பிரிட்டன் பிரதமர் தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன் : பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்பதை நிர்ணயிக்கும் பழமைவாத கட்சித் தலைவர் தேர்தல் பிரசாரம் முடிந்தது. இதைத் தொடர்ந்து ஓட்டுப்பதிவு துவங்குகிறது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகினார். ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக உள்ளவரே, பிரதமர் பதவியை வகிக்க முடியும். இதன்படி, கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல கட்டங்களாக நடந்து வந்தது. இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான … Read more

அமெரிக்காவில் 20,000+ முறை தேனீக்கள் கொட்டியதில் கோமா நிலைக்குச் சென்ற இளைஞர்

வாஷிங்டன்: அமெரிக்காவில் தேனீக்கள் 20,000-க்கும் மேற்பட்ட முறை கொட்டியதில் இளைஞர் ஒருவர் கோமா நிலைக்கு சென்ற சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தை சேந்தவர் ஆஸ்டின் பெல்லமி (20). தனது நண்பருக்காக பெல்லாமி எலுமிச்சை மரக் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார், அவ்வாறு ​​மர வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அவர் தவறி தேனீக்கள் கூட்டை வெட்டிவிட்டார். இதனைத் தொடர்ந்து ஆஸ்டினை சூழ்ந்த தேனிக்கள் அவரை முற்றிலுமாக சூழ்ந்துகொண்டு கொட்ட தொடங்கின. இதில் தேனீக்கள் அவரை 20,000-க்கும் மேற்பட்ட முறை … Read more

மழை, வெள்ளத்தால் பாகிஸ்தானில் காய்கறிகள், பழங்களின் விலை கடுமையாக உயர்வு.!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானில் காய்கறிகள், பழங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவாக பெய்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பயிர்கள் நீரில் மூழ்கின. அதோடு சாலைகள், பாலங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் சந்தைகளுக்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெங்காயம் தற்போது 300 ரூபாய்க்கும், 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது 200 ரூபாய்க்கும் … Read more

தினமும் இதை குடிக்கும் பழக்கம் இருக்கா? -அப்போ உங்களுக்கு ஆயுசு கெட்டி!

டீ, காபி குடிக்கும் பழக்கம் உலக அளவில் பெரும்பாலான மக்கள் மத்தியில் இருந்து வருகிறத. தினமும் மூணு வேள டீ குடிச்சாதாம்பா உடம்பு சுறுசுறுப்பா இருக்கு… இந்த மழை கிளைமேட்டுக்கு காபி குடிச்சா மனசுக்கு எவ்வளவு எனர்ஜியா இருக்கு தெரியுமா? என்று டீ, காபி பிரியர்கள் இந்த பானங்கள் குறித்து சிலாகிப்பது உண்டு. இன்றைய நவீன் யுகத்தில் கார்ப்பரேட் அலுவலகங்களில் லஞ்ச் ப்ரேக் என்ற வார்த்தை என்ற அளவுக்கு அன்றாடம் பயன்படுத்தப்படுகிறதோ அதே அளவுக்கு டீ பிரேக்கிற்கும் … Read more

“வரலாற்றின் போக்கை மாற்றிய தலைவர்” – மிகைல் கோர்போசேவுக்கு உலகத் தலைவர்கள் புகழஞ்சலி

மாஸ்கோ: சோவியத் யூனியனின் கடைசி அதிபராக அறியப்பட்ட மிகைல் கோர்பசேவ் வயது முதிர்வுக் காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. அமைதியின் பிம்பமாக கடந்த காலங்களில் அறியப்பட்ட மிகைல் கோர்போசேவ் மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவற்றில் சில: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்: ”சிறந்த அரசியல் பார்வைக் கொண்ட நபர். அரியத் தலைவர். வித்தியாசமான எதிர்காலம் சாத்தியம் என்பதை காண்பிக்க தனது முழு வாழ்க்கையையும் அவர் பணயம் வைத்தார்.” ஐ. நா. … Read more

சீன நிறுவனங்களுக்கு AI chip விற்பனை செய்வதை நிறுத்த அமெரிக்கா உத்தரவு.!

சீனாவுக்கு செயற்கை நுண்ணறிவு சிப்களை விற்பனை செய்வதை நிறுத்தி வைக்க அமெரிக்க நிறுவனங்களுக்கு  அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். முன்னணி அமெரிக்க நிறுவனங்களான என்விடியா மற்றும் AMD நிறுவனங்கள், இயந்திரங்களின் கற்றல் திறனை வேகப்படுத்தும் சிப்களை உற்பத்தி செய்து வரும் நிலையில், இந்த உத்தரவால் அந்நிறுவனங்களின் பங்குகள் 2 முதல் 3 சதவீதம் சரிவை கண்டுள்ளன. மேலும்,  A100 மற்றும் H100 chips விற்பனை தடையால், 400 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சிப் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக என்விடியா … Read more

புகழஞ்சலி: மிகைல் கோர்போசேவ் – உண்மையான அமைதியின் முகம்!

மாஸ்கோ: சோவியத் யூனியனின் கடைசி அதிபராக அறியப்பட்ட மிகைல் கோர்பசேவ் வயது முதிர்வுக் காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. 1931-ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி ரஷ்யாவின் பிரிவோல்னோயீல் பிறந்த மிகைல் கோர்பசேவ் தனது கிராமத்தில் நாஜிக்களின் ஊடுருவலை நேரில் கண்டதால் போரின் சாட்சியாக தனது சிறுவயது வாழ்க்கை மாறியதாக பலமுறை கூறியதுண்டு. தன்னுடைய 19 வயதில் சட்டம் பயில்வதற்காக மாஸ்கோ சென்ற இவர், கம்யூனிஸ்ட் கொள்கை மீது ஆர்வம் கொண்டு அக்கட்சியில் இணைந்து … Read more

உலகின் சிறந்த நாடாக பிரிட்டனை உருவாக்க இரவும்,பகலும் பாடுபடுவேன் – கன்சர்வேடிவ் கட்சி தொண்டர்களுக்கு உறுதியளித்த ரிஷி சுனாக்

பிரிட்டனை உலகின் மிகசிறந்த நாடாக உருவாக்க இரவும், பகலும் பாடுபடுவேன் என்று இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனாக் , கன்சர்வேடிவ் கட்சி தொண்டர்களுக்கு உறுதி அளித்துள்ளார். பிரிட்டனின் புதிய பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் வாக்குபதிவு வருகிற திங்களன்று நடைபெறவுள்ள நிலையில், லண்டனில் நேற்றிரவு இறுதிகட்ட பிரச்சாரம் நடைபெற்றது. புதிய பிரதமருக்கான தேர்வில் ரிஷி சுனாக்கிற்கும், வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. Source link

சூயஸ் கால்வாயில் சிக்கிய எரிபொருள் டேங்கர் கப்பல் 5 மணிநேரத்திற்கு பிறகு மீட்பு.!

சூயஸ் கால்வாயில் சிக்கிய எரிபொருள் டேங்கர் கப்பல் 5 மணிநேரத்திற்கு பிறகு மீட்கபபட்டது. போர்ச்சுக்கல்லில் இருந்து சவுதி அரேபிய செங்கடல் துறைமுகமான யான்புவை  நோக்கி புறப்பட்ட சிங்கப்பூரின் ‘அபினிட்டி வி’ என்ற சரக்கு கப்பல், தொழில்நுட்பக் கோளாறால் உலகின் முக்கிய நீர் வழித் தடங்களில் ஒன்றான எகிப்தின் சூயஸ் கால்வாயில் சிக்கியது. 252 மீட்டர் நீளமும் 45 மீட்டர் அகலமும் கொண்ட கப்பல், கால்வாயை மறித்துக் கொண்ட நிலையில், ஐந்து இழுவை படகுகளை கொண்டு அந்த சரக்கு … Read more

பாகிஸ்தான் வெள்ளத்தால் 30 லட்சம் குழந்தைகள் பாதிப்பு: யுனிசெப் அமைப்பு தகவல்

நியூயார்க்: பாகிஸ்தானில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தில் சிக்கி 30 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (யுனிசெப்) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக யுனிசெப் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: பாகிஸ்தானில் அண்மையில் வரலாறு காணாத மழை வெள்ளம் ஏற்பட்டது. இதனால் தண்ணீரால் பரவும் நோய்கள், வெள்ளத்தில் மூழ்கி உயிரிழப்பு, போதிய உணவின்றி ஊட்டச்சத்து குறைபாடு என பல்வேறு வழிகளிலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 30 லட்சம் குழந்தைகளாவது மனிதாபிமான … Read more