நிரவ் மோடி மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தது இங்கிலாந்து கோர்ட்டு – விரைவில் நாடு கடத்தப்பட வாய்ப்பு

லண்டன், பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். சி.பி.ஐ. அளித்த புகாரின் பேரில் அங்கு கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகளாக லண்டன் வேண்ட்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் முயற்சியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை லண்டன் ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அதில் நீரவ் மோடி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய … Read more

கலவர பூமியாக மாறிய பெரு நாட்டில் அவசர நிலை பிரகடனம்

லிமா, தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. 2020-ம் ஆண்டில் அந்த நாடு 5 நாளில் 3 அதிபர்களைக் கண்டது. இந்த நிலையில் பள்ளி ஆசிரியராக வாழ்வைத் தொடங்கிய இடதுசாரியான பெட்ரோ காஸ்டிலோ, வலதுசாரியான கெய்கோவை வீழ்த்தி பெரு நாட்டின் அதிபராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால் அவற்றை காஸ்டிலோ திட்டவட்டமாக மறுத்து வந்தார். … Read more

எத்தியோப்பிய உள்நாட்டுப் போரில் வன்முறையை தூண்டும் பதிவுகளை பரப்பியதாக புகார் – மெட்டா நிறுவனம் மீது கென்யாவில் வழக்கு

நைரோபி, எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் அந்நாட்டு அரசுக்கும், டைக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் (டி.பி.எல்.எஃப்.) இடையே சுமார் 2 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து வந்த உள்நாட்டுப் போரில், சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் எத்தியோப்பிய உள்நாட்டுப் போரின் போது வெறுப்பு மற்றும் வன்முறையை தூண்டும் வகையிலான பதிவுகளை பரப்பியதாக பேஸ்புக் செயலியின் தாய் நிறுவனமான ‘மெட்டா’ மீது கென்யா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மெட்டா நிறுவனத்தின் செயல்பாடுகளால் … Read more

2023-ல் கொரோனா பரவல் உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது – உலக சுகாதார அமைப்பின் தலைவர் நம்பிக்கை

ஜெனீவா, சீனாவின் உகான் மாகாணத்தில் 2019-ம் ஆண்டின் இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது. தற்போது அந்த பாதிப்புகளில் இருந்து சர்வதேச நாடுகள் படிப்படியாக மீண்டு வருகின்றன. இதுவரை உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் சுமார் 66 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலுக்கு இன்னும் சர்வதேச சுகாதார அவசரநிலை தேவைப்படுகிறதா என்பதை … Read more

ஊழலில் உழலும் பாகிஸ்தான் ராணுவம்: முன்னாள் ராணுவத் தளபதி குடும்பம் குவித்த ரூ.1,270 கோடி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத் தளபதியாக கமர் ஜாவெத் பாஜ்வா இருந்தபோது அவரது குடும்பம் ரூ.1,270 கோடி குவித்தது அம்பலமாகி உள்ளது. பாகிஸ்தான் ராணுவ ஜெனரல்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கு கொழுத்த சம்பளம் கொடுக்கப்படுகிறது. அதோடு, அவர்களுக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. எனினும், அவர்கள் ராணுவத்திற்கு ஏற்ற விதத்தில் இல்லாமல், மிகப் பெரிய ஊழல்களில் ஈடுபடுவதாக ஏசியன் லைட் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபாஸ்ட் ஃபோகஸ் இணையதளம், முன்னாள் ராணுவத் தளபதி கமர் ஜாவெத் பாஜ்வாவின் … Read more

கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு தாய் – தந்தை நலனுக்காக கடிதம் எழுதிய 8 வயது சிறுமி!

