இலங்கையில் அமைதி வழியில் ஆட்சி மாற்றம்: ஐ.நா வலியுறுத்தல்!

பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கையில் அமைதி வழியிலான ஆட்சி மாற்றம் நிகழ்வதை அனைத்துத் தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தி உள்ளது. இலங்கையின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், அரசியலிலும் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மக்களின் தீவிர போராட்டத்தைத் தொடா்ந்து பதவியை ராஜினாமா செய்துள்ளாா். அதே வேளையில், மக்களின் அதிருப்தியைச் சந்தித்த பிரதமா் ரணில் விக்ரமசிங்க நாட்டின் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்று … Read more

ஷார்ஜா-ஐதராபாத் விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு; கராச்சியில் அவசர தரையிறக்கம்

கராச்சி, இந்தியாவின் இண்டிகோ விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா நகரில் இருந்து புறப்பட்டு ஐதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், நடுவழியில் விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி விமானி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதன்பின்னர் விமானம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட பாதிப்பு பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 2 வாரங்களில் இந்திய விமான நிறுவனமொன்றின் … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56.71 கோடியை தாண்டியது

ஜெனிவா, சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56.71 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 56,71,51,182 ஆக அதிகரித்துள்ளது. … Read more

75 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் உள்ள பூர்வீக வீட்டுக்கு சென்ற 92 வயது மூதாட்டி

லாகூர், இந்தியாவில் வசித்து வரும் 92 வயது மூதாட்டி ரீனா சிபார். இவரது பூர்வீக வீடு ஒன்று பாகிஸ்தான் நாட்டில் உள்ளது. 75 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் உள்ள தனது பூர்வீக வீட்டுக்கு ரீனா சென்றுள்ளார். நல்லெண்ண நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அந்த மூதாட்டிக்கு பாகிஸ்தானிய தூதரகம் 3 மாத கால விசா வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து, பாகிஸ்தானின் ராவல்பிந்தி நகரில் உள்ள பிரேம் நிவாஸ் என்ற தனது பூர்வீக வீட்டுக்கு வாகா-அட்டாரி எல்லை வழியே நேற்று … Read more

உக்ரைனில் விண்வெளி ராக்கெட் நிலையம் மீது ரஷியா தாக்குதல் – 3 பேர் பலி

கீவ், உக்ரைன் மீதான ரஷியாவின் போரில் கிழக்கு உக்ரைன் தற்போது ரஷிய படைகளின் பிரதான இலக்காக உள்ளது. அதே சமயம் ரஷிய படைகளின் முழு கவனமும் கிழக்கு உக்ரைன் மீது இருந்தாலும் உக்ரைனின் பிறபகுதிகளில் தாக்குதல் நடத்துவதை ரஷியா நிறுத்திவிடவில்லை. அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாக உக்ரைன் முழுவதும் உள்ள வணிக வளாகம், வர்த்தக மையம், அடுக்குமாடி குடியிருப்பு என பொது உள்கட்டமைப்புகள் மீது ரஷிய படைகள் தீவிரமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் … Read more

என்னது? ஏலியன்கள் பூமியை சுலபமா கண்டுபிடிச்சிடுவாங்களா? அதிரவைக்கும் ஆய்வு

பிரபஞ்சத்தில் வேற்றுகிரகவாசிகள் இருப்பதை கண்டறிய பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் பிரம்ம பிரயத்தனம் செய்து வருகின்றனர். தொலைதூர விண்மீன் திரள்களைத் தேடும் பிரம்மாண்ட செயற்கைக்கோள்கள் முதல் வானொலி ஒலிபரப்புகளை அண்டத்திற்கு அனுப்புவது வரை என பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எவ்வளவு முயற்சித்தாலும், பெரிய அளவில் பயன் ஏதும் கிடைக்கவில்லை என்றாலும், விஞ்ஞானிகள் தொடர்ந்து வெவ்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக, இந்த பிரபஞ்சத்தில் வேற்றுகிரகவாசிகள் நம்மை எவ்வாறு கண்டுபிடிப்பார்கள் அல்லது தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள் … Read more

படவாய்ப்புகள் குறைந்து நெட்டிசன்களின் கேலிக்கு ஆளான நடிகை தற்கொலைக்கு முயற்சி செய்ததாக உருக்கமான பதிவு!

கடந்த 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு படவாய்ப்புகள் குறைந்து நெட்டிசன்களின் அவமதிப்புக்கு ஆளான அமெரிக்க நடிகை கான்ஸ்டன்ஸ் வூ தற்கொலைக்கு முயற்சி செய்ததாகத் தெரிவித்துள்ளார். 40 வயதான நடிகை 3 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட தமது தொலைக்காட்சித் தொடர்களை மீண்டும் புதுப்பித்து அதில் நடித்து வருகிறார். பட வாய்ப்புகளை இழந்த அவர் சமூக ஊடகத்தில் வரவே தயங்கியதாகக் கூறினார். வாழவே பிடிக்கவில்லை என்று தற்கொலைக்கு முயன்று நண்பர்களால் காப்பாற்றப்பட்டதாக தமது டிவிட்டர் பதிவில் கூறுகிறார் கான்ஸ்டன்ஸ் வூ. … Read more

இலங்கை புதிய அதிபர் தேர்தலில் பலத்த போட்டி: ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெறுவாரா?

கொழும்பு, இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட மக்கள் புரட்சியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் சிங்கப்பூருக்கு தப்பி சென்று விட்டார். எனவே இலங்கையின் இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று முன்தினம் பதவியேற்றார். கோத்தபய ராஜபக்சே ராஜினாமாவை தொடர்ந்து நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 20-ந்தேதி நாடாளுமன்றத்தில் நடக்கிறது. 19-ந்தேதி வேட்புமனு பெறப்படுகின்றன. இந்த தேர்தலில் போட்டியிட தற்போதைய இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே திட்டமிட்டு … Read more

Uyghurs: சீன அடிப்படையிலான இஸ்லாமியர்களாக இருப்பது எப்படி: முஸ்லிம்களின் கேள்வி

பெய்ஜிங்: சீனாவில் வாழும் இஸ்லாமியர்கள், சீனாவின் பாரம்பரியத்தின் அடிப்படையிலான இஸ்லாமியர்களாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். சின்ஜியாங் பிராந்தியத்தில் சீன அரசு “இனப்படுகொலை” செய்வதாக மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டிவரும் நிலையில் சீன அதிபரின் சின்ஜியாங் பிராந்திய பயணமும், சீன பாரம்பரியத்தின் அடிப்படையில் இஸ்லாமிய நோக்கம் இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலும் சர்வதேச அளவில் விவாதப் பொருளாகியிருக்கிறது. வடமேற்கு சீனாவின் உரும்கியில் உள்ள ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியின் அருங்காட்சியகத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங், கிர்கிஸ்தான் … Read more

கோத்தபய ராஜபக்ச கோரிக்கையை ஏற்க இந்தியா மறுப்பு – இலங்கை அதிபர் பதவிக்கு ரணில் உட்பட 4 பேர் போட்டி

கொழும்பு: இலங்கையின் புதிய அதிபர் பதவிக்கு இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க உட்பட 4 பேர் போட்டியிடுகின்றனர். இதனிடையே இந்தியாவுக்கு வருவதற்கு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச விடுத்த கோரிக்கையை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது. இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது மனைவியுடன் நாட்டைவிட்டு தப்பி சென்று விட்டார். அவரின் சகோதரர்களான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவும் … Read more