உலக செய்திகள்
முதல் ஒருநாள் போட்டி: இந்தியா பேட்டிங்| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மிர்புர்: வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. மிர்புரில் நடக்கும் முதல் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்திய அணியில் குல்தீப் சென்னுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரிஷப் பன்ட் விலகல் காயம் காரணமாக ஒரு நாள் போட்டிக்கான அணியில் இருந்து ரிஷப் பன்ட் விடுவிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் தொடரில் அவர் கலந்து … Read more
'நானும் ரவுடிதான்' பேஸ்புகில் கமெண்ட்… வாண்டடாக வம்பிழுத்தவரை கொக்கிப்போட்டு போலீஸ்!
நாம் பார்க்கும் வேலைக்கான தகுந்த அங்கீகாரம் உரிய நேரத்தில், உரிய இடங்களில் சரியாக கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும். மேலும், பொதுவாக கிடைக்க வேண்டிய மரியாதையிலும், முக்கியத்துவத்திலும் கூட எந்தவித சமரசத்தையும் ஏற்காத மனப்பான்மையையே எல்லோரும் வைத்துள்ளனர். உதாரணத்திற்கு, முன்பெல்லாம் கல்யாண பத்திரிகைகளில் தனது பெயர் இல்லை என்று ஆரம்பித்த பிரச்னைகள், தற்போது வாட்ஸ்அப்பில் தனது பிறந்தநாளுக்கு ஸ்டேட்டஸ் போடவில்லை என்ற ரகத்திற்கு வந்துவிட்டது. இதுமட்டுமில்லாமல், ஒரு முக்கியமான நபர், ஒரு முக்கியமான இடத்தில் … Read more
இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனத்துக்கு எர்த்ஷாட் பரிசு – பரிசுத் தொகை ரூ.10 கோடியை வழங்கினார் இளவரசர் வில்லியம்
பாஸ்டன்: சுற்றுச்சூழல் பங்களிப்புக்காக வழங்கப்படும் மதிப்புமிக்க எர்த்ஷாட் பரிசை, இந்த ஆண்டு இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனம் வென்றுள்ளது. காலநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக உழைக்கும் நிறுவனங்களை ஊக்குவிக்க பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் டேவிட் அட்டன்பரோ இணைந்து 2020-ம் ஆண்டு ‘எர்த்ஷாட்’ (Earthshot) என்ற பெயரில் பரிசை அறிமுகப்படுத்தினர். பரிசுக்கு தேர்வாகும் ஒவ்வொருவருக்கும் … Read more
என்னுள் ஒருபகுதி இந்தியா – சுந்தர் பிச்சை பெருமிதம்
வாஷிங்டன்: என்னுள் ஒரு பகுதி இந்தியா. நான் எங்கெல்லாம் செல்கிறேனோ அப்போதெல்லாம் என்னுடன் இந்தியாவையும் அழைத்துச் செல்கிறேன் என்று கூகுள், நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார். இந்த ஆண்டு பத்ம பூஷண் விருதுக்கு கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இந்தியாவில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவுக்கு அவரால் வர இயலவில்லை. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மூலம்,சுந்தர் பிச்சைக்கு, பத்ம பூஷண் … Read more
கட்டுப்பாட்டை நீக்கினால் 20 லட்சம் பேர் உயிரிழப்பர் – சீன மருத்துவ நிபுணர்கள் கணிப்பு
பெய்ஜிங்: கடந்த 3 ஆண்டுகளாக கரோனா தொற்றை சந்தித்துள்ள சீனாவில், தற்போது தினசரி கரோனா தொற்று எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தீவிர கரோனா கட்டுப்பாடுகள், ஊரடங்கால் வெறுப்படைந்த சீன மக்கள் அரசுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டுள்ளனர். சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள தினான்மென் சதுக்கத்தில் கடந்த 1989-ம் ஆண்டு நடந்த போராட்டத்துக்குப்பின், சீனாவில் தற்போதுதான் மக்கள் மிகப் பெரியளவில் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் தீவிர கரோனா கட்டுப்பாடுகளையும், ஊரடங்கு … Read more
போராட்டத்துக்கு பணிந்தது சீனா| Dinamalar
பீஜிங் : சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டதை தொடர்ந்து பல நகரங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சீனாவில் கொரோனா அதிகரித்து வருவதால் அங்கு தடுப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பல்வேறு மாகாணங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் 41 கோடி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். அவர்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. உரும்குயி நகரில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். அரசின் கடுமையான சட்ட திட்டங்களால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக மக்கள் மத்தியில் … Read more
இஸ்ரேல் துாதருக்கு எதிராக வெறுப்புணர்வு பதிவுகள்| Dinamalar
புதுடில்லி :தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் தொடர்பான விவகாரத்தில், இந்தியாவுக்கான இஸ்ரேல் துாதருக்கு எதிராக, வெறுப்புணர்வு பதிவுகள் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சமீபத்தில், இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடந்தது. இதில், மேற்காசிய நாடான இஸ்ரேலைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் நடாவ் லபிட், நடுவர் குழுவுக்கு தலைமை வகித்தார். இந்த விழாவில் திரையிடப்பட்ட தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் குறித்து லபிட் மோசமாக விமர்சித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தன் கருத்துக்கு … Read more
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு பத்மபூஷண் விருது!
சான்பிரான்சிஸ்கோ, இந்தியாவின் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டது. குடியரசு தினத்தையொட்டி இந்த ஆண்டுக்கான பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டன.விருது பட்டியலில் இருந்தவர்களுக்கு சமீபத்தில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் சுந்தர் பிச்சைக்கு விருது வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பத்ம பூஷண் விருதை சுந்தர் பிச்சை பெற்று கொண்டார். இந்தியா சார்பில் சுந்தர் பிச்சைக்கு அமெரிக்காவுக்கான இந்திய தூதர் … Read more
உக்ரைன் தூதரகத்திற்கு வந்த ரத்த பார்சல்கள்!| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், சமீபகாலமாக நடந்த வருகிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் தூதரகங்களுக்கு விலங்குகளின் கண்கள் அடங்கிய பார்சல் அனுப்பட்டுள்ளது. இதனை கண்ட உக்ரைன் தூதரக அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், சமீப காலமாக நடந்து வருகிறது. இந்த போரில் உக்ரைன் மற்றும் ரஷ்யா என இருதரப்பு ராணுவமும் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. போர் காரணமாக பல்வேறு … Read more