லண்டன், கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு சிறுவர்கள் கடிதம் எழுதுவது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் பாரம்பரிய வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்தில் வசிக்கும் எம்மி என்ற 8 வயது சிறுமி எழுதியுள்ள கடிதம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே சிறுவர்கள் எழுதும் கடிதம் அவர்களுக்கு பிடித்த பொம்மைகள் தொடங்கி பலவற்றையும் கேட்கும் வகையில் அமைந்துள்ளது. அதில் சில தன்னலமில்லாத வகையிலும் உள்ளது. அந்த வகையில் எம்மி எழுதியுள்ள கடிதமும் இடம்பெற்றுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. … Read more

செயற்கை கருப்பை மூலம் ஆண்டுக்கு 30,000 குழந்தைகள் சாத்தியம் என்று சொல்லும் நிறுவனம்

பெர்லின்: பெண்களின் கருவறை போலவே செயற்கையாக உருவாக்கப்படும் கருப்பை வசதி மூலம் வருடத்திற்கு 30,000 குழந்தைகள் வரை பிறக்கவைக்க முடியும் என்று எக்டோ லைப் (EctoLife) என்ற தனியார் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இதுதான் உலகில் செயற்கையாக உருவாக்கப்பட்ட முதல் கருவறை நிறுவனம் என்றும் கூறப்படுகிறது. எக்டோலைப் (Ecto Life) நிறுவனம் பெர்லினை தலைமையகமாகக் கொண்ட உயிரி தொழில்நுட்பவியல் நிறுவனம். இந்த நிறுவனம்தான் உலகின் முதல் செயற்கை கருப்பை முறையில் குழந்தையை உருவாக்கும் முறையை அறிமுகப்படுத்துகிறது. பெண்களின் … Read more

முன்னாள் அதிபரை விடுவிக்கக்கோரி போராட்டங்கள் தீவிரம்.. பெருவில் 30 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம்

பெருவில், முன்னாள் அதிபர் காஸ்டிலோவை விடுவிக்கக்கோரி நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில்,  நாடு முழுவதும் 30 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  கிளர்ச்சி மற்றும் சதி செய்ததாக, பெட்ரோ காஸ்டிலோவிற்கு 18 மாத சிறை தண்டனை விதிக்கக்கோரிய வழக்கில், விசாரணையை, பெரு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.  இதனைதொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில், இதுவரை 8 பேர் உயிரிழந்த நிலையில், பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டதுடன், வன்முறையை கட்டுப்படுத்த போலீசாருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.   Source … Read more

உலகக்கோப்பை கால்பந்தில் மொராக்கோவை வீழ்த்தியது பிரான்ஸ்.. பிரான்சில் வசிக்கும் மொரோக்கோ ரசிகர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக 120 பேர் கைது..!

உலகக்கோப்பை கால்பந்து அரையிறுதி ஆட்டத்தில், பிரான்ஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், பிரான்சில் வசிக்கும் மொரோக்கோ ரசிகர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரம் வெடிக்கக்கூடும் எனக்கருதி, முன்கூட்டியே தலைநகர் பாரிஸில் 5 ஆயிரம் போலீசாரும், பிற பகுதிகளில் 5 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பிரான்ஸ் அணி வெற்றி பெற்றதும், பல்வேறு நகரங்களில் மொராக்கோ ரசிகர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. தாக்குதலில் ஈடுபட்டதாக 120 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். Source link

உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பல்கேரியாவில் நேட்டோ படைகளின் தற்காப்பு பயிற்சி

உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பல்கேரியாவில் நடைபெற்ற நேட்டோ படைகளின் ராணுவ பயிற்சியை இத்தாலிய படைகள் முன் நின்று நடத்தின. இதில் இத்தாலியின் தரைப்படைக்கான போர் வாகனங்கள் இடம்பெற்றதுடன், அல்பேனியா, கிரீஸ், வடக்கு மாசிடோனியா, மாண்டினீக்ரோ மற்றும் அமெரிக்க படையினர் தற்காப்பு பயிற்சிகளை மேற்கொண்டனர். உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் கடந்த அக்டோபர் மாதம் முதல் பல்கேரியாவில் நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன. ஹங்கேரி, ருமேனியா,மற்றும் சுலோவோக்கியா, நாடுகளிலும் நேட்டோ படைகள் நிறுத்தப்பட்டுள்ளன … Read more