நிலவை நெருக்கமாக படம்பிடித்த ஆர்ட்டெமிஸ் விண்கலம் டிச.11-ல் பூமிக்கு திரும்புகிறது: நாசா

வாஷிங்டன்: நாசாவின் ஆர்ட்டெமிஸ் 1 ​​ஓரியன் விண்கலம் நிலவை மிக அருகில் புகைப்படங்கள் எடுத்த நிலையில் மீண்டும் பூமிக்கு திரும்பவுள்ளது. புதுமையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முன்பைக் காட்டிலும் துல்லியமான முறையில் நிலவை ஆராய்ச்சி செய்யும் நோக்கில் ஆர்டெமிஸ் திட்டத்தை நாசா கையில் எடுத்திருந்தது. அதன்படி ஆகஸ்ட் மாதமே ஆர்ட்டெமிஸ் 1 ​​ஓரியன் விண்கலத்தை விண்ணில் செலுத்த நாசா தயாராகி இருந்தது .எனினும், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதன்பின், கடந்த மாதம் நிலவுக்கு ஆர்ட்டெமிஸ் 1 ​​ஓரியன் … Read more

Zombie Virus Video : வேலையை காட்ட ஆரம்பித்த ஜாம்பி வைரஸ்? – நடுரோட்டில் மக்கள் வினோதம்!

Zombie Virus Viral Video : கடந்த வராம், ரஷ்யாவில் பெரும் பனிக்கட்டிகளின் அடியில் இருந்து சுமார் 48 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த வைரஸ் தொற்றை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததாக அறிவிதிருந்திருந்தனர். அத்தனை ஆண்டுகளாக பனிக்கடியில் மறைந்திருந்த வைரஸ், ‘ஜாம்பி வைரஸ்’  என்று பரவலாக அறியப்படுகிறது. இது வெளியே கசிந்தால் கரோனாவை விட மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என தகவல்கள் வெளியாகின.  இதனால், உலகம் முழுவதும் உள்ள மக்கள் பெரிதும் அச்சமடைந்து வந்தனர். கரோனாவின் பாதிப்பில் இருந்தே இன்னும் … Read more

திருமணமாகாமல் லிவ்விங் டு கெதரா? ஓராண்டு சிறைதண்டனை! அதிர வைக்கும் புதியச் சட்டம்

ஜகார்தா: கள்ளத்தொடர்புக்கு ஓராண்டு சிறை விதிக்கப்படும் என்று இந்தோனேசியா அரசு, புதிய குற்றவியல் சட்டத்தை அறிமுகப்படுத்துவது சர்வதேச அளவில் அதிர்வலைகளை எழுப்பியிருக்கிறது. இந்தோனேசியாவின் சர்ச்சைக்குரிய மாற்றங்களில் புதிய குற்றவியல் சட்டம் சுற்றுலாவுக்கு இடையூறு விளைவிக்கும் என்றும் அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்லனர். திருமணத்திற்கு வெளியே உடலுறவு கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் நாடாளுமன்றம் செவ்வாய்கிழமையன்று திருமணத்திற்கு வெளியே உடலுறவு கொள்வதற்கு தடை விதித்துள்ளது, இந்தச் சட்டங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிருப்தி ஏற்படுத்தலாம்.   முதலீட்டிற்கு தீங்கு விளைவிக்கும் என்ற கவலைகள் இருந்தபோதிலும், இந்தோனேசிய நாட்டின் … Read more

தெ.கொரிய திரைப்படத்தைப் பார்த்த 2 சிறுவர்களை சுட்டு வீழ்த்திய வட கொரியா

பியாங்யாங்: தென் கொரிய நாட்டு திரைப்படத்தைப் பார்த்ததற்காக தனது நாட்டுச் சிறுவர்கள் இருவரை பொதுமக்கள் முன்னிலையில் வட கொரியா சுட்டு வீழ்த்திய தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட கொரியா, தென் கொரிய சர்ச்சை கொரிய போர் முடிவுக்கு வந்தும் முடியாமல் தொடர்கிறது. இருநாடுகளும் இரு துருவங்களாக செயல்படுகின்றன. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் வட கொரிய நாட்டைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் தென் கொரிய நாட்டு திரைப்படத்தைப் பார்த்துள்ளனர். இதற்குத் தண்டனையாக அந்த இரு … Read more

2வது ஒருநாள் போட்டி: வங்கதேச அணி பேட்டிங்| Dinamalar

மிர்புர்: வங்கதேசம் சென்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இந்திய அணி, 0-1 என தொடரில் பின்தங்கியுள்ளது. இரு அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று (டிச.,7) மிர்புரில் நடக்கிறது. இதில் ‛டாஸ்’ வென்ற வங்கதேச அணி கேப்டன் லிட்டன் தாஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் … Read more

கரோனா ஊரடங்கால் பல்கலை.யில் அடைக்கப்பட்டுள்ள சீன மாணவர்கள் போராட்டம் – தங்கள் மீது கை வைத்தால் கலவரம் வெடிக்கும் என எச்சரிக்கை

பெய்ஜிங்: சீனாவின் சில நகரங்களில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், இன்னும் பல நகரங்களில் கரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கை எதிர்த்து சீனாவின் நான்ஜிங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சீனாவில் கரோனா தொற்று மீண்டு அதிகரித்ததால், அங்கு ஊரடங்கு மற்றும் கரோனா கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகளை சந்தித்து வந்த மக்களுக்கு சீன அரசின் நடவடிக்கைகள் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால் நாடு முழுவதும் பல இடங்களில் கடந்த வாரம் … Read more

8 பேர் பரிதாப பலி| Dinamalar

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் உள்ள மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்தனர். இங்கு நடந்த மற்றொரு சம்பவத்தில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். வட அமெரிக்க நாடான மெக்சிகோவிலிருக்கும் அகாபுல்கோ நகரின் ஒரு விடுதியில் உள்ள மதுபான கூடத்தில், நேற்று முன் தினம் இரவு திடீரென ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில், அங்கு மது அருந்திய மூன்று பேர் அதே இடத்தில் சுருண்டு விழுந்து இறந்தனர். மேலும் இருவர் பலத்த காயம் … Read more

போரில் வெற்றி பெற்றதும் உக்ரைனுக்கு வாருங்கள் – இந்திய மாணவர்களுக்கு அழைப்பு

புதுடெல்லி: ஐரோப்பிய யூனியனில் இணைய விருப்பம் தெரிவித்த உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்தது. இதனால் உக்ரைனில் மருத்துவம் பயின்ற சுமார் 18 ஆயிரம் மாணவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர். இதையடுத்து, மத்திய அரசு அவர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வந்தது. ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் 9 மாதங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா இந்தியாவின் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ரஷ்யாவுடனான … Read more

யாழ்ப்பாணத்தில் இருந்து மீண்டும் விமான சேவை| Dinamalar

கொழும்பு : ”யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு, டிசம்பர் 12 முதல் விமான சேவை மீண்டும் துவக்கப்படும்,” என இலங்கையின் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் நிமல் சிறீபாலா டி சில்வா தெரிவித்துள்ளார். நம் அண்டை நாடான இலங்கைக்கு, பிரதான வருவாயை ஈட்டித் தரும் துறையாக சுற்றுலாத் துறை உள்ளது. ஆனால், 2020ல் பரவத் துவங்கிய கொரோனா தொற்று, இலங்கையின் சுற்றுலாத் துறையை முடக்கிப் போட்டது. அந்நாட்டின் பொருளாதாரத்தையும் சீர்குலைத்தது. தற்போது, நாட்டின் பொருளாதார நிலைமை மெல்ல மெல்ல … Read more

உலகத்தையே கண்காணிக்கும் சீனா! ரகசிய காவல்நிலையங்கள் மூலம் உலகை ஆட்டிப்படைக்குமா?

ஒட்டாவா: உலகெங்கிலும் “காவல் சேவை மையங்கள்” என்ற பெயரில் சீனா ரகசிய காவல்துறையை நடத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளன. கனடாவில் குறைந்தது இரண்டு உட்பட, ஆவணப்படுத்தப்பட்ட “ரகசிய காவல் நிலையங்களின்” மொத்த எண்ணிக்கை இப்போது 102 ஆக இருப்பதாக, மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கையை மேற்கோள் காட்டி CTV செய்தி தெரிவித்துள்ளது. உலகின் 53 நாடுகளில் 102 காவல் நிலையங்களை சீனா ரகசியமாக நடத்தி வருவதாக, திங்களன்று (2022 டிசம்பர் 5) வெளியிடப்பட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. `ரோந்து மற்றும் … Read more