ஆப்ரிக்காவில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு..!- கான்வாய் வண்டி மீது ஐஇடி வெடிகுண்டு தாக்குதல்..?

மேற்கு ஆப்பிரிக்கா புர்கினா பாசோவில் ஐஇடி குண்டுவெடிப்பில் 35 பேர் கொல்லப்பட்டனர் எனவும் 37 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவின் புர்கினா பாசோவின் ஜிஹாதிகளால் பாதிக்கப்பட்ட வடக்கில் பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனங்களளில்ஐஇடி குண்டு வெடித்ததில் 35 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 37 பேர் காயமடைந்தனர் என்று சஹேல் பிராந்தியத்தின் ஆளுநர் கூறினார். மேலும் “பொதுமக்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று, வெடிகுண்டு சாதனத்தில் மோதியது. தற்காலிக எண்ணிக்கையில் 35 பேர் இறந்துள்ளனர் … Read more

லிஸ் ட்ரஸ் அரசுக்கு உறுதியான ஆதரவை அளிக்கிறேன்: போரிஸ் ஜான்சன்

லண்டன்: பிரிட்டனின் பிரதமராக பதவியேற்றுள்ள லிஸ் ட்ரஸ் தலைமையிலான அரசுக்கு உறுதியான ஆதரவை அளிப்பதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சன் 10 டவுனிங் தெருவில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியேறினார். அப்போது செய்தியாளர் சந்திப்பில் போரிஸ் ஜான்சன் பேசும்போது, “எனது உறுதியான ஆதரவை லிஸ் ட்ரஸ் தலைமையிலான அரசுக்கு வழங்குகிறேன். புதிய அரசின் ஒவ்வொரு படியையும் நான் ஆதரிப்பேன். எதிர்காலத்தில் பிரதமர் நாட்டை நல்ல முறையில் … Read more

கோழிக்கறி ஆர்டர் செய்த நபருக்கு வந்த எலும்புத் துண்டுகள்.. சாப்பிட்டுவிட்டதாக கூறி டெலிவரி பையன் மன்னிப்பு கடிதம்..!

ஆன்லைனில் பொறித்த கோழிக்கறிக்கு ஆர்டர் செய்த நபருக்கு, வெறும் எலும்புகள் வந்துள்ளன. டேமியன் சான்டர்ஸ் என்ற நபர், பசித்ததால் ஆன்லைனில் பொறித்த கோழிக்கறிக்கு ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு டெலிவரி செய்யப்பட்ட பார்சலை பிரித்து பார்த்துள்ளார். அதில் பொறித்த கோழிக்கறி துண்டுகளுக்கு பதில் எலும்புகளும், அதிக பசி ஏற்பட்டதால் அதை தாம் சாப்பிட்டு விட்டதாக கூறி, மன்னிப்பு கேட்டு டெலிவரி பையன் எழுதி வைத்த துண்டுசீட்டும் இருந்துள்ளது. இக்காட்சியை வீடியோவாக பதிவிட்டு சமூகவலைதள பக்கத்தில் டேமியன் சான்டர்ஸ் … Read more

10 நாகை மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு| Dinamalar

கொழும்பு: கடந்த ஆக.,22 ம் தேதி, எல்லை கடந்து வந்ததாக, தமிழகத்தை சேர்ந்த, 10 நாகை மாவட்ட மீனவர்களை இலங்கை அரசு கைது செய்தது. இந்நிலையில் இன்று(செப்.,06) கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகை மீனவர்கள் 10 பேரையும் இலங்கை திருகோணமலை நீதிமன்றம் விடுதலை செய்து, உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு: கடந்த ஆக.,22 ம் தேதி, எல்லை கடந்து வந்ததாக, தமிழகத்தை சேர்ந்த, 10 நாகை மாவட்ட மீனவர்களை இலங்கை அரசு கைது செய்தது. இந்நிலையில் இன்று(செப்.,06) கைதாகி … Read more

பாலியல் குற்றவாளிகள் வசிக்க ஆடம்பர வீடுகளை கொண்ட ‘தனி’ கிராமம்!

உலகில் தனித்துவம் நிறைந்த பல கிராமங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். மருத்துவர்கள் அதிகம் வாழும் கிராமம் அல்லது வழக்கறிஞர்கள் அதிகம் உள்ள கிராம், அல்லது விளையாட்டு வீரர்களுக்கு புகழ்பெற்ற கிராமம் என பல விதமான கிராமங்களை பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், ஒரு கிராமத்தில் உள்ள பெரும்பாலானோர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்பது போன்ற  தகவலை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது உங்களுக்கு சற்று விசித்திரமாகத் தோன்றும், ஆனால் அது உண்மைதான். பாலியல் குற்றவாளிகளுக்காகவே, அமெரிக்காவின் இந்த கிராமம் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது.  … Read more

பிரிட்டனின் புதிய இரும்புப் பெண்மணி லிஸ் ட்ரஸுக்கு காத்திருக்கும் சவால்கள்

லண்டன்: பிரிட்டனின் 56-வது பிரதமராகி இருக்கிறார் கன்சர்வேடிவ் கட்சியின் லிஸ் ட்ரஸ். மேலும் பிரிட்டனின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்ற போட்டி கடந்த ஒருமாதமாக தீவிரமாக நடந்து வந்தது. இதில் வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸுக்கும் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்குக்கும் இடையே நடந்த இறுதிப் போட்டியில் லிஸ் ட்ரஸ் 57.4 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். ரிஷி சுனக்குக்கு 42.6 சதவீத வாக்குகள் … Read more

லண்டனில் திருடப்பட்ட கார் பாகிஸ்தானில் மீட்பு

கராச்சி: பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் திருடப்பட்ட சொகுசு கார் பாகிஸ்தானின் கராச்சி நகரில் மீட்கப்பட்டு உள்ளது. பிரிட்டனை சேர்ந்த பென்ட்லி நிறுவனம் பென்ட்லி முல்சானே ரக கார்களை தயாரிக்கிறது. இந்த வகை கார் ரூ.6 கோடி முதல் ரூ.10 கோடி வரையில் விற்கப்படுகிறது. பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் அண்மையில் பென்ட்லி முல்சானே கார் திருடுபோனது. இதுதொடர்பாக அந்த நாட்டு போலீஸார் விசாரணை நடத்தி பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு கார் கடத்திச் செல்லப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதுகுறித்து பிரிட்டிஷ் அரசு … Read more

இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள அகதிகளை திரும்பப் பெற குழு அமைத்தது இலங்கை அரசு

கொழும்பு: இலங்கையில் 1983-ல் உள்நாட்டுப் போர் வெடித்ததில் இருந்து அந்நாட்டின் மிகப்பெரிய இன சிறுபான்மையினரான தமிழர்கள் பாதுகாப்புக்காக தமிழகம் வரத்தொடங்கினர். இலங்கை தமிழர்களில் சுமார் 12 சதவீதம் பேர் தென்னிந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் அங்குள்ள தமிழர்கள் சமீபத்தில் தமிழ் நாட்டுக்கு வந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் இருந்து இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு வசதியாகவும் இலங்கை தமிழர்களின் மீள்குடியேற்றத்தை திறம்பட மேற்கொள்ளவும் குழு ஒன்றை இலங்கை அதிபரின் செயலாளர் சாமன் ஏகநாயக … Read more

“கன்சர்வேடிவ் கட்சிக்காரர்கள் ஒரே குடும்பம்": தோல்விக்கு பிறகு பேசிய ரிஷி சுனக்

லண்டன்: இங்கிலாந்து நாட்டின் பிரதமர் தேர்தலில் தோல்வியை தழுவிய சில நிமிடங்களுக்குப் பிறகு, ரிஷி சுனக் திங்கள்கிழமை (செப்டம்பர் 5, 2022) புதிதாக நியமிக்கப்பட்ட பிரிட்டிஷ் பிரதமர் லிஸ் டிரஸிற்கு ஆதரவாக ஒன்றுபட்டு நிற்குமாறு கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார். ரிஷி சுனக் 60,399 வாக்குகளைப் பெற்றார். அவரது சக கட்சித் தலைவர் ட்ரஸ் 81,326 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். ரிஷி சுனக், தனது தோல்விக்கு பிறகு, “கன்சர்வேடிவ் கட்சிக்காரர்கள் ஒரே குடும்பம்” என்று … Read more

சீனாவில் நிலநடுக்கம் 7 பேர் உயிரிழப்பு

சிச்சுவான்: சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 7 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து சீன அரசின் ஊடகமான சிஜிடி என் கூறியதாவது. சீனாவின் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் மதியம் 1 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகுகளாகப் பதிவானது. லூடிங் நகரத்தை மையமாகக் கொண்டு பூமிக்கடியில் 16 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்துக்கு சிச்சுவான் தலைநகர் செங்குடுவில் 7 பேர் உயிரிழந்தனர். பல … Read more