இடைக்கால பட்ஜெட் இலங்கை அதிபர் தாக்கல்| Dinamalar

கொழும்பு : பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், நாட்டை மீட்டெடுக்கும் வகையிலான இடைக்கால பட்ஜெட்டை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தாக்கல் செய்தார்.நம் அண்டை நாடான இலங்கை, வரலாறு காணாத நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. மக்களின் போராட்டங்களால் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. இலங்கை அதிபராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.இந்நிலையில், நாட்டின் இடைக்கால பட்ஜெட்டை, நிதி அமைச்சர் பொறுப்பையும் வகிக்கும் ரணில் விக்ரமசிங்கே அந்த நாட்டின் பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:இந்த … Read more

இடைக்கால பட்ஜெட்: இலங்கை அதிபர் தாக்கல்| Dinamalar

கொழும்பு : பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், நாட்டை மீட்டெடுக்கும் வகையிலான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே.நம் அண்டை நாடான இலங்கை, வரலாறு காணாத நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. மக்களின் போராட்டங்களால் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. இலங்கை அதிபராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இந்நிலையில், நாட்டின் இடைக்கால பட்ஜெட்டை, நிதி அமைச்சர் பொறுப்பையும் வகிக்கும் ரணில் விக்ரமசிங்கே அந்த நாட்டின் பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர் … Read more

ஆப்கனில் பஞ்சம் காரணமாக 60 லட்சம் பேர் பாதிக்க வாய்ப்பு – ஐ.நா. உயர் அதிகாரி எச்சரிக்கை

நியூயார்க்: தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கப் படைகள் கடந்த ஆண்டு வெளியேறின. இதைத் தொடர்ந்து தலிபான்கள் ஆட்சி மற்றும் அதிகாரத்தை கைப்பற்றினர். இதற்கு பல்வேறு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனிடையே அங்கு பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது கல்விக்காக கஜகஸ்தான் மற்றும் கத்தார் நாட்டுக்கு மாணவிகள் செல்லக்கூடாது என்றும் தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில், ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலில் ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான துணைப் பொதுச் செயலாளர் மார்ட்டின் … Read more

சோவியத் ரஷ்யாவின் முன்னாள் அதிபர் மைக்கேல் கோர்பச்சேவ் காலமானார்

சோவியத் ரஷ்யாவின் முன்னாள் அதிபர் மைக்கேல் கோர்பச்சேவ் காலமானார். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்ட நிலையில் அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92. ஸ்டாலினின் இரும்புத் திரைகளை நீக்கியதாக புகழ் பெற்றவர் கோர்பச்சேவ். சோவியத்தின் கடைசி தலைவர் என்றும் அழைக்கப்படுகிறார். 1985 முதல் 91 வரை ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த அவர் தமது 1990 முதல் 91 வரையிலான ஆட்சிக் காலத்தில் அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகம் செய்து ரஷ்யாவை புதிய பாதையில் … Read more

ஈராக் வன்முறையில் பலி 30 ஆக உயர்வு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாக்தாத் : ஈராக்கில் ஷியா பிரிவினர் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.மேற்காசிய நாடான ஈராக்கில் கடந்த ஆண்டு அக்டோபரில் பொதுத் தேர்தல் நடந்தது. இதில், ஷியா பிரிவு தலைவர் முக்தாதா அல்- சதரின் கட்சி 73 இடங்களை கைப்பற்றியது.ஆனால், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், இப்போது வரை அங்கு புதிய அரசு அமைக்கப்படவில்லை. இந்நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக அல் சதர் அறிவித்தார். … Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானை கட்டமைக்க ரூ.80 ஆயிரம் கோடி தேவை – திட்ட அமைச்சர் அசன் இக்பால் தகவல்

இஸ்லாமாபாத்: மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானை மறுகட்டமைப்பு செய்ய ரூ.80 ஆயிரம் கோடி தேவை என்று அந்நாட்டு திட்ட அமைச்சர் அசன் இக்பால் கூறியுள்ளார். பாகிஸ்தானில் முன்னெப் போதும் இல்லாத வகையில் கடந்தசில வாரங்களாக பெய்துவரும் கனமழையால் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் மாகாணங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அந்நாட்டு மக்கள் தொகையில் 15% பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பயிர்கள் மூழ்கியுள்ளன. இதுகுறித்து பாகிஸ்தான் திட்டமிடுதல் துறை … Read more

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் பதவிக்கு தமிழக வம்சாவளி பெண் அஞ்சலி அப்பாதுரை போட்டி

விக்டோரியா: கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் பதவிக்கு தமிழக வம்சாவளியை சேர்ந்த அஞ்சலி அப்பாதுரை போட்டியிடுகிறார். வடஅமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ள கனடாவில் 10 மாகாணங்கள் உள்ளன. ஒவ்வொரு மாகாணத்துக்கும் தனித்தனியாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பிரிட்டிஷ் கொலம்பியா புதிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அந்த மாகாண முதல்வராக ஜான் ஹோர்கன் (62) பதவி வகிக்கிறார். புற்றுநோய் பாதிப்பு … Read more

ஏமனில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: 10 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

சனா, ஏமனில் அந்ந நாட்டு அரசுக்கும், ஈரான் ஆதரவு பெற்று ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டதோடு, லட்சக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த சூழலில் நீண்டகால பேச்சுவார்த்தைக்கு பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் இரு தரப்பும் சண்டை நிறுத்தத்தை அறிவித்தன. ஆனாலும் சண்டை நிறுத்தத்தை மீறி அவ்வப்போது சிறிய அளவிலான மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. … Read more

சீன கம்யூனிஸ்ட் மாநாட்டையொட்டி பெய்ஜிங்கில் மீண்டும் கரோனா ஊரடங்கு தீவிரம்

பெய்ஜிங்: சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டையொட்டி முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக பெய்ஜிங்நகரத்தில் கரோனாவை கட்டுப்படுத்த அதிகாரிகள் நேற்று மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டனர். சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு இந்த ஆண்டின் இறுதிக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கரோனாவை கட்டுப்படுத்த அதிகாரிகள் மிக தீவிரமாக செயலாற்றி வருகின்றனர். அந்த வகையில், 40 லட்சம் பேர் வசிக்கும் பெய்ஜிங்கை சுற்றியுள்ள ஹைபேயி மாகாணத்தில் இந்த வார இறுதி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியேற … Read more

சீனாவில் புதிதாக 1,829 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 1,696 பேருக்கு … Read more