உலக நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்-பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர். ராணி உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளிலும் உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், 96, வயது மூப்பு காரணமாக, 8ம் தேதி இரவு காலமானார்.ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் இருந்து அவரது உடல், 14ம் தேதி … Read more

அமெரிக்காவில் நடுவானில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதல் – 3 பேர் உயிரிழப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் லாங்மாண்ட் நகருக்கு அருகே செஸ்னா 172 ரக சிறிய விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. விமானத்தில் விமானி உள்பட 2 பேர் இருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக எதிர் திசையில் வந்து கொண்டிருந்த மற்றொரு சிறிய விமானத்துடன் இந்த விமானம் நேருக்கு நேர் மோதியது. அதை தொடர்ந்து 2 விமானங்களும் தரையில் விழுந்து நொறுங்கின. இந்த கோர விபத்தில் செஸ்னா 172 ரக விமானத்தில் பயணம் செய்த 2 … Read more

இரண்டாம் எலிசபெத்துக்கு இன்று இறுதிச் சடங்கு: இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்பு

லண்டன்: மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலாயத்தில் இன்று காலை நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் இரங்கல்தெரிவிக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொள்கிறார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் தங்கியிருந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்(96) உடல் நலக்குறைவால் கடந்த 8-ம் தேதிஉயிரிழந்தார். அவரது உடல் லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டது.அதன்பின் லண்டன் வெஸ்ட்மின்ஸ் டர் அரங்கில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மறைந்த … Read more

ராணி எலிசபெத் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

லண்டன், இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் 2-ம் எலிசபெத்தின் உடல் கடந்த 13-ந்தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் ராணி எலிசபெத்தின் உடலை இங்கிலாந்து மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர். … Read more

வெளிநாட்டினரை தொடாதீர்கள்…. நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த சீன தொற்றுநோயியல் அதிகாரி

பிஜீங், உலக நாடுகளை கடந்த 2 ஆண்டுகளாக அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று, தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால், குரங்கம்மை என்ற புதிய வைரஸ் உலக நாடுகளில் பரவத்தொடங்கியது. குரங்கம்மை வைரஸ் இந்தியா உள்பட பல நாடுகளுக்கு பரவத்தொடங்கியுள்ளது. இந்த வைரசால் சில நாடுகளில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சீனாவிலும் தற்போது குரங்கம்மை வைரஸ் பரவத்தொடங்கியுள்ளது. வெளிநாட்டில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை சீனாவின் சிச்சுவான் மாகாணம் சொங்கியூங் நகருக்கு வந்த … Read more

விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு! இ்நது மதம் செப்.,19: மூன்றாம் நாள் உரை| Dinamalar

சிகாகோவில் நடைப்பெற்ற சர்வ சமயப் பேரவை: கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்து 400 ஆண்டுகள் ஆகியிருந்தது. அதன் நிறைவு விழாவைக் கொண்டாடுவதற்கு, அமெரிக்காவில் சிகாகோ மாநகரத்தில், பிரம்மாண்டமான ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தக் கண்காட்சியில் அறிவியல், பொருளாதாரம் என்று சுமார் 20 பேரவைகள் நடைபெற்றன. அங்கு சர்வ சமய பேரவை சொற்பொழிவுகள் 1893 செப்டம்பர் 11-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை, பதினேழு நாட்கள் நடைபெற்றன. அங்கு ஒவ்வொரு … Read more

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…! சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு..!

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று தைவான் நாட்டின் கிழக்கு கடற்கரையில் உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலோர நகரமான டைட்டங்கிற்கு வடக்கே 50கி.மீதொலைவில் , சுமார் 10 கி.மீஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 அலகாக பதிவாகியிருந்தது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கடலோர பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், வீடுகள் கடுமையாக குலுங்கின. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் உடனடியாக … Read more

தாய்லாந்து நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்கள் சித்திரவதை ..! – உடனடியாக மீட்க நடவடிக்கை..!

மியான்மர் நாட்டில் இந்தியர்கள் ஆயுதப்பிடியில் சிக்கியுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் நாட்டின் கிழக்கு எல்லையில் கிரிப்டோ கரன்சி மோசடியில் ஈடுபடும் ஐடி நிறுவனங்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக அரசுக்கு தகவல் கிடைத்தது. இது போன்ற போலி நிறுவனங்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்று கடந்த 5ம் தேதி அரசு எச்சரிக்கை விடுத்த நிலையில், தாய்லாந்தில் வேலை உள்ளதாக கூறியதை நம்பி சென்ற சுமார் 60 இந்தியர்கள் ஏமாற்றப்பட்டு … Read more

பெங்களூரில் கைது செய்யப்பட்ட உறவினர்களை விடுவிக்க கோரும் இலங்கைவாழ் தமிழர்கள்

கொழும்பு: பொருளாதார நெருக்கடியால் அண்டை நாடுகளுக்கு செல்லும் இலங்கை மக்களில் சிலர் இந்தியாவிற்கு சட்டவிரோதமாக வந்ததால் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களின் உறவினர்கள்ல் கோரிக்கை விடுத்துளனர். தமது குடும்பத்தினை எவ்வாறாயினும் பாதுகாத்துக் கொள்வதற்காக நாட்டில் இருந்து வெளிநாடு செல்வதற்காக அவர்கள் முயன்றனர். இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் பெங்களுரில் வைத்து கைதுசெய்யப்பட்ட 38 பேரையும் விடுவிக்குமாறு அவர்களது உறவினர்கள், இலங்கை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள். கடந்த … Read more

மியான்மரில் வதைக்கப்படும் தமிழ் இளைஞர்களை மீட்க வேண்டும்..! – கே. பாலகிருஷ்ணன் கோரிக்கை..!

மியான்மரில் கடத்தி செல்லப்பட்டு வதைக்கப்படும் தமிழ் இளைஞர்கள் மீட்க கோரி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மதிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மியான்மர் நாட்டின் கிழக்கு எல்லையில் கிரிப்டோ கரன்சி மோசடியில் ஈடுபடும் ஐடி நிறுவனங்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக அரசுக்கு தகவல் கிடைத்தது. இது போன்ற போலி நிறுவனங்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்று கடந்த 5ம் தேதி அரசு எச்சரிக்கை விடுத்த … Read more