உலகின் உயரமான கட்டடத்தை அமைக்க சவுதி அரேபிய அரசு திட்டம்.!

ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் உலகின் உயரமான கட்டடத்தை அமைக்க சவுதி அரேபிய அரசு திட்டமிட்டுள்ளது.

சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ஜீரோ கார்பன் நகரம் கனவுத் திட்டத்தில், தபூக் மாகாணத்தில் அமைந்துள்ள நியோம் என்ற இடத்தில் இரு கட்டடங்கள் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆயிரத்து 600 அடி உயரத்தில், 75 மைல் தூரத்திற்கு இணையாக இரு கட்டடங்களும் அமைய உள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய உலகின் பெரிய கட்டடமான புர்ஜ் கலிபாவை விட பெரிதாகவும், நவீன வசதிகளுடன் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.     

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.