேர பயணத்தில் இந்தக் கிராமத்தை அடைந்துவிடலாம். 44 வீடுகள், ஒரு விடுதி, ஒரு தேவாலயம், ஒரு பள்ளி, ஒரு நீச்சல் குளம் உள்ள இந்தக் கிராமம் தற்போது விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. விலை 260,000 யூரோ. இந்திய மதிப்பில் ரூ.2.1 கோடி. இந்தக் கிராமம் உருவான கதை சுவாரஸ்யமானது. … Read more

உக்ரைனின் கெர்சோன் நகருக்கு சென்ற ராணுவ வீரர்களை கட்டி அணைத்து கண்ணீர் மல்க வரவேற்ற பொதுமக்கள்..

உக்ரைனின் கெர்சோன் நகருக்கு வந்த அந்நாட்டு ராணுவ வீரர்களை, அப்பகுதி மக்கள் கட்டி அணைத்தும், பூங்கொத்து கொடுத்தும் கண்ணீர் மல்க வரவேற்றனர். இரு தினங்களுக்கு முன்பு கெர்சோன் நகரை விட்டு ரஷ்ய படைகள் வெளியேறிய நிலையில், கெர்சோன் பகுதிக்கு மக்கள் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் கெர்சோன் பகுதிக்கு வந்த உக்ரைன் வீரர்களை கண்டதும், அப்பகுதி மக்கள் ஓடிச்சென்று வரவேற்றனர்.  Source link