சீன அரசுக்கு எதிராக டேட்டிங் செயலிகள், டெலிகிராம் மூலம் தகவல் பரப்பும் போராட்டக்காரர்கள்

பெய்ஜிங்: சீனாவில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராடும் மக்கள் டேட்டிங் செயலி, டெலிகிராம் மூலம் தகவல் பரப்புகின்றனர். சீனாவில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஊரடங்கு காரணமாகத்தான், உரும்கி நகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டபோது, 10 பேர் வெளியேற முடியாமல் இறந்தனர் என சமூக ஊடகத்தில் தகவல் பரவியது. இது போராட்டத்தை தீவிரப்படுத்தியது. மக்கள் போராட்டம் தொடர்பான தகவல்கள், வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவுவதை தடுக்க … Read more

பாக்., ராணுவ தளபதியாக ஆசிம் முனீர் பொறுப்பேற்பு| Dinamalar

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியாக ஆசிம் முனீர்அஹமது நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். நம் அண்டை நாடான பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதியாக தொடர்ந்து இரண்டு முறை பதவி வகித்த கமார் ஜாவேத் பஜ்வாவின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, தலைநகர் இஸ்லாமாபாதில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதியாக ஆசிம் முனீர் அஹமது பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து பஜ்வா விடைபெற்றார். ஐ.எஸ்.ஐ., எனப்படும் பாக்., உளவு அமைப்பின் தலைவராக … Read more

எலியை கொன்றவர் மீது போலீசார் வழக்கு| Dinamalar

பதாயு, :எலி வாலில் கல்லைக்கட்டி சாக்கடையில் வீசி கொன்ற இளைஞர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உத்தர பிரதேசத்தை சேர்ந்த மனோஜ் குமார் என்ற இளைஞர், எலி வாலில் கல்லைக் கட்டி அதை சாக்கடையில் வீசி எறிந்தார். கல்லின் கனத்தினால் மேலே வரமுடியாமல் எலி தண்ணீரில் மூழ்கி துடிதுடித்து இறந்தது. இறந்த எலியை சாக்கடையில் இருந்து எடுத்த விலங்குகள் நல ஆர்வலர் விகேந்திர சர்மா, போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, மனோஜ் குமார் மீது போலீசார் … Read more

மனித குலத்துக்கே பேராபத்து?; உயிர் பெற்றது ஜாம்பி வைரஸ்!

கடந்த 2020ம் ஆண்டு கொரோனா COVID 19 என பெயரிடப்பட்ட வைரஸ் ஏற்படுத்திய தாக்கம் ஒட்டுமொத்த உலகத்தையும் முடக்கி போட்டது. சர்வ வல்லமை பொருந்திய வல்லரசு நாடுகளே என்ன செய்வது? என புரியாமல் திகைத்து நின்றன. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டு தலங்கள் அடைப்பு என, பயங்கர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மக்கள் கடும் இன்னலுக்கு … Read more

குரங்கம்மை இனி எம். பாக்ஸ் என அழைக்க உலக சுகாதார அமைப்பு முடிவு

ஜெனிவா: டென்மார்க்கில் 1958-ம் ஆண்டு ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த குரங்கு ஒருவித வைரசால் பாதிப்புக்கு ஆளானது. இதனால் அந்த வைரஸ் நோய்க்கு குரங்கு அம்மை என பெயர் வந்தது. பின்னர் இந்த நோய் தாக்கம் மனிதர்களுக்கும் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது குரங்கு அம்மை என்ற பெயரை உலக சுகாதார அமைப்பு எம்பாக்ஸ் என மாற்றியுள்ளது. உலகளாவிய மருத்துவ நிபுணர்களின் தொடர்ச்சியான ஆலோசனையை தொடர்ந்து இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தினத்தந்தி Related Tags : … Read more

நமக்கு நாமே செய்தி அனுப்பும் வசதி – வந்தது வாட்ஸ் ஆப் புது அப்டேட்

கலிபோர்னியா, உலகம் முழுவதும் பல கோடி மக்கள் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தனது பயனாளர்களை தக்கவைத்துக் கொள்ள வாட்ஸ் ஆப் சார்பில் அவ்வப்போது அப்டேட்கள் கொடுப்பது வழக்கும். இதன்படி, நமக்கு நாமே செய்தி அனுப்பும் வசிதியை வாட்ஸ் ஆப் நிறுவனம் வழங்கியுள்ளது. பேட்டா வெர்ஷனில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் நாள்களில் அனைத்து பயனாளர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தினத்தந்தி Related Tags : வாட்ஸ் ஆப் அப்டேட் … Read more

தாய்லாந்து புத்தமத கோவிலில் போதைமருந்து சோதனையில் சிக்கி கொண்ட துறவிகள்

பாங்காங், தாய்லாந்து நாட்டின் பெத்சாபன் மாகாணத்தில் பங் சாம் பான் என்ற மாவட்டத்தில் புத்த கோவில் ஒன்று அமைந்து உள்ளது. இந்த நிலையில், கோவிலில் இருந்த தலைமை சாமியார் உள்பட 4 துறவிகளிடம் போதை பொருள் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், அனைவரும் மெத்தாம்பிடமைன் போதை பொருள் பயன்படுத்தி உள்ளனர் என உறுதியானது. இதனை தொடர்ந்து, கோவிலில் அவர்கள் மேற்கொள்ளும் சடங்குகள் உள்ளிட்டவற்றை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டனர். அவர்களின் புனிதர் அந்தஸ்தும் பறிக்கப்பட்டது. இதன்பின்பு, போதை பொருள் மறுவாழ்வு … Read more

சீனாவுடனான நட்பின் பொற்காலம் முடிந்துவிட்டது: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் எச்சரிக்கை

லண்டன்: பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்ட பிறகு, வெளியுறவுக் கொள்கை குறித்த தனது முதல் முக்கிய உரையாற்றிய பிரதமர் ரிஷி சுனக், சீனாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்கலாம் என்ற செய்தியை வழங்கியுள்ளார். இங்கிலாந்துக்கும் சீனாவுக்கும் இடையிலான சிறந்த உறவுகளின் பொற்காலம் முடிந்துவிட்டதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெளிவுபடுத்தியுள்ளார். இங்கிலாந்தின் ‘மதிப்புகள் மற்றும் நலன்களுக்கு’ சீனா தொடர்ந்து சவால் விடுத்து வருவதாக கூறிய அவர், வெளியுறவுக் கொள்கை குறித்த தனது முதல் முக்கிய உரையில், … Read more

21 மாத குழந்தையில் கடத்தப்பட்டவர் 51 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

சென்னை, சிறு வயதில் கடத்தப்பட்ட குழந்தைகள் வளர்ந்த பிறகு பெற்றோர்களுடன் மீண்டும் இணைவது என்பது தமிழ் சினிமாவில் நாம் அடிக்கடி பார்த்த ஒரு செயலாகும். ஆனால், இதே சம்பவம் நிஜ வாழ்க்கையில் அரங்கேறும் போது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கும். அமெரிக்காவில் அப்படியொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் போர்ட் வொர்த்தில் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். 1971ம் ஆண்டு அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு அவர்கள் மெலிசா ஹைஸ்மித் என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த … Read more

அதிகமாக டி.வி. பார்த்த சிறுவன்… இரவு முழுவதும் டி.வி. பார்க்க வைத்து தண்டனை கொடுத்த பெற்றோர் மீது விமர்சனம்

பெய்ஜிங், குழந்தைகளை வளர்ப்பதில் நவீன கால பெற்றோர் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக டி.வி., ஸ்மார்ட்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களுக்கு குழந்தைகள் அடிமையாகாமல் தடுப்பது பெற்றோருக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. அந்த வகையில் சீனாவில் அதிகமாக டி.வி. பார்க்கும் பழக்கத்தைக் கொண்டிருந்த ஒரு சிறுவனுக்கு, அவனது பெற்றோர் வழங்கிய நூதன தண்டனை, தற்போது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹூனான் மாகாணத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவனை மாலை நேரத்தில் வீட்டில் தனியாக விட்டுவிட்டு … Read more