கடும் வறட்சியால் பஞ்சத்தில் மடியும் மக்கள்: துருக்கியிடம் உதவி கேட்கும் சோமாலியா

அங்காரா: சோமாலியாவில் கடுமையான வறட்சி நிலவுவதைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் ஹசன் ஷேக் முகமது, துருக்கியிடம் உதவ வேண்டி ஆதரவு கேட்டிருக்கிறார். சோமாலிய அதிபர் ஹசன் ஷேஷ் முகமது முதல் முறையாக துருக்கிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அங்கு அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது: ”சோமாலியாவில் நிலவும் கடும் வறட்சி குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட்டது. துருக்கிய சகோதரர்கள் எங்களுக்கு உறுதுணைபுரிய வேண்டும். அவர்கள் முன்பு செய்த உதவிகளை போல, அவர்களால் முயன்ற உதவியை செய்ய வேண்டும். உங்களது … Read more

UK PM Boris Johnson resigns: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா?

இங்கிலாந்து பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019ஆம் ஆண்டு பதவியேற்றார். பதவியேற்றது முதலே பல்வேறு சர்ச்சைகளில் அவர் சிக்கி வருகிறார். கொரோனா காலத்தில் பெருந்தொற்றை அவர் சரியாக கையாளவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. மேலும், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி பார்ட்டி கொண்டாடியதற்காக போரிஸ் ஜான்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக போரிஸ் ஜான்சன் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். அந்த சமயத்திலேயே அவர் பதவி விலக வேண்டும் என்ற … Read more

பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் போரிஸ் ஜான்சன்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: பிரிட்டனில், போரிஸ் தலைமையிலான அமைச்சரவையில் அடுத்தடுத்து அமைச்சர்கள் ராஜினாமா செய்து வருவதால் பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ய ஒப்பு கொண்டுள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக போரிஸ் ஜான்சன் உள்ளார். கொரோனா காலத்தின் போது, சட்ட விரோதமாக மது விருந்து கொடுத்ததாக, பல புகார்கள் அவர் மீது எழுந்தன. இதையடுத்து, அவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இதற்கிடையே, போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியில், அவருக்கு கடும் … Read more

அடுத்தடுத்த ராஜினாமாக்கள், அமைச்சர்களின் அழுத்தங்கள்: பதவி விலகுகிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

லண்டன்: அடுத்தடுத்த ராஜினாமாக்கள், அமைச்சர்களின் அழுத்தங்கள் எதிரொலியாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் பதவி விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நெருங்கிய வட்டாரம் இது குறித்து கூறுகையில், “கடந்த 48 மணி நேரத்தில் பிரிட்டன் ஆளுங்கட்சியில் நடந்துவரும் நிகழ்வுகளைக் கண்டு ‘எதிர்த்துப் போராடுவேன்’ என்று போரிஸ் கூறினார். ஆனால், இப்போது அவரே தான் பதவி விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார். அவர் அக்டோபர் மாதம் வரை … Read more

பல நூறு அடி உயரத்தில் கிரேனில் தொங்கிய ஊழியர் – திகைப்பூட்டும் வீடியோ

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோ நகரில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணியில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். அப்போது ஊழியர் ஒருவர் கிரேனில் சிக்கிக்கொண்டதால் அவர் பல நூறு அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கினார். இதனைத் தொடர்ந்து சக ஊழியர்கள அவரை பத்திரமாக தரையிரறக்கினர். அவருக்கு பலத்த காயம் ஏதும் ஏற்படவில்லை. ஊழியரின் கை கிரேனுடன் சிக்கிக் கொண்டதால் இந்த விபத்து நேர்ந்ததாக கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.  மேலும் படிக்க | அமைச்சர்கள் ராஜினமா… சிக்கலில் இங்கிலாந்து … Read more

பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு ?

பிரிட்டன் அமைச்சரவையில் மேலும் 5 ஜூனியர் அமைச்சர்கள் பதவி விலகியதால், பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் துணை கொறடா கிறிஸ் பின்ஷர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் உள்பட 27 எம்.பி.க்கள் ராஜினாமா செய்தனர். அமைச்சரவை உறுப்பினர்கள் போரிஸ் ஜான்சனை பதவி விலகக் கோரி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. பிரதமர் போரீஸ் ஜான்சன் மீது நம்பிக்கை … Read more

இந்தியாவில் ஒமைக்ரானின் புதிய துணை வகை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது – டெட்ரோஸ் அதனோம்

இந்தியாவில் ஒமைக்ரானின் புதிய துணை வகை திரிபு பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், BA.2.75 எனப்படும் அந்த புதிய வைரஸ் பாதிப்பு இந்தியா உட்பட பல நாடுகளில் கண்டறியப்பட்டிருப்பதாகவும், அதனை உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.  ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் முறையே, BA.4 மற்றும் BA.5 ஆகிய வைரஸ்களால் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது என்றார். Source link

பச்சை நிறத்தில் விசித்திரமாக தோன்றிய வானம்.. நீர் நிறைந்த மேகங்களுக்குள் ஊடுருவிய நீல வர்ண ஒளி!

அமெரிக்காவின் தெற்கு டகோடா மாகாணத்தில் சூறாவளிக் காற்றில் வானம் விசித்திரமாக பச்சை நிறத்தில் தோன்றிய காட்சி காண்போரை வெகுவாக கவர்ந்தது. தண்ணீர் நிறைந்து காணப்படும் மேகங்களில், நீல நிற ஒளி ஊடுருவும் போது இது போன்ற வான் நிகழ்வு ஏற்படும் என வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நீர் நிறைந்த மேகங்களுக்குள் ஊடுருவும் நீல வர்ண ஒளி, சூரியனின் சிவப்பு கதிர்வீச்சுடன் கலந்து வானம் பச்சை நிறத்தில் காட்சி அளிக்கும் வீடியோ இணையத்தில் அதிக பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.  … Read more

BA 2.75  | இந்தியாவில் பரவுகிறது புதிய வகை கரோனா வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் தகவல்

ஜெனீவா: இந்தியாவில் BA 2.75 என்ற புதிய வகை கரோனா வைரஸ் பரவிவருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ராஸ் அதோனம் கேப்ரியேசஸ் கூறுகையில், “ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் BA.4, BA.5 வகை திரிபுகள் உள்ளன. இந்தியாவிலும் இன்னும் சில நாடுகளிலும் BA 2.75 என்ற திரிபு பரவி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக உலகளவில் 30% தொற்று அதிகரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் 6 பிராந்தியங்களில் 4ல் … Read more

ஓசோன் படலத்தில் ராட்சத துளை கண்டுபிடிப்பு… அண்டார்டிகாவை விட ஏழு மடங்கு பெரியது எனத் தகவல்

அண்டார்டிகா கண்டத்தை விட ஏழு மடங்கு அளவில் பெரியதாக ஓசோன் படலத்தில் துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கனடா வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வாட்டர்லூ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், வளிமண்டலத்தில் இரண்டாவது அடுக்கான stratosphere-யில் ராட்சத துளை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டார்டிகா கண்டத்தை விட அளவில் 7 மடங்கு துளை பெரியது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். Source link