Volodymyr Zelensky: உக்ரைனிடம் 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள தானியங்கள் இருப்பு

ரஷ்யா-உக்ரைன் போர்: போருக்கு மத்தியில், உக்ரைனிடம் தேங்கிக் கிடக்கும் தானியங்களை ஏற்றுமதி செய்யும் நோக்கில் உக்ரைனும் ரஷ்யாவும் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா இந்த ஒப்பந்தத்தை வரவேற்றார், ஆனால், ரஷ்யா மீது நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்துள்ள அவர், எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய அவசியம் இருப்பதாக கூறினார். உக்ரைன் மற்றும் ரஷ்யா தானியங்கள் ஏற்றுமதி தொடர்பாக துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகளுடனான முக்கிய ஒப்பந்தம் நிறைவேறிய பிறகு, உக்ரைனிடம் உள்ள … Read more

உக்ரைனுக்கு 270 மில்லியன் டாலர் மதிப்பில் புதிய ஆயுத தொகுப்பு வழங்கும் அமெரிக்கா..!

உக்ரைன் ராணுவத்தை வலுப்படுத்த புதிதாக 270 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத தொகுப்பை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. புதிய தொகுப்பில் கூடுதல் நடுத்தர தூர ராக்கெட்டுகள், HIMARS வகை ஏவுகணைகள், பீனிக்ஸ் கோஸ்ட் ட்ரோன் உள்ளிட்ட நவீன ஆயுதங்கள் இடம் பெற்று உள்ளதாக வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். ரஷ்யப் போரால் உருக்குலைந்த உக்ரைனுக்கு இதுவரை 8 புள்ளி 2 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை அமெரிக்கா வழங்கி உள்ளது.    Source … Read more

கடைசி பந்தில் விண்டீசை வீழ்த்தியது| Dinamalar

போர்ட் ஆப் ஸ்பெயின்: விண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், 3 ரன் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை வெற்றியுடன் துவக்கியது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. போர்ட் ஆப் ஸ்பெயினில் முதல் போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரன், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். நல்ல துவக்கம்: இந்திய அணிக்கு கேப்டன் ஷிகர் தவான், சுப்மன் கில் … Read more

விஸ்கியுடன் கொரோனா குடித்தால் கொரோனா பாதிக்காது: புத்த புட்சுவின் வைத்தியம்

குடிபோதையில் துறவி கைது: விஸ்கியுடன் எலுமிச்சை பழ ரசத்தை சேர்த்துக் குடித்தால் கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என்று நம்பும் புத்த மதத் துறவியின் எண்ணம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்ட புத்த மதத்தை சேர்ந்த துறவி ஒருவர் கொடுத்த இந்த ஸ்டேட்மெண்ட் சர்வதேச அளவில் வைரலாகிறது. தாய்லாந்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக புத்த மதத்துறவி ஒருவர் கைது செய்யப்பட்டபோது, அவர் கூறிய விளக்கம் இது. விஸ்கியால் கோவிட்-19 ஐ தடுக்க … Read more

இலங்கையின் பிரதமராக தினேஷ் குணவர்த்தன பதவியேற்பு – புதிய அமைச்சரவையில் 17 பேருக்கு வாய்ப்பு

கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தன நேற்று பதவியேற்றார். அவருடன் 17 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். முன்னதாக, அதிபர் அலுவலகம் முன்பு திரண்ட போராட்டக்காரர்களை ராணுவத்தினர் நள்ளிரவில் அப்புறப்படுத்தினர். இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் பதவியேற்றார். இந்நிலையில், புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தன(73), அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் நேற்று பொறுப்பேற்றார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியைச் சேர்ந்த இவர், வெளியுறவு, கல்வி, உள்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். முன்னாள் அதிபர் கோத்தபய … Read more

ரஷ்யப் படைகளை எதிர்கொள்ள உக்ரைனுக்கு மேலும் 100 டிரோன்களை அனுப்புகிறது இங்கிலாந்து!

ரஷ்யப் படைகளை எதிர்கொள்ள உக்ரைனுக்கு மேலும் நூறு டிரோன்களையும் பீரங்கித் தடுப்பு ஆயுதங்களையும் பிரிட்டன் அனுப்பி வைத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. துப்பாக்கிகள், பேட்டரி ராடார் எதிர்ப்பு சாதனங்கள், 50 ஆயிரம் தோட்டாக்கள் ஆகியவற்றுடன் நூறு டிரோன்களும் கப்பல் மூலமாக உக்ரைனுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 1600 பீரங்கித் தடுப்பு சாதனங்களும், 6900 பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும் அனுப்பி வைக்கப்படும் என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுவரை 15 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாகவும் 45 ஆயிரம் … Read more

உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் குறித்த கேள்விக்கு சுகாதாரத்துறை இணையமைச்சர் பதில்

வெளிநாடுகளில் இருந்து வந்த மாணவர்கள் இந்திய மருத்துவக் கல்லூரிகளில் தங்கள் படிப்பைத் தொடர தேசிய மருத்துவ ஆணைய விதிகளில் இடமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து வந்த மாணவர்களை இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார், இந்தியா திரும்பியவர்களை மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கும் முடிவுக்கு மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை என்றார். மேலும், இந்திய மாணவர்கள் சீனாவில் தாங்கள் பயின்ற … Read more

இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தனே பதவியேற்பு| Dinamalar

கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக, தினேஷ் குணவர்த்தனே, 72, பொறுப்பேற்றுக் கொண்டார்.இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகியதை அடுத்து, பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, பார்லி., எம்.பி.,க்கள் ஆதரவுடன் இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் நேற்று பொதுஜன பெரமுனா கட்சியைச் சேர்ந்த, தினேஷ் குணவர்த்தனே, புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து … Read more

மிட்டாய் சாப்பிடும் பணிக்கு ஆண்டுக்கு ரூ.62 லட்சம் சம்பளம்.. விற்பனை நிறுவனம் வெளியிட்ட இனிப்பு அறிவிப்பு..!

கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள மிட்டாய்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று மிட்டாய்களை சுவைத்துப்பார்த்து அதன் தரம், சுவை குறித்து தெரிவிக்கும் பணி செய்வதற்கு ஆண்டுக்கு இந்திய மதிப்பில் 62 லட்சம் ரூபாய் சம்பளம் தருவதாக அறிவித்துள்ளது. கேண்டி ஃபன் ஹவுஸ் என்ற அந்த நிறுவனம் தலைமை மிட்டாய் தரச்சோதனை அதிகாரி பணியில் சேர மிட்டாய் சாப்பிடுவதில் ஆர்வம் இருக்க வேண்டும் என்பது மட்டுமே தகுதி என தெரிவித்துள்ளது. பற்கள் பாதுகாப்பு திட்டத்துடன் கூடிய இந்த பணியில் வேடிக்கையாக … Read more

பிரேசிலில் 18 பேர் பலி| Dinamalar

ரியோ டி ஜெனிரோ:பிரேசிலில், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் உயிரிழந்தனர்.தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோடி ஜெனிரோ நகருக்கு அருகேயுள்ள பகுதியில், கார் திருட்டு, வங்கி கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பதுங்கிஉள்ளதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.இதையடுத்து, போலீஸ் படையினர் சம்பவ இடத்திற்கு ஹெலிகாப்டரில் விரைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். விலா குரூசிரோ என்ற இடத்தில் மறைந்திருந்த கடத்தல்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இந்த தாக்குதலில், … Read more