நெடுஞ்சாலை வழியாக சென்றுகொண்டிருந்த பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து – 30 பேர் உயிரிழப்பு..!

மத்திய கென்யாவில்  40 மீட்டர் உயரமுடைய பாலத்தில் இருந்து பேருந்து ஒன்று ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மேரு கவுண்டியில் இருந்து நைரோபி நோக்கி நெடுஞ்சாலை வழியாக அதிவேகமாக சென்றுகொண்டிருந்த பேருந்து நித்தி ஆற்றின் மீது செல்லும் பாலம் வழியாக சென்றுகொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு மீது மோதிச்சென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. Source link

குரங்கு அம்மைக்கு பெரியம்மை தடுப்பூசி – ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

உலகம் முழுவதும் குரங்கு அம்மை தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 75-க்கும் மேற்பட்ட நாடுகளில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மைத் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கேரளாவில் 3 பேர், டெல்லியில் ஒருவர், தெலங்கானாவில் ஒருவர் என 5 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குரங்கு அம்மையை சர்வதேச சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இதனிடையே, பெரியம்மைக்கான தடுப்பூசியை குரங்கு அம்மைக்கு பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து … Read more

“நான் பிரிட்டன் பிரதமரானால்…” – சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்த ரிஷி சுனக்

லண்டன்: “பிரிட்டனின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, சர்வதேச பாதுகாப்புக்கே சீனா நம்பர் 1 அச்சுறுத்தல்” என்று ரிஷி சுனக் ஆவேசமாகப் பேசினார். பிரிட்டன் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019-ஆம் ஆண்டு பதவியேற்றார். சொந்த கட்சிக்குள்ளயே எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். பிரிட்டன் அரசியலமைப்பு சட்டப்படி, ஆளும் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகவும் பதவியேற்பார். அந்த வகையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான … Read more

குரங்கு அம்மைக்கு ‘இம்வாநெக்ஸ்’ தடுப்பூசி: ஐரோப்பிய ஒன்றியம் அவசர கால அனுமதி

குரங்கு அம்மை நோயை சர்வதேச மருத்துவ நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில். இதற்கு எதிரான முதல் தடுப்பூசியை டென்மார்க் நாட்டைச் சேர்ந்த மருந்து நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு இம்வாநெக்ஸ் (Imnavex) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மருந்துகள் பிரிவான பவேரியன் நார்டிக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த இம்வாநெக்ஸ் தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்திற்கும் ஐஸ்லாந்து, லீசஸ்டைன் மற்றும் நார்வே நாடுகளிலும் செலுத்தத்தக்கது. இதுவரை உலகம் முழுவதும் குரங்கு அம்மை … Read more

வெடித்து சிதறிய எரிமலை… 2.5 கி.மீ. தொலைவுக்கு தீப்பிழம்பை கக்கியதால் பொதுமக்கள் பீதி!

தெற்கு ஜப்பானின் ககோஷிமா பகுதியில் உள்ள சகுராஜிமா எரிமலையில் நேற்று நள்ளிரவு திடீரென வெடித்தது. இதில் பாறைகளும் வெடித்து சிதறி தீப்பிழம்புகள் வெளியேறி வருகின்றன. பெரிய எரிமலையில் இருந்து சுமார் 2.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு அது தீப்பிழம்புகளை கக்கி வருகிறது. அதேசமயம் இதனால் எழும் புகை சுமார் 250 மீட்டர் உயரத்திற்கு எட்டியுள்ளது. இதன் காரணமாக, சகுராஜிமாவின் எரிமலை பள்ளத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரிமுரா மற்றும் ஃபுருசாடோ நகரங்களின் குடியிருப்புவாசிகள் மிகுந்த … Read more

ஓஸ்லோவில், ஃப்ராக்நெர்கிலென் விரிகுடாவில் சிறிய படகுகளை நீருக்குள் கவிழ்த்த பனிக்கடல் யானை

நார்வே தலைநகர் ஓஸ்லோவில் உள்ள ஃப்ராக்நெர்கிலென் விரிகுடா நார்டிக் கடற்கரை அருகே சுற்றுலாப்பயணிகள் படகுசவாரி மேற்கொண்டிருந்த பகுதியில் பனிக்கடல் யானை ஒன்று நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய படகுகளை நீருக்குள் கவிழ்த்தது. இதனால் சுற்றுலாப்பயணிகள் பலரும் அந்த பனிக்கடல் யானை தங்களது படகுகளையும் கவிழ்த்துவிடுமோ என அச்சத்திற்குள்ளாகினர். பொதுவாகவே படகுகளை கவிழ்ப்பதற்கு பெயர்போன பனிக்கடல் யானைகள் இதற்கு முன்பு வரை டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் தென்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது நார்வேயில் சுமார் 700 கிலோ … Read more

ஆன்லைன் 'லைவ்'வில் முன்னாள் மனைவியை தீ வைத்து எரித்துக்கொன்ற நபர் – தூக்கு தண்டனை நிறைவேற்றம்

பீஜிங், சீனாவின் சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்தவர் லமு. இவர் சீனாவின் உள்ள சமூகவலைதள செயலியான டுவ்யுன் என்ற செயலில் மிகவும் பிரபலமானவர். டிக்டாக் போன்ற அம்சங்களை கொண்ட டுவ்யுன் செயலியில் லமு பல்வேறு விதமான வீடியோக்களை வெளியிட்டு லமு பிரபலமடைந்தார். லமுவின் கணவர் தங் லு. இவரும் டுவ்யுன் செயலில் பிரபலமான நபராக இருந்து வந்தார். 11 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவந்த கணவன் மனைவி இடையே 2020-ம் ஆண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. லுமுவை அவரது கணவர் … Read more

உலகின் உயரமான கட்டடத்தை அமைக்க சவுதி அரேபிய அரசு திட்டம்.!

ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் உலகின் உயரமான கட்டடத்தை அமைக்க சவுதி அரேபிய அரசு திட்டமிட்டுள்ளது. சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ஜீரோ கார்பன் நகரம் கனவுத் திட்டத்தில், தபூக் மாகாணத்தில் அமைந்துள்ள நியோம் என்ற இடத்தில் இரு கட்டடங்கள் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆயிரத்து 600 அடி உயரத்தில், 75 மைல் தூரத்திற்கு இணையாக இரு கட்டடங்களும் அமைய உள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய உலகின் பெரிய கட்டடமான புர்ஜ் … Read more

கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மனைவியுடன் எலான் மாஸ்க் தொடர்பில் உள்ளாரா…?

வாஷிங்டன் உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பவரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க்கிற்கு தற்போது 50 வயது ஆகிறது. இவர் கடந்த 2000-ம் ஆண்டு ஜஸ்டின் வில்சன்என்பவரை திருமணம் செய்துகொண்டார். 8 ஆண்டுகள் நீடித்த இவர்களது உறவு கடந்த 2008-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதையடுத்து கடந்த 2010-ம் ஆண்டு டலுலா ரிலே என்ற நடிகையை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார் எலான் மஸ்க். கடந்த 2012-ம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரை … Read more

மின்சார வாகனங்களுக்காக டிஜிட்டல் வரைபடத்துக்கு தயாராகி வரும் துபாய் நகரம்.!

மின்சார வாகனங்களுக்காக துபாய் நகரம் டிஜிட்டல் வரைபடத்துக்கு தயாராகி வருகிறது. இதனால் முதல் ஆளில்லாத டாக்ஸிக்கான வழிபிறக்க உள்ளது. இரண்டு செவரலட் போல்ட்டின் மின்சார வாகனங்கள் சென்சர் மற்றும் கேமராக்களழுடன் அடுத்த ஆண்டில் அறிமுகமாக உள்ளன. முதல் முறையாக குரூஸ் நிறுவனம் அமெரிக்காவை விட்டு வெளிநாட்டில் துபாயில் சர்வதேச ரோபோ டாக்ஸி சேவையை தொடங்க ஒப்புதல் அளித்துள்ளது. Source link