தேசிய கீதத்தை பாடாத ஈரான் கால்பந்து வீரர்கள்: ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு

கத்தார்: இங்கிலாந்துடனான கால்பந்து போட்டியில் தேசிய கீதத்தை பாடாமல் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளித்த ஈரான் கால்பந்து வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து வருகிறது. இதில் க்ரூப் ’பி’ பிரிவில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து – ஈரான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் தொடக்க நிகழ்வில் இரு அணிகளின் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. தங்கள் நாட்டில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் … Read more

இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு 268 ஆக உயர்வு – சியாஞ்சூர் பகுதியில் 151 பேரை காணவில்லை

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 268 ஆக அதிகரித்துள்ளது. 151 பேரை காணாததால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அங்கு மீட்புபணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவின் மேற்கு பகுதியில் கடந்த 21-ம் தேதி மதியம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.6 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு சுமார் 2 மணி நேரத்துக்கு லேசான அதிர்வுகள் 25 முறை ஏற்பட்டதாக இந்தோனேசிய வானிலை ஆய்வு … Read more

5.6 ரிக்டர் அளவில், இந்தோனேஷியாவை உலுக்கிய நிலநடுக்கம் – 252 பேர் உயிரிழப்பு..!

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தை உலுக்கிய நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 252 ஆக உயர்ந்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக சுமார் ஏழாயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில், இடிபாடுகளில் சிக்கி, 377 பேர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானோர் எண்ணிக்கை 252 ஆக உயர்ந்த நிலையில், மேலும் 31 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

சவுதியில் 10 நாளில் 12 பேருக்கு மரண தண்டனை| Dinamalar

ரியாத், மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியாவில், குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. கொலை, பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்தது என, கடந்த மார்ச் மாதத்தில் மட்டும், ௮௧ பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், போதைப் பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ௧௨ பேருக்கு, கடந்த, ௧௦ நாட்களில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. வாளால் கழுத்து துண்டிக்கப்பட்டு, இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில், மூன்று பேர் சவுதியைச் சேர்ந்தவர்கள். சிரியாவைச் சேர்ந்த நான்கு பேர், பாகிஸ்தானைச் … Read more

பிரான்சில் மீனவர் துாண்டிலில் சிக்கிய 30 கிலோ எடையுள்ள கோல்டன் பிஷ்| Dinamalar

பாரிஸ், ஐரோப்பிய நாடான பிரான்சில் உள்ள ஏரியில் மீனவரின் துாண்டிலில், 30 கிலோ எடையுடைய, ‘கோல்டன் பிஷ்’ எனப்படும், பிரமாண்ட தங்க நிற மீன் சிக்கியது. பிரான்சின் ஷாம்பெயின் நகரில் உள்ள ப்ளூ வாட்டர் என்ற ஏரி, மீன்பிடித்தலுக்கு பிரபலமானது. பல விதமான மீன்களை பிடிப்பதை பொழுது போக்காக வைத்துள்ள மீனவர்கள் இந்த ஏரிக்கு வந்து மீன்பிடிப்பது வழக்கம். ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆன்டி ஹாக்கெட், 42, என்ற மீனவர், சமீபத்தில் இந்த ஏரிக்கு வந்து … Read more

தென்னாப்பிரிக்காவில் 10 சதவீதம் ஊதிய உயர்வு கோரி அரசாங்க கருவூலத்தை முற்றுகையிட்ட அரசு ஊழியர்கள்..!

தென் ஆப்ரிக்காவில், ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் அரசாங்க கருவூலத்தை முற்றுகையிட்டனர். விலைவாசி உயர்வை காரணம் காட்டி, பத்து சதவீத ஊதிய உயர்வு வழங்குமாறு, அரசு ஊழியர்கள் மாதக்கணக்கில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாட்டின் மொத்த வருவாயில், மூன்றில் ஒரு பங்கு அரசு ஊழியர்களுக்கு செலவிடப்படுவதாக தெரிவித்த தென் ஆப்ரிக்க அரசு 3 சதவீத ஊதிய உயர்வு வழங்க சம்மதம் தெரிவித்தது. அதனை ஏற்க மறுத்து அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். … Read more

இந்தோனேஷிய நிலநடுக்கத்தில் பலி ௨௬௮ ஆக உயர்வு| Dinamalar

சியான்சுர், இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, ௨௬௮ஆக உயர்ந்துள்ளது. மேலும், ௧௫௧ பேரை காணவில்லை. இதற்கிடையே, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் உள்ள சியான்சுரில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது; இது, ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது. இந்த நில நடுக்கத்தால் பள்ளி, மருத்துவமனை மற்றும் ஏராளமான வீடுகள் இடிந்தன. … Read more

18 ஆண்டில் 14 தலைமை தேர்தல் கமிஷனர்கள் உச்ச நீதிமன்றம் வேதனை| Dinamalar

புதுடில்லி :’தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக, அரசியல் சாசனம் பெரிதாக குறிப்பிடாததால் அது இஷ்டத்துக்கு மீறப்படுகிறது. ஆனால், ௭௨ ஆண்டுக்குப் பின்னும் உரிய சட்டம் இயற்றப்படவில்லை’ என, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வேதனை தெரிவித்துள்ளது. தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமனங்களை, உச்ச நீதிமன்றத்தில், ‘கொலீஜியம்’ முறை இருப்பது போல் தேர்வு செய்ய உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை, நீதிபதி … Read more

உலகக்கோப்பையில் வெற்றி பெற வேண்டி மெக்சிகோவில் குழந்தை ஏசு சிலைக்கு கால்பந்து அணி ஜெர்சியை அணிவித்த ரசிகர்கள்..!

மெக்சிகோவில் குழந்தை ஏசு சிலைக்கு, அந்நாட்டு கால்பந்து அணியின் ஜெர்சியை அணிவித்து, ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். டகுபா என்ற நகருக்கு அருகேயுள்ள சான் மிகுவல் ஆர்கேஞ்சல் என்ற தேவாலயத்தில், உலகக்கோப்பை கால்பந்து தொடரில் தங்கள் அணி வெற்றிப்பெற வேண்டி பலர் பிரார்த்தனை செய்தனர். 1970ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரின்போதும், அங்கு கால்பந்து ரசிகர்கள் இவ்வாறு பிரார்த்தனை செய்வது வழக்கம் என கூறப்படுகிறது. Source link

அல்பேனியாவின் வடக்குப்பகுதியில் கனமழை காரணமாக கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன..!

ஷ்கோத்ரா நகரில் லீட் மசூதி வெள்ளநீரால் சூழப்பட்டுள்ள நிலையில், அதன் அருகிலிருந்த பாலமும், புனா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இடிந்தது. அல்பேனியாவின் வடக்குப்பகுதியில் கனமழை காரணமாக, கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து, மக்களை மீட்புக்குழுவினர் வெளியேற்றி வருகின்றனர். அல்பேனியா, நீர்மின் உற்பத்தியை மட்டுமே நம்பியுள்ளதால், அதற்காக இரண்டு அணைகளில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. 24 மணி நேரம் பெய்த தொடர் மழையால், அணையில் இருந்து நீரை வெளியேற்றியதால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதாக, தகவல்கள் … Read more