அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சிறுவன் தற்கொலை| Dinamalar

வாஷிங்டன் : அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ‘கோல்டன் கேட் பிரிட்ஜ்’ என்ற உயரமான பாலத்தில் இருந்து கடலுக்குள் குதித்து இந்திய வம்சாவளி சிறுவன் தற்கொலை செய்துகொண்டான். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த ௧௬ வயது இந்திய வம்சாவளி சிறுவன் அங்கு 12ம் வகுப்பு படித்து வந்தான். சமீபத்தில் இச்சிறுவன் கோல்டன் கேட் பிரிட்ஜ் பாலத்தில் இருந்து கடலுக்குள் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக, அமெரிக்க கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்தனர். பாலத்தில் இருந்து சிறுவன் … Read more

இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து நீரவ் மோடி தாக்கல் செய்த மனு தள்ளுபடி: லண்டன் உயர் நீதிமன்றம் உத்தரவு

லண்டன்: வைர வியாபாரி நீரவ் மோடியும் அவரது உறவினரான மெகுல் சோக்சியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி அளவில் கடன் பெற்று அதை முறையாக திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்தனர். இந்த வழக்குத் தொடர்பான கைது நடவடிக்கையிலிருந்துத் தப்பிக்க 2018-ம் ஆண்டு அவர்கள் இருவரும் வெளிநாடு தப்பிச் சென்றனர். மெகுல் சோக்ஸி ஆன்டிகுவா தீவுக்கு தப்பிச் செல்ல, நீரவ் மோடி பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். இந்திய அரசின் வலியுறுத்தலின் பேரில் பிரிட்டன் அரசு 2019-ம் ஆண்டு … Read more

கிறிஸ்துமஸ் பண்டிகை செலவுகளைக் குறைத்து, போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டுமென போப் பிரான்சிஸ் வேண்டுகோள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கான செலவுகளைக் குறைத்து போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு கொடுத்து உதவ வேண்டுமென போப் பிரான்சிஸ் கேட்டுக் கொண்டுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பில் இருந்து கலந்து கொள்ளும் அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் உக்ரைனில் போரை நிறுத்த வேண்டுமென போப் பிரான்சிஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.   போரில் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்கள் குளிரிலும், பசியிலும் வாடி வருகின்றனர் என்று தெரிவித்த போப், அவர்களது இதயங்களில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும் வகையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் … Read more

“உக்ரைன்- ரஷ்யா போரைத்தொடர்ந்து, உலகம் முழுவதும் ஆயுத தேவை அதிகரிப்பு – ரபேல் நிறுவன சிஇஓ

உக்ரைன் – ரஷ்யா போரைத்தொடர்ந்து, உலகம் முழுவதும் ஆயுதங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக, இஸ்ரேலிய ரபேல் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் யோவ் ஹர்-ஈவன் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய ரஃபேல் நிறுவனம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்திய ஆயுதப்படைகளுக்கு பல்வேறு ஆயுதங்கள் மற்றும் ஆயுத அமைப்புகளை வழங்கி வருகிறது. அந்நிறுவனம், இந்தியாவில் தயாரிக்கும் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஹார்-ஈவன், ரஃபேல் இந்தியாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருவதாகக் கூறினார். … Read more

நாடு கடத்துவதற்கு எதிரான மனு கடைசி வாய்ப்பை இழந்தார் நிரவ் மோடி| Dinamalar

லண்டன்,:இந்தியாவுக்கு நாடுகடத்தப்படுவதை எதிர்த்து, பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் வாய்ப்பை, தொழிலதிபர் நிரவ் மோடி, 51, இழந்தார். மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில், 11 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு தப்பிச் சென்றார். அங்கு, கடந்த 2019ல் நிரவ் மோடி கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சியில் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., … Read more

  சீனாவில் கூடுது கொரோனா| Dinamalar

பீஜிங் :சீனாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 2000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.உலகின் முதல் கொரோனா தொற்று சீனாவின் வூகான் நகரில் கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுதும் பரவியது. தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக இத்தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்நிலையில் சீனாவில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. நேற்று முன்தினம் அங்கு 2291 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த … Read more

லெபனான் நகரங்களில் கிறிஸ்துமஸ் விழாக்கோலம்.. கண்ணைக் கவரும் ஒளியில் கிறிஸ்துமஸ் மரங்கள்..!

கிறிஸ்துமஸ் விழா நெருங்குவதையொட்டி லெபனான் நகரங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது. கிறிஸ்துமசை வரவேற்கும் விதமாக மக்கள் கூடும் இடங்களில் மின் அலங்காரங்கள் செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய சந்தைகளில் மக்களின் கூட்டம் அலை மோதுகிறது. குழந்தைகளுடன் பொருட்களை வாங்க செல்பவர்களை குதூகலப்படுத்தும் விதமாக இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. Source link

சிறையிலிருந்து போரிஸ் பெக்கர் விடுதலை| Dinamalar

லண்டன்: வரி ஏய்ப்பு புகார் தொடர்பான வழக்கில் சிறை தண்டனை பெற்ற முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் நேற்று சிறையிலிருந்து விடுதலையானார். ஜெர்மனி முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர், 54 முன்னாள் நம்பர் -1 வீரர், கிராண்டஸ்லாம், அரங்கில் 6 கோப்பை வென்றவர் 2002-ல் இவர் மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்தது. தனது சொத்துக்களை மறைத்து ஏமாற்றுவதாக 20 பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்டது. வழக்கு இங்கிலாந்தின் சவுத் வார்க் கிரவுன் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. … Read more

 தீயணைப்பு துறை இயக்குனர் மாற்றம்| Dinamalar

சென்னை, சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக உள்ள சீமா அகர்வாலுக்கு, தீயணைப்பு துறை இயக்குனர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது.தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனராக டி.ஜி.பி.,யான பி.கே.ரவி பணியாற்றி வந்தார். இவர் நேற்று திடீரென மாற்றப்பட்டார். சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக உள்ள டி.ஜி.பி., சீமா அகர்வாலுக்கு, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது. சென்னை, சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக உள்ள … Read more

ஒசாமா பின் லேடனுக்கு புகலிடம் கொடுத்தவர்கள் பயங்கரவாதம் குறித்து பிரசங்கம் செய்வதா? ஐ.நா., கூட்டத்தில் பாக்.,கை வெளுத்த ஜெய்சங்கர்| Dinamalar

நியூயார்க்,”பயங்கரவாதி ஒசாமா பின் லேடனுக்கு புகலிடம் கொடுத்தவர்கள், இந்திய பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்தியவர்கள், பயங்கரவாதம் குறித்தும், ஜம்மு – காஷ்மீர் விவகாரம் குறித்தும் பிரசங்கம் செய்ய என்ன தகுதி உள்ளது,” என, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், பாகிஸ்தான் குறித்து நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையுடன் குறிப்பிட்டார். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் இரண்டு முக்கிய கூட்டங்கள் நியூயார்க் நகரில் நடக்கின்றன. பயங்கரவாத பிரச்னை மற்றும் பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்வது குறித்த இந்தக் கூட்டங்களில் … Read more