தென்னாப்பிரிக்காவில் 10 சதவீதம் ஊதிய உயர்வு கோரி அரசாங்க கருவூலத்தை முற்றுகையிட்ட அரசு ஊழியர்கள்..!

தென் ஆப்ரிக்காவில், ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் அரசாங்க கருவூலத்தை முற்றுகையிட்டனர்.

விலைவாசி உயர்வை காரணம் காட்டி, பத்து சதவீத ஊதிய உயர்வு வழங்குமாறு, அரசு ஊழியர்கள் மாதக்கணக்கில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாட்டின் மொத்த வருவாயில், மூன்றில் ஒரு பங்கு அரசு ஊழியர்களுக்கு செலவிடப்படுவதாக தெரிவித்த தென் ஆப்ரிக்க அரசு 3 சதவீத ஊதிய உயர்வு வழங்க சம்மதம் தெரிவித்தது. அதனை ஏற்க மறுத்து அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.