எரிகற்கள் மழையா…? ஆச்சரியம் அடைந்த மக்கள்; வைரலான வீடியோ

நியூயார்க், கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் வானில் எரிகற்கள் மழை பொழிவது போன்ற காட்சிகள் ஏற்பட்டன. இதனால், மக்கள் ஆச்சரியமடைந்தனர். ஆனால், அது சீன ராக்கெட்டின் மீதமுள்ள கழிவுகள் என தெரிய வந்துள்ளது. இதுபற்றி சீன விண்வெளி கழகம் வெளியிட்டு உள்ள செய்தியில், 23 டன் எடை கொண்ட, மார்ச்-5பி ஒய் 3 என்ற ராக்கெட் கடந்த 24ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது என தெரிவித்து உள்ளது. சீன ராக்கெட்டின் கழிவுகள், இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளது. அவை, … Read more

அமெரிக்க அதிபருக்கு மீண்டும் கோவிட்| Dinamalar

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடந்த ஜூலை 21ம் தேதி அன்று கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் ஏற்கனவே இரு தவணை கோவிட் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டார். இந்நிலையில் இவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். இவருக்கு ஜூலை 27ம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ஜோ பைடன் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தது உறுதி செய்யப்பட்டது என … Read more

Long March 5B: சீனாவின் விண்வெளி ராக்கெட் பூமியில் விழுந்து நொறுங்கும்

புதிதாக ஏவப்பட்ட சீனாவின் மிக சக்திவாய்ந்த ராக்கெட்டான லாங் மார்ச் 5Bயின் சிதைபாடுகள் பூமிக்குள்மீண்டும் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராக்கெட்டின் சிதைபாடுகளின் இயக்கத்தை உன்னிப்பாகக் கண்காணிப்பதாக கூறும் சீனா, பூமியில் உள்ள எவருக்கும் சிறிய ஆபத்தை ஏற்படுத்தாது என்றும் கூறுகிறது.  சீனா டியூன்ஹி என்ற பெயரில் பிரத்யேக விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து வருகிறது. இந்த விண்வெளி ஆய்வு மையத்தில், விண்வெளி வீரர்கள் தங்கி ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக, கடந்த மாதம் 29 ஆம் தேதி, Long March … Read more

நேபாளத்தில் மக்களை பதறடித்த நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5 ஆக பதிவு| Dinamalar

காத்மண்டு :நேபாளத்தில் இன்று (ஜூலை 31) கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு, ரிக்டரில் 5.5 ஆக பதிவானது. நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து தென்கிழக்கே 147 கி.மீ. தொலைவில், திக்தெல் பகுதியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. இதனால், நேபாளம், இந்தியா மற்றும் சீனாவில் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் உறுதி செய்துள்ளது.இதனால், வீடுகளில் இருந்த மக்கள் அச்சமடைந்து, பாதுகாப்பு … Read more

அமெரிக்காவை புரட்டி போட்ட வெள்ளம் – குழந்தைகள் உட்பட 25 பேர் பலி!

அமெரிக்காவில் கென்டகி மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 4 குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்து உள்ளனர். அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 4 குழந்தைகள் உட்பட 25 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். தொடர்ந்து மீட்பு மற்றும் தேடுதல் பணி நடந்து வருகிறது. இதனால், உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இது பற்றி கென்டகி கவர்னர் ஆண்டி பெஷீர் கூறுகையில், “கென்டகி, டென்னசி மற்றும் மேற்கு விர்ஜீனியா உள்ளிட்ட பகுதிகளில் தேசிய … Read more

உலகின் மிகப்பெரிய கட்டடம் கட்ட சவூதி அரேபியா திட்டம்.!

சவூதி அரேபிய அரசு 75 மைல் நீளத்துக்கு இருபுறங்களிலும் 1600 அடி உயரமுள்ள வானளாவிய கட்டடங்களைக் கட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளது. பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அறிவுறுத்தலின்படி வானளாவிய கட்டடங்களை உருவாக்க வடிவமைப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். மிரர் லைன் எனப் பெயரிட்டுள்ள இந்தத் திட்டம் கட்டி முடிக்கப்பட்டால் உலகின் மிகப்பெரிய கட்டுமானமாக இருக்கும். இந்தத் திட்டத்துக்கு ஒரு இலட்சம் கோடி டாலர் செலவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் தெரிவித்துள்ளது. கட்டடங்களின் அடியில் அதிவிரைவு ரயில் இயக்குவதும், … Read more

அகதிகளை பணத்தால் ஏழ்மையான நாடுகளுக்கு விரட்டும் மேற்குலக நாடுகள்

இங்கிலாந்து மற்றும் ருவாண்டா இடையே கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ், கடந்த ஜூன் 14, 2022 அன்று கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அகதிகளை நாடுகடத்த இங்கிலாந்து அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், திட்டமிட்டபடி,அகதிகளை அனுப்பும் விமானம் தனது பயணத்தை மேற்கொள்ளவில்லை. மனித உரிமைகள் அடிப்படையிலான சட்ட நடவடிக்கையின் மூலம் இம்முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த அகதிகள் சிரியா, சூடான், ஈரான் போன்ற போர் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நாடுகளிலிருந்து வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சமடைந்தவர்கள் என்பதும் படகு வழியாக … Read more

யார் இந்த மனிஷா ருபேட்டா: பாகிஸ்தானின் முதல் இந்து பெண் டிஎஸ்பி!

பாகிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மையினர். அந்நாட்டு இந்துக்கள் அரசுத் துறையில் குறைவாகவே பணியில் உள்ளனர். அதிலும், உயர் பொறுப்புகளுக்கு இந்துக்கள் தேர்வாவது கடினமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மனிஷா ரூபேட்டா என்ற இந்து பெண் அந்நாட்டின் முதல் பெண் டிஎஸ்பியாக பதவியேற்றுள்ளார். பாகிஸ்தானில் அரசு அதிகாரிகளாக பெண்கள் நியமிக்கப்படுவது அரிதான விஷயமாக பார்க்கப்படும் நிலையில், அதிலும், இந்து பெண் ஒருவர் டிஎஸ்பியாக பதவியேற்றுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். மனிஷா ருபேட்டாவின் குடும்பம் பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் … Read more

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவரது வெள்ளை மாளிகை மருத்துவர் கெவின் ஓ கார்னர் உறுதி படுத்தியுள்ளார். “ஜோ பைடனுக்கு (79) சனிக்கிழமை ஆன்டிஜென் சோதனை மேற்கொள்ளப்பட்டத்தில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்பு தொடர்ந்து நான்கு நாட்கள் எடுக்கப்பட்ட சோதனையில் கொரோனா இல்லை என்று தெரிய வந்த நிலையில், சனிக்கிழமை எடுக்கப்பட்ட சோதனயில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. கண்டிப்பான தனிமைப்படுத்தும் நடைமுறைகளை அதிபர் … Read more

டென்மார்க் பகுதியை சேர்ந்த பரோயே தீவுகளில் வேட்டை கும்பல் அட்டூழியம்.. 100 டால்பின்கள் கொன்று குவிப்பு!

டென்மார்க் பகுதியை சேர்ந்த பரோயே தீவுகளில் 100-க்கும் மேற்பட்ட பாட்டில்நோஸ் (bottlenose) டால்பின்களை வேட்டை கும்பல் காட்டுமிராண்டித்தனமாக கொன்ற சம்பவம் சர்வதேச அளவில் விலங்குகள் நல ஆர்வலர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. தொலைதூர தீவுக்கூட்டத்தில் வசிக்கும் வேட்டைக்காரர்கள் கொக்கிகள், கத்திகள் மற்றும் ஈட்டிகளால் டால்பின்களை கொன்றதால், விரிகுடா கடற்பகுதியே சிவப்பு நிறமாக மாறியுள்ளது.  Source link