CAATSA sanctions: S400 ஏவுகணை கொள்முதல் தொடர்பான தடையிலிருந்து இந்தியாவுக்கு விலக்கு

காஸ்டாவின் கீழ் ரஷ்யாவின் ஏவுகணை ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவிற்கு விலக்கு அளிக்க அமெரிக்க அரசு சட்டத் திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது.  2018ம் ஆண்டு, அக்டோபர் மாதம் S-400 வான் ஏவுகணை அமைப்புகளின் ஐந்து படைப்பிரிவுகளுக்கான 5.43 பில்லியன் டாலர் ஒப்பந்தமானது, இந்தியவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கையெழுத்தானது. இது அமெரிக்காவின் அறிவுறுத்தல்களுக்கு எதிராக இருந்தது. ஆனால், தற்போது குழு குரல் வாக்கெடுப்பு மூலம், அமெரிக்க அரசின் கமிட்டி ஒரு சட்ட திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது இது தண்டனைக்குரிய CAATSA … Read more

அடுத்த இங்கிலாந்து பிரதமர் யார்? – இந்திய வம்சாவளியினருக்கு வாய்ப்பு…!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை தொடர்ந்து அடுத்த பிரதமர் பதவிக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. பிரதமர் தேர்வில் இங்கிலாந்தை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி ஈடுபட்டுவருகிறது. இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த சிலரும் போட்டியிட உள்ளனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் , சுவெல்லா பிரேவர்மன் மற்றும் மந்திரிகள் லிஸ்ட் டிரஸ், பென்னி மார்டன்ட் உள்ளிட்ட 8 பேர் போட்டியில் உள்ளனர். இதில் முதல் சுற்றில் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த 358 … Read more

காந்தி சிலை அவமதிப்பு; இந்தியா கடும் கண்டனம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஒட்டாவா,-கனடாவில், மஹாத்மா காந்தியின் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வட அமெரிக்க நாடானா கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள ரிச்மண்ட் ஹில் நகரில் உள்ள விஷ்ணு கோவிலில் நிறுவப்பட்டிருந்த காந்தி சிலையின் அடிப்பக்கத்தில், நேற்று முன்தினம் மர்ம நபர்கள் சிலர், தகாத வார்த்தைகளைக் குறிப்பிட்டிருந்தனர்.காந்தி சிலை அவமதிக்கப்பட்டதற்கு, இந்தியா தன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது குறித்து, டொரான்டோவில் உள்ள இந்திய … Read more

இலங்கை இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்பு!

இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ததை அடுத்து, அந்நாட்டின் இடைக்கால அதிபராக, ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றுக் கொண்டார். அண்டை நாடான இலங்கையில், வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதனால், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள அந்நாட்டு மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் கொழும்புவில் … Read more

குர்பாணி கொடுக்க முயன்றவரை பிரியாணி போட்ட காளையன்..! பாகிஸ்தானில் பரிதாபம்

காளையை பலியிட்டு குர்பாணி கொடுக்க முயன்றவரை , அந்த காளை திருப்பித் தாக்கி  இழுத்துச்சென்றதால் இளைஞர் பரிதாபமாக உயிழந்த சம்பவத்தின் வீடியோ  வெளியாகி உள்ளது. பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்.. தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் என்ற வள்ளுவன் வாக்கிற்கேற்ற சம்பவம் ஒன்று பாகிஸ்தானில் நிகழ்ந்துள்ளது. கராச்சியில் குர்பாணி கொடுப்பதற்காக பிடித்து வரப்பட்ட காளை ஒன்றின் முன்னங்கால்களை கட்டி அதனை கீழே தள்ளி பலி கொடுக்க இருவர் முயன்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு உதவு வதற்காக வானரம் போல … Read more

இந்தியாவிற்கு தடையில் இருந்து விலக்கு: அமெரிக்க பார்லி.,யில் தீர்மானம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: சீனா போன்ற ஆக்கிரமிப்பாளர்களை தடுக்க உதவி செய்யும் வகையில், ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணை வாங்கினால், தடையில் இருந்து இந்தியாவிற்கு சலுகை அளிப்பதற்கான தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2014ல் கிரிமீயாவை சட்ட விரோதமாக தன்னுடன் இணைத்து கொண்டதற்காகவும், 2016ல் அதிபர் தேர்தலில் தலையிட்டதற்காகவும் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா கடுமையான தடைகளை விதித்துள்ளது. மேலும், ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கும் நாடுகள் மீது தடை விதிக்கும் … Read more

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் முதல் மனைவி இவானா மரணம்

நியூயார்க்: அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் முதல் மனைவி இவானா மேரி ட்ரம்ப் காலமானார். அவருக்கு வயது 73. முன்னாள் அமெரிக்க அதிபரும், தொழிலதிபருமான டொனால்ட் ட்ரம்பின் முதல் மனைவி இவானா மேரி ட்ரம்ப். இந்த இணைக்கு இவான்கா ட்ரம்ப், ஜுனியர் ட்ரம்ப், எரிக் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் மனைவி இவானா ட்ரம்ப் இறந்துவிட்டதாக டொனால்டு ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கங்களில் ட்ரம்ப் கூறியிருப்பதாவது, ”நியூயார்க் சிட்டியில் உள்ள … Read more

கோத்தபய ராஜினாமா மக்கள் கொண்டாட்டம்.! இடைக்கால அதிபர் ரணில்.!

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்ச ராஜினாமா அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார். மாலத்தீவிலிருந்து சிங்கப்பூர் தப்பிச் சென்ற இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பினார். அவரது ராஜினாமா அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதாக சபாநாயகர் மகிந்தா யப்பா அபேவர்தனா (Mahinda Yapa Abeywardana) தெரிவித்துள்ளார். நாளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார் என்றும் அதுவரை, ரணில் … Read more

இலங்கையில் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்பு| Dinamalar

கொழும்பு: இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்று கொண்டார். இதனிடையே, புதிய அதிபர் வரும் 20ம் தேதி தேர்வாவார் என தெரியவந்துள்ளது. இலங்கை அதிபராக இருந்த கோத்தபய, மக்களின் போராட்டம் காரணமாக இலங்கையில் இருந்து தப்பி மாலத்தீவு வழியாக சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனாவுக்கு இமெயில் அனுப்பினார். அவரது ராஜினாமா கடிதம் ஏற்று கொள்ளப்பட்டது. முன்னதாக, மாலத்தீவு வந்த கோத்தபய, கடந்த 13ம் தேதி இலங்கையின் … Read more

இலங்கை | கோத்தபய ராஜபக்ச ராஜினாமாவை வீதியில் இறங்கி கொண்டாடி மகிழ்ந்த மக்கள்

கொழும்பு: அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்ச ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அதனைக் கொண்டாடும் விதமாக இலங்கை மக்கள் திரளாக வீதிகளில் கூடி அதனை கொண்டாடி மகிழ்ந்தனர். கோத்தபய ராஜினாமா செய்ததை உறுதி செய்துள்ளார் நாடாளுமன்ற சபாநாயகர் யப அபேவர்தனா. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நாட்டில் மக்கள் உணவு, எரிபொருள், மருந்து மாத்திரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மக்கள் அந்த நாட்டின் … Read more