வேன் கவிழ்ந்து பாகிஸ்தானில் 22 பேர் பலி| Dinamalar

கராச்சி:பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லோராலியாவில் இருந்து, சோப் நகருக்கு, ஒரு வேன்சென்று கொண்டிருந்தது. அக்தர் சாய் மலைப்பகுதியில், ஒரு வளைவில் திரும்பும் போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது.இதில், பயணம் செய்த ஐந்து குழந்தைகள், ஐந்து பெண்கள் உட்பட, 22 பேர் இறந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒரேயொரு குழந்தை மட்டும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. விபத்து பற்றி போலீசார் கூறுகையில், ‘அக்தர் சாய் மலை உச்சியில் இருந்து, வேன் மிகவும் ஆழமான பள்ளத்தில் விழுந்து … Read more

கொரோனா கருவி ஊழல் வியட்நாம் அமைச்சர் கைது| Dinamalar

ஹனோய்:கொரோனா பரிசோதனை கருவிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில், வியட்நாம் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் கைது செய்யப்பட்டார்.தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில், ‘வியட் ஏ டெக்னாலஜி கார்ப்பரேஷன்’ என்ற நிறுவனம், கொரோனா பரிசோதனை கருவிகளை நாடு முழுதும் விற்பனை செய்தது. இதன் உண்மை விலையை உயர்த்தி அதிக விலைக்கு விற்பனை செய்ய சுகாதாரத்துறைக்கு லஞ்சம் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, வியட்நாமின் சுகாதாரத் துறை அமைச்சர் குயன் தான் லாங் … Read more

இந்தியா மட்டுமே உதவுகிறது இலங்கை பிரதமர் உருக்கம்| Dinamalar

கொழும்பு:”கடுமையான நிதி நெருக்கடியில் இருந்து நம்மை காப்பாற்றுவதற்கு இந்தியா மட்டுமே உதவி செய்து வருகிறது” என இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே அந்த நாட்டின் பார்லிமென்டில் தெரிவித்தார்.நம் அண்டை நாடான இலங்கை இதுவரை காணாத கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. மக்கள் போராட்டத்தால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலக நேரிட்டது. இதையடுத்து புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பதவியேற்றார். நாட்டின் நிதி அமைச்சராகவும் அவர் உள்ளார்.நிதி சிக்கலில் இருந்து மீள ஐ.எம்.எப். எனப்படும் … Read more

மருந்தில் முற்றிலும் மறைந்தது புற்றுநோய்| Dinamalar

நியூயார்க்-மருத்துவ வரலாற்றில் முதன் முறையாக, மலக்குடல் புற்றுநோயை மருந்து வாயிலாக அமெரிக்க மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர். அமெரிக்காவின் நியூயார்கிலிருக்கும் மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் புற்றுநோய் மையத்தில், மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, 18 பேருக்கு, சோதனை முயற்சியாக ‘டோஸ்டர்லிமாப்’ என்ற மருந்து தரப்பட்டது. ரத்தத்தில் நோய் எதிர்ப்பு வெள்ளை அணுக்களை உருவாக்கும் இந்த மருந்தை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர், மூன்று வாரங்களுக்கு ஒருமுறை என்ற வீதத்தில் ஆறு மாதங்கள் சாப்பிட்டு வந்தனர். அதன்பின் அவர்களை பரிசோதித்ததில் மலக்குடல் புற்றுநோய் கட்டி இருந்த … Read more

ரயில் தடம் புரண்டுஈரானில் 22 பேர் பலி| Dinamalar

டெஹ்ரான்,-மேற்காசிய நாடான ஈரானில், பயணியர் ரயில் தடம் புரண்டதில், 22 பேர் இறந்தனர்; 8௦க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள தபாஸ் நகரத்தில் இருந்து, யாஸ்ட் நகரத்திற்கு பயணியர் ரயில், நேற்று காலை சென்று கொண்டிருந்தது. தபாஸ் நகரை கடந்தவுடன், எதிர்பாராதவிதமாக ரயிலின் ஏழு பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் சிக்கி, 22 பேர் உயிரிழந்தனர்; 80க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி … Read more

மலக்குடல் கேன்சரா: மருந்து ரெடி| Dinamalar

நியூயார்க்,:மருத்துவ வரலாற்றில் முதன் முறையாக மலக்குடல் புற்றுநோயை மருந்து வாயிலாக அமெரிக்க மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர்.அமெரிக்காவின் நியூயார்கிலிருக்கும் மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் புற்றுநோய் மையத்தில் மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு சோதனை முயற்சியாக ‘டோஸ்டர்லிமாப்’ என்ற மருந்து தரப்பட்டது. ரத்தத்தில் நோய் எதிர்ப்பு வெள்ளை அணுக்களை உருவாக்கும் இந்த மருந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் மூன்று வாரங்களுக்கு ஒரு முறை என்ற வீதத்தில் ஆறு மாதங்கள் சாப்பிட்டு வந்தனர். அதன்பின் அவர்களை பரிசோதித்ததில் மலக்குடல் புற்றுநோய் கட்டி இருந்த … Read more

ஒரு தூதன், ஓர் ஓவியன், ஒரு வீதிக் கலைஞன்… – ஓர் ஆய்வாளரின் உக்ரைன் டைரிக் குறிப்புகள்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் 100 நாட்களை கடந்து விட்டது. இந்தத் தாக்குதல்கள் இன்னும் நிறுத்தப்படவில்லை, மக்கள் அகதிகளாக வெளியேற்றப்படுவதும் நிற்கவில்லை. போரின் தொடக்க நாட்களில் பதிவு செய்யப்பட்ட பாதிப்புகளும், அதன் தாக்கங்களும் ஏறக்குறைய குறைந்துவிட்டன. உக்ரைன் பாதிப்புகளைப் பேசிய உலக நாடுகள் தற்போது போரால் தங்களுக்கு என்ன பாதிப்பு என்று கவலைப்படத் தொடங்கிவிட்டன. ஒரு கமர்ஷியல் சினிமா வெளியான ஆரம்ப நாட்களின் பரபரப்பு போலவே விவாதங்களும் கவனமும் குவிந்து பின்னர் மறக்கப்பட்டுவிட்டன.இந்த நிலையில், இனவரைவியலாளர் … Read more

இஸ்லாமாபாத்தில் இரவு 10 மணிக்குமேல் திருமண விழாக்களுக்கு தடை| Dinamalar

இஸ்லாமாபாத்:பாக். அரசு மின் சிக்கன நடவடிக்கையாக தலைநகர் இஸ்லாமாபாதில் இரவு 10:00 மணிக்கு மேல் திருமண விழாக்கள் நடத்துவதை தடை செய்துள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தானிலும் இலங்கையைப் போலவே அன்னியச் செலாவணி பற்றாக்குறை நிலவுகிறது. ”பெட்ரோல் டீசல் வாங்க பணமில்லை” என பாக். பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பகிரங்கமாக அறிவித்துள்ளார். எரிபொருள் பற்றாக்குறையால் இங்கு மின் உற்பத்தி குறைந்துள்ளது.இதையடுத்து அமல்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சிக்கன நடவடிக்கையாக அரசு அலுவலகங்களுக்கு சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்நிலையில் … Read more

பாகிஸ்தானில் இரவு 10 மணிக்கு மேல் திருமண நிகழ்ச்சிக்கு தடை: மின் பற்றாக்குறையை சமாளிக்க புதிய நடவடிக்கை

இஸ்லாமாபாத்: பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தான் நிலவும் மின்பற்றாக்குறையை சமாளிக்க, இரவு 10 மணிக்கு மேல் திருமண நிகழ்ச்சிகள் நடத்த தடைவிதித்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையான மின்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. மின்பற்றாக்குறை நாட்டின் பொருளாதாரத்தை பாதித்துள்ள நிலையில் மின்சாரத்தை சேமிக்கவும், மின் பயன்பாட்டை குறைக்கவும், சனிக்கிழமையும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிகப்படியான மின்சார பயன்பாட்டை குறைக்கும் வகையில், தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரவு 10 மணிக்கு மேல் திருமணநிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. … Read more