ஹிஜாப் 'அறநெறி போலீஸ்' பிரிவை ஈரான் கலைத்ததை நம்ப மறுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்…!

தெஹ்ரான், இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி வரும் ஈரான். அந்நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மத சட்டங்கள் சரியாக பின்பற்றப்படுவதையும், பெண்கள் ஹிஜாப் ஆடை அணிவதை உறுதிபடுத்தவும் ‘அறநெறி போலீஸ்’ பிரிவு செயல்பட்டு வருகிறது. இதனிடையில் ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறு போலீசார் தாக்கியதில் இளம்பெண் மாஷா உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். … Read more

இம்ரான் கான் பதவிக்கு ஆபத்து – தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி!

பரிசுப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்த வழக்கில், பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ – இன்சாப் தலைவர் இம்ரான் கான் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரை கட்சி பதவியில் இருந்து நீக்குவது குறித்து விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். இவர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். பாகிஸ்தான் நாட்டில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், … Read more

இந்தோனேசியாவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 6.2 ஆக பதிவு

ஜகார்த்தா, இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவா மாகாணத்தில் இன்று நண்பகல் 1.07 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் ஜெம்பர் பகுதியில் இருந்து 284 கி.மீ. தென்மேற்கே உணரப்பட்டு உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய புவிஇயற்பியல் கழகம் அறிவித்து உள்ளது. எனினும், சுனாமி பேரலைகளை ஏற்படுத்தும் அளவுக்கு இந்நிலநடுக்கம் ஆற்றல் கொண்டிருக்கவில்லை என்றும் தகவல் தெரிவிக்கின்றது. தினத்தந்தி Related Tags : … Read more

இம்ரானுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: பரிசுப்பொருட்களை விற்று காசு பார்த்த வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் மீதான குற்றச்சாட்டு நிரூபனமானதால், அவரை கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில், தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானுக்கு எதிராக 24 எம்.பி.,க்கள் திடீரென போர்க்கொடி துாக்கியதால், நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வியடைந்தார். ஆட்சி கவிழ்ந்தது. பதவியை ராஜினாமா … Read more

சொந்த மகள் உள்பட மொத்தம் 20 மனைவிகள் 9 பேர் 15 வயதிற்குட்பட்டவர்கள் – மதபோதகர் கைது

கொலராடோ அமெரிக்காவைச் சேர்ந்த மத போதகர் சாமுவேல் ராப்பிலி பேட்மேன் (46).ஒரு குழுவின் போதகராக சாமுவே இருந்துள்ளார். 2019 ஆம் ஆண்டி இந்த் குழுவின் தலைமையை ஏற்றுக்கொண்ட பிறகு, சாமுவேல் தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று பிரகடனம் செய்யத் தொடங்கினார். தற்போது அவர்தனது சொந்த மகள் உள்பட மொத்தம் 20க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளார். சாமுவேல் கொள்கைகளை சுமார் 50 பேர் பின்பற்றிவந்தனர். 20க்கும் மேற்பட்ட மனைவிகளில் 9க்கும் … Read more

உடல் நிலை குறித்த வதந்தி: முற்றுப்புள்ளி வைத்த புதின்

மாஸ்கோ ரஷிய அதிபர் புதின், தலைநகர் மாஸ்கோவில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்தபோது மாடி படிக்கட்டில் தவறி கீழே விழுந்ததாகவும், இதில் அவரது முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. மேலும் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் தனது உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதின் பொது வெளியில் தோன்றினார். குண்டு வெடிப்பில் சேதம் அடைந்த கிரீமியா பாலத்தை சீரமைக்கும் பணி … Read more

கொரியன் சீரிஸ் பார்த்ததால் கொடூரம்… 2 சிறுவர்களுக்கு தூக்கு தண்டனை!

K-Drama series என்று உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படும் கொரிய நாடகங்களைப் பார்ப்பது அல்லது விநியோகிப்பது வட கொரியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. 16 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் சேர்ந்து, வட கொரியாவின் ரியாங்காங் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த அக்டோபர் மாதம் பல தென் கொரிய மற்றும் அமெரிக்க திரைப்படங்கள், வெப்சீரிஸ்களை பார்த்ததாக கூறப்படுகிறது.  அவர்களை அதே நகரத்தில் உள்ள ஒரு விமானநிலையத்தில் உள்ளூர்வாசிகள் முன்னிலையில் அதிகாரிகள் தூக்கு தண்டனையை நிறைவேற்றியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் … Read more

உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை அமைக்கும் பணி ஆஸ்திரேலியாவில் தொடக்கம்!

சிட்னி, ஆஸ்திரேலியாவில் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை அமைக்கும் கட்டுமானப் பணி தொடங்கியுள்ளது.கிறிஸ்துமஸ் மரம் போன்று 1 லட்சத்து 31 ஆயிரம் ஆண்டனாக்கள் தொகுப்பாக இணைக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவின் சர்வதேச தளங்கள் இணைந்து 16 நாடுகளின் ஒத்துழைப்போடு இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.இதன்மூலம் அடுத்த 50 ஆண்டுகளில் விண்வெளியில் இருந்து புதிய தகவல்கள் கண்டுபிடிப்புகளை வெளியுலகிற்கு கொண்டுவர முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். #BREAKING: The Australian arm of the world’s largest … Read more

4 மாசமா குளிக்கல… கப்பு தாங்கல – அறை தோழியை விரட்டியத்த பெண்!

காலையில் எழுந்தவுடன் பல் துலக்குதல் முதல் குளியல் வரை, பின்னர் மாலையில் வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த உடன் கை, கால் கழுவுதல் என இதனை தங்களது அன்றாட வாழ்வாக வைத்துக்கொள்ள வேண்டும் என சிறுவயதில் வீட்டில் தொடங்கி பள்ளி வகுப்பு வரை அனைவரும் நமக்கு கற்பித்து வருகின்றனர்.  உடலை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், தலைமுடியை சீராக வைத்தல் என சுகாதாரம் என்பது மிக அவசியமான ஒன்று. ஆனால், பலரும் நேரமின்மை, சோம்பல் காரணமாக உடலை சுத்தமாக வைத்துக்கொள்வதில் … Read more

அலுவலகத்திலேயே தூங்கும் ட்விட்டர் நிறுவன ஊழியர்கள்: எலான் மஸ்க் ஏற்பாடு

சான் பிரான்சிஸ்கோ: அண்மையில் ட்விட்டர் நிறுவன ஊழியர்கள் நீண்ட நேரம் வேலை செய்யவும், தேவைப்படும் நேரங்களில் அலுவலகத்தில் தங்க வேண்டும் எனவும் எலான் மஸ்க் மின்னஞ்சல் மூலம் சொல்லி இருந்தார். அதன் காரணமாக ட்விட்டர் ஊழியர்கள் சிலர் தாமாகவே முன்வந்து வேலையில் இருந்து விலகினர். ஆனாலும் மஸ்க் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். அதன் காரணமாக ட்விட்டர் தலைமையகத்தில் சில அறைகளை ஊழியர்கள் தூங்கும் வகையில் அவர் மாற்றி அமைத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை … Read more