வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: அமெரிக்கா கண்டனம்| Dinamalar

சீயோல்: வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டு துவங்கியது முதல் வடகொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. 5 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் முதல் முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை (ஐசிபிஎம்) சோதித்து உலக நாடுகளை அதிரவைத்தது. இந்த நிலையில் வடகொரியா நேற்று 3 ஏவுகணைகளை ஒரே நாளில் சோதித்ததாக தென்கொரியா ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து தென்கொரியாவின் கூட்டுப்படை தலைமை … Read more

இஸ்லாமாபாத்தில் ராணுவம் நிலைநிறுத்தம் – பாகிஸ்தான் அரசு உத்தரவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பாராளுமன்றத்தில் கடந்த மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். தனது ஆட்சி கவிழ்ந்ததில் வெளிநