பிரேசில் அதிபர் தேர்தல்: மீண்டும் வெற்றி பெறுவாரா ஜெயீர் போல்சனரோ..?

பிரேசிலியா, உலகின் 4-வது மிகப்பெரிய ஜனநாயக நாடான பிரேசிலில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் மக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ஜெயீர் போல்சனரோ மீண்டும் போட்டியிடுகிறார். அவர் உள்பட மொத்தம் 9 பேர் அதிபர் பதவிக்கான போட்டியில் களத்தில் … Read more

இந்தோனேசியா: கால்பந்து ரசிகர்கள் வன்முறையில் 174 பேர் உயிரிழந்த சம்பவம்- அந்நாட்டு அதிபர் இரங்கல்

ஜகார்த்தா, இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணம் மலாங் நகரில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்று முன்தினம் கால்பந்து போட்டி நடந்தது. இதில் உள்ளூர் அணியான அரேமா மற்றும் பெர்செபயா சுரபயா அணிகள் களம் கண்டன. கால்பந்து போட்டியை காண சுமார் 42 ஆயிரம் பார்வையாளர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர். அவர்கள் அனைவருமே அரேமேனியாக்கள் என்று அழைக்கப்படும் அரேமா கால்பந்து அணியில் ரசிகர்கள் ஆவர். வீண் சச்சரவுகளை தவிர்க்கும் பொருட்டு பெர்செபயா சுரபயா கால்பந்து அணியின் ரசிகர்கள் யாரும் மைதானத்தில் … Read more

மெக்சிகோவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது – 3 வீரர்கள் உயிரிழப்பு

மெக்சிகோ சிட்டி, மெக்சிகோ நாட்டின் கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று, தென்கிழக்கு மாகாணமான தபாஸ்கோவில் கவுதமலா நாட்டு எல்லைக்கு அருகே வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. ஹெலிகாப்டரில் விமானிகள் உள்பட கடற்படை வீரர்கள் 5 பேர் இருந்தனர். இந்த ஹெலிகாப்டர் தபாஸ்கோவில் உள்ள சென்ட்லா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். எனினும் அதற்குள் … Read more

இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு அமல்..!

இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வரும் என அந்நாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. 92 ரக பெட்ரோலின் விலையில் 40 ரூபாய் குறைக்கப்பட்டு 410 ரூபாய்க்கும், 95 ரக பெட்ரோலின் விலையில் 30 ரூபாய் குறைக்கபப்ட்டு 510 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பிற எரிப்பொருள்களின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் பெட்ரோல் விலையை குறைக்க உள்ளதாக வெளியான தகவல் இலங்கை மக்களுக்கு … Read more

உக்ரைன் மீதான போரை முடிவிற்கு கொண்டு வருமாறு ரஷ்ய அதிபர் புடினுக்கு போப் பிரான்சிஸ் வேண்டுகோள்..!

உக்ரைன் மீதான போரை முடிவிற்கு கொண்டு வருமாறு ரஷ்ய அதிபர் புடினுக்கு போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்தார். வாடிகனில் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் பொது மக்களிடையே பேசிய போது, உக்ரைனில் நிகழும் வன்முறை மற்றும் மரணச்சூழலை நிறுத்த வேண்டும் என புடினை கேட்டுக் கொண்டார். அமைதியை ஏற்படுத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, திறந்த மனதுடன் சமாதானத்திற்கு முயற்சிக்க வேண்டும் என போப் பிரான்சிஸ், பயங்கரமான இந்த போரை முடிவிற்கு கொண்டு வர சர்வதேச நாடுகள் அனைத்து முன் … Read more

அமெரிக்காவை தாக்கிய புயல்: பலி எண்ணிக்கை அதிகரிப்பு| Dinamalar

நியூயார்க் : அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கிய மிக கடுமையான புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை, 47 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயன் என்ற கடுமையான சூறாவளி புயல், செப்., 28ம் தேதி தாக்கியது. அமெரிக்காவை தாக்கிய மிக மோசமான புயல்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.இந்த புயல் கரையை கடந்தபோது, மணிக்கு 241 கி.மீ., வேகத்தில் கடுமையான சூறாவளி காற்று வீசியது. பலத்த மழை பெய்தது. பல பகுதிகளில் கடல் நீர், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. … Read more

விண்வெளி குப்பைகள் தொடர்பான புதிய சட்டத்தை உருவாக்கியது அமெரிக்கா

Space Pollution vs USA: விண்வெளி ஆய்வுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் விண்வெளி குப்பைகள், பிரபஞ்சத்தில் உள்ள சுற்றுப்பாதை குப்பைகளின் அபாயத்தை சமாளிப்பதற்கான புதிய விதிகளின் மீது அமெரிக்க எம்.பிக்கள் வாக்களித்தனர். “இது அதிக பொறுப்புணர்வைக் குறிக்கும் மற்றும் சுற்றுப்பாதை குப்பைகளை அதிகரிக்கும் மோதல்களை குறைப்பது மற்றும் விண்வெளி தகவல் தொடர்பு தோல்விகளை குறைக்கும் முயற்சியில் வகுப்பட்ட விதிகள்” என்று யுனைடெட் ஸ்டேட்ஸ் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் FCCyஇன் தலைவர் ஜெசிகா ரோசன்வொர்செல் கூறினார். இந்த புதிய விதிகள் 4-0 என்ற வாக்கெடுப்பில் … Read more

புளோரிடாவை தாக்கிய இயன் புயல்: பலி 44 ஆக அதிகரிப்பு: பிரதமர் இரங்கல்| Dinamalar

புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கிய இயன் என்ற கடுமையான சூறாவளி புயலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு, நமது பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த புதன்கிழமை(செப்.,28) இயன் என்ற என்ற சூறாவளி கரையை கடந்தது. அமெரிக்காவை தாக்கிய மிகவும் மோசமான சூறாவளிகளில் இதுவும் என கூறப்படுகிறது. இதனால், புளோரிடா கடுமையான பேரழிவை சந்தித்துள்ளது. வீடுகள், உணவகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த புயல் … Read more

இந்திய வரலாற்றில் இருண்ட ஆண்டு 1984: அமெரிக்க செனட்டர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: சீக்கிய கலவரம் நடந்த 1984ம் ஆண்டு, இந்தியாவின் நவீன வரலாற்றில், இருண்ட ஆண்டாக அமைந்து விட்டதாக அமெரிக்க செனட்டர் பாட் டூமே கூறியுள்ளார். கடந்த 1984ம் ஆண்டு, அக்.,31ம் தேதி முன்னாள் பிரதமர் இந்திரா, சீக்கிய சமுதாயத்தை சேர்ந்த பாதுகாவலர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து டில்லி உள்ளிட்ட பல நகரங்களில் சீக்கியர்களை குறி வைத்து கலவரம் வெடித்தது. அதில் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் பென்சில்வேனியா … Read more

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டி முடிவால் கலவரம்: ரசிகர்கள் மோதல்; 127 பேர் பலி

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட வன்முறையில் 127 பேர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தோனேசியாவில் உள்ளூர் கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் கிழக்கு ஜாவாவில் நேற்று (சனிக்கிழமை) நடந்த போட்டியில் அரெமா அணியும், பெர்சிபையா சுராபாயா ஆகிய அணிகள் மோதின. இதில் 3-2 என்ற கோல் கணக்கில் பெர்சிபையா அணி வெற்றி பெற்றது. சுமார் 10 வருடங்களுக்கு பின்னர் அரெமா அணி தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் கோபம் கொண்டு மைதானத்துக்குள் நுழைந்தனர். இதனால் … Read more