நியூயார்க்கின் சில பகுதிகளில் கழிவுநீரில் போலியோ வைரஸ்| Dinamalar

கெரோனா வைரஸ் பரவி உலகத்தை ஆட்டிப்படைத்ததையடுத்து எந்த வைரஸ் என்றாலும் உலகம் முழுதும் நடுக்கம் ஏற்படுகிறது. தற்போது நியூயார்க்கின் சில பகுதிகளில் போலியோ வைரஸ் பரவுகிறது. இதற்கான காரணத்தை ஆய்வு செய்ய சுகாதாரத்துறைக்கு நியூயார்க் கவர்னர் கேத்தி ேஹாச்சுல் உத்தரவிட்டார். அவர்கள் பல இடங்களில் கழிவுநீர் மாதிரிகளை எடுத்து சோதனை செய்தனர். ஆய்வில் 3 இடங்களில் சேகரிக்கப்பட்ட கழிவுநீரில் போலியோ வைரஸ் இருப்பது உறுதியானது. நியூயார்க்கில் பேரிடர் அவசர நிலையை கவர்னர் அறிவித்துள்ளார். கெரோனா வைரஸ் பரவி … Read more

பூனையின் மீது கொண்ட காதல்! வீட்டையே பூனை அருங்காட்சியமாக மாற்றிய தம்பதி!

அமெரிக்காவின் வின்கான்சின் பகுதியிலுள்ள மேனோமோனி ஃபால்ஸ் என்கிற கிராமப்புறத்தில் வசிப்பவர்கள் ஷாவ்ன் ரெட்னர் மற்றும் அவரது மனைவி ஹிலாரி சீகல் ரெட்னர்.  இவர்கள் பூனைகளை பாதுகாப்பதற்காகவும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பதற்காகவும் தனது வீட்டையே பூனை அருங்காட்சியமாக மாற்றியுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.  கடந்த 2020ம் ஆண்டு தான் இவர்கள் அவர்களது வீட்டை பூனை அருங்காட்சியமாக மாற்றியுள்ளது, அப்போது இந்த அருங்காட்சியகத்தில் 4000 பூனை உருவங்களை பார்வைக்காக வைத்தனர்.  இந்த ஆண்டு ஜூலையில் மேலும் 3000 … Read more

வடகொரியாவில் ஆட்சியை கவிழ்க்க வெளிநாடுகள் சதி செய்தால் அணு ஆயுத தாக்குதல் நடத்த கிம் ஜாங் உன்னுக்கு அதிகாரம்

பியாங்யாங்: எதிரி நாடுகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா ஆகிய 9 நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. அமெரிக்காவிடம் 5,800 அணு ஆயுதங்களும், ரஷ்யாவிடம் 6,375 அணு ஆயுதங்களும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. வடகொரியாவிடம் சுமார் 40 அணு ஆயுதங்கள் இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் வடகொரிய நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் அணு ஆயுதம் தொடர்பான புதிய … Read more

பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்| Dinamalar

லே: பப்புவா நியூ கினியாவின் மொரோப் மாகாணத்திற்கு உட்பட்ட மிக பெரிய துறைமுக நகரம் லே உள்ளது. இந்நகரில் இருந்து 65 கி.மீ. தொலைவில் இன்று(செப்.,11) காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாவது என அமெரிக்க புவி அறிவியல் ஆய்வு அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. லே: பப்புவா நியூ கினியாவின் மொரோப் மாகாணத்திற்கு உட்பட்ட மிக பெரிய துறைமுக நகரம் லே உள்ளது. … Read more

முக்கிய நகரை மீட்டது உக்ரைன் ராணுவம்

கீவ்: உக்ரைனின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள குபியான்ஸ்க் நகரை அந்த நாட்டு ராணுவம் ரஷ்யாவிடம் இருந்து மீட்டுள்ளது. நேட்டாவில் இணைய முயன்றதாக குற்றம் சாட்டி கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகளுக்கும் இடையே நேற்று 199-வது நாளாக போர் நீடித்தது. இதுவரை 14,000-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்திருப்பதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. எனினும் உயிரிழப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கக்கூடும் என்று தன்னார்வ தொண்டு அமைப்புகள் … Read more

உலக மக்களை உலுக்கிப்போட்ட 9/11 தாக்குதல்கள்: இன்று 21 ஆவது நினைவு தினம்

உலக வரலாற்று பக்கங்களை திருப்பிப்பார்த்தால், யாராலும் மறக்க முடியாத, மன்னிக்க முடியாத பல பயங்கரவாத தாக்குதல்களை நாம் காண்போம். அதில், அமெரிக்காவில் நடந்த இரட்டைக் கோபுர தாக்குதல் மிக முக்கியமானது. இந்த தாக்குதல் அமெரிக்காவை மட்டுமல்லாமல் உலகையே கதிகலங்கச்செய்தது. அந்த பயங்கரவாத சம்பவத்தின் நினைவு தினம் இன்று.  2001 செப்டம்பர் 11 அன்று காலை சுமார் 8.45 மணிக்கு, அல் கொய்தா பயங்கரவாதிகள் உலக வர்த்தக மையத்தின் மீது விமானங்கள் கொண்டு தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் … Read more

வட கொரியாவின் சட்டம் அமைதிக்கு விடுத்த மிரட்டல் – பிரான்ஸ் கருத்து

பாரிஸ்: வட கொரியாவின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் சட்ட அறிவிப்பு சர்வதேச அமைதிக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டல் என்று பிரான்ஸ் நாடு கருத்து தெரிவித்துள்ளது. வடகொரியா நாடானது அவ்வப்போது மேற்கொண்டு வரும் அணு ஆயுத சோதனை கொரிய தீபகற்பத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வடகொரியா மேற்கொள்ளும் அணு ஆயுத சோதனைகளால் தென்கொரியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அந்நாடு குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் போர் அச்சுறுத்தல் சூழலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் சட்டத்தை வடகொரியா நிறைவேற்றியுள்ளது. திரும்பப் பெற … Read more

பேருந்தின் மீது எரிபொருள் டேங்கர் லாரி மோதி தீ விபத்து.. 18 பேர் உடல்கருகி உயிரிழப்பு!

மெக்சிகோவில் பேருந்தின் மீது எரிபொருள் டேங்கர் லாரி மோதி ஏற்பட்ட தீ விபத்தில், 18 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். நேற்று ஹிடால்கோவில் இருந்து மாண்டேரி நோக்கி பயணிகளுடன் சென்ற பேருந்து Tamaulipas பகுதியில் வந்து கொண்டிருந்த போது, எரிபொருள் ஏற்றிச் சென்ற லாரியின் டேங்கர், பேருந்தின் மீது மோதியது. இதில் லாரியில் எரிபொருள் கசிந்து இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 18 பேர் உயிரிழந்த நிலையில், உயிர் தப்பிய லாரி டிரைவரிடம் … Read more

பப்புவா நியூ கினியாவை பதறவைத்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு

பசிபிக் பெருங்கடலின் ‘Ring of Fire’ என்றழைக்கப்படும் பகுதியில், பப்பூவா நியூ கினியா நாடு அமைந்துள்ளது. அதாவது அப்பகுதிகளில், செயலில் உள்ள எரிமலைகள் அதிகமிருக்கும். அதுமட்டுமின்றி அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதும் வழக்கம்.  அந்த வகையில், பப்பூவா நியூ கினியாவின் கிழக்கு பகுதியில், இன்று காலை மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளளது. ரிக்டர் அளவு கோளில் 7.6 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால், கடலோர நகரமான மடாங்க் மற்றும் அதன் சுற்றுவட்டார நிலப்பகுதிகளில் உள்ள கட்டடங்கள் கடுமையாக … Read more

இங்கிலாந்து மன்னராக முடிசூடினார் மூன்றாம் சார்லஸ் – ராணி வழியில் நடப்பேன் என உறுதி

லண்டன்: இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் நேற்று பொறுப்பேற்றார். ராணி இரண்டாம் எலிசபெத் போல், நாட்டுக்காக அரசியல் சாசன விதிமுறைகளைப் பின்பற்றி அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய முதல் டி.வி. உரையில் மன்னர் மூன்றாம் சார்லஸ் கூறினார். இங்கிலாந்து ராணியின் மறைவுக்குப்பின் இளவரசர் சார்லஸ் உடனடியாக மன்னர் மூன்றாம் சார்லஸாக ஆனார். இதற்கான முறையான அறிவிப்பை, பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையின் அதிகாரப்பூர்வ ஏற்பு குழு நேற்றுஅறிவித்தது. … Read more