சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கு: இலங்கையை சேர்ந்தவரின் தமிழக சொத்துகள் முடக்கம்

புதுடெல்லி, இலங்கையை சேர்ந்தவர் குணசேகரன் என்ற பெரமா குமார். போதைப்பொருள் கடத்திய வழக்கில் கடந்த 2011-ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஒரு தனி கோர்ட்டு, குணசேகரனுக்கும், வேறு சிலருக்கும் சிறைத்தண்டனை விதித்தது. தண்டனை காலம் முடிந்தவுடன், அவர்கள் தங்களது அடையாளத்தை மாற்றிக்கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர். குணசேகரனும், அவருடைய மகன் திலீப்பும் போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தி இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்தனர். தமிழ்நாட்டில் சொத்துகளும் வாங்கினர். இந்தநிலையில், அவர்கள் மீது அமலாக்கத்துறை, சட்டவிரோத பண … Read more

உய்குர் முஸ்லிம்களை சித்ரவதை செய்யும் சீனா – ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் குற்றச்சாட்டு

ஜெனீவா: உய்குர் முஸ்லிம்களை சீன அரசு சித்ரவதை செய்வதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. சீனாவின் வடமேற்கில் ஜின்ஜியாங் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உய்குர் இனத்தை சேர்ந்த சுமார் 1.2 கோடி முஸ்லிம்கள் வசிக்கின்றனர். கடந்த 20-ம் நூற்றாண்டில் ஜின் ஜியாங் பகுதி சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 1949-ம் ஆண்டில் சீன ராணுவம் ஜின்ஜியாங்கை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அப்போது முதலே சீன ராணுவத்தை எதிர்த்து உய்குர் முஸ்லிம்கள் … Read more

சீனாவில் புதிதாக 2,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 1,818 பேருக்கு … Read more

இந்தியாவில் இருந்து உணவுப் பொருள் இறக்குமதி – பாகிஸ்தான் அரசு திட்டம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் முன்னெப் போதும் இல்லாத வகையில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழையால் அந்நாட்டின் மூன்றில் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் 3 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்துக்கு இதுவரை 1,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. விளைநிலங்களில் பயிர்கள் அழிந்ததால் தானியங்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பற்றாக்குறையும் அதனால் … Read more

அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தல் முடிவு : எதிர்க்கட்சி பெண் தலைவர் சாராபாலின் தோல்வி

வாஷிங்டன், அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபையில் அலாஸ்கா மாகாணத்தில் இருந்து எம்.பி.யாக இருந்து வந்த டான் யெங் கடந்த மார்ச் மாதம் மரணம் அடைந்தார். இதனால் அங்கு கடந்த 16-ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது. அதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் மேரி பெல்டோலாவும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான பெண் தலைவர் சாரா பாலினும் போட்டியிட்டார். இவர் அலாஸ்கா மாகாணத்தின் கவர்னராக இருந்தவர். 2008-ம் ஆண்டு துணை ஜனாதிபதி பதவிக்கு ஜான் … Read more

விண்வெளியில் அரிசி சாகுபடிசீன விஞ்ஞானிகள் சாதனை| Dinamalar

பீஜிங்:விண்வெளி நிலைய ஆய்வகத்தில் நெற்பயிரை வளர்த்து, சீனா சாதனை படைத்துள்ளது. விண்வெளியின் சுற்று வட்ட பாதையில் நிரந்தர விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்கும் திட்டத்துடன் சீனா பணியாற்றி வருகிறது. இந்நிலையில், சீன விண்வெளி நிலையத்தின், ஆய்வகத்தில் விதைகளை கொண்டு நெற்பயிர்களை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். கடந்த ஜூலையில் தொடங்கிய இதற்கான பணிகளில், இரு வகை நெற்பயிர் விதைகளை அவர்கள் பயன்படுத்தினர். இதில், நெற்பயிர் 30 செ.மீ., உயரத்திற்கு வளர்ந்து விஞ்ஞானிகளை ஆச்சரியமடைய செய்து உள்ளது. விண்வெளியில் … Read more

அமெரிக்காவில் 2-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.6% சரிவு

வாஷிங்டன், அமெரிக்காவின் வணிக அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2022-ம் ஆண்டின் ஜூன் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி 0.6 சதவீதம் என்ற அளவில் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்த தனியார் பங்கு முதலீடு, பலவீனமான குடியிருப்பு அல்லாத நிலையான முதலீடு மற்றும் மத்திய அரசு மற்றும் உள்ளூர் மற்றும் மாநில அரசாங்கங்களின் குறைந்த செலவினம் ஆகியவையே இந்த சரிவுக்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. அதே சமயம் அங்கு நுகர்வு செலவுகள் … Read more

அபிதாபியில் ஹிந்து கோவில் அமைச்சர் ஜெய்சங்கர் புகழாரம்| Dinamalar

அபுதாபி: ”ஐக்கிய அரபு எமிரேட்சில் கட்டப்பட்டு வரும் ஹிந்து கோவில், அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான சின்னம்,” என, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் புகழ்ந்துள்ளார். மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில், முதல் ஹிந்து கோவில் கட்டுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஏராளமான இந்தியர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், அங்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ள அமைச்சர் ஜெய்சங்கர், அந்த கோவில் கட்டுமானத்தை பார்வையிட்டார். இது குறித்து அவர் … Read more

கடல் வளத்தை பாதுகாக்க நடவடிக்கை – உலக வர்த்தக அமைப்பு உறுதி

ஜெனீவா, சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகர் ஜெனீவாவில் உலக வர்த்தக அமைப்பின் 12-வது மந்திரிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கடலில் மீன்வளத்தை பெருக்கும் வகையில் மீன்பிடித்தலை கட்டுப்படுத்தி கடல் வளத்தை உறுதி செய்வது தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டது. நீடித்த வளர்ச்சி இலக்கிற்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உடன்பாடாக கருதப்படுகிறது. மீன்பிடித்தல் சலுகை தொடர்பான பேச்சுவார்த்தைகள் நீண்ட காலத்திற்கு மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் குறித்து உலக வர்த்தக அமைப்பின் துணை பொதுச்செயலாளர் ஷியாங்சென் சாங் விளக்கினார். மீன்பிடித்தல் … Read more

இன்று உலக தேங்காய் தினம்| Dinamalar

தாயைப் போல தாராள குணம் கொண்டது தென்னை. அடி முதல் நுனி வரை அத்தனை உறுப்பும் மனிதனுக்கு தேவைப்படுகிறது. இந்தத் தென்னை குறித்த விழிப்புணர்வுக்காக செப்.2 ல் ‘உலக தேங்காய் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. ஆசியா முழுவதும் தென்னை பரவலாக இருந்தாலும், இலங்கை, இந்தியாவில் குறிப்பாக தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளாவில் அதிகம் சாகுபடியாகிறது. பாதாம், முந்திரி, பிஸ்தாவுக்கு இணையான ஊட்டச்சத்து தேங்காயில் உள்ளது. ஐந்து ஆண்டுகளில் மகசூல் தரக்கூடியது. அறுபது ஆண்டுகள் வாழும். தேங்காய் விளைச்சலில் உலகில் … Read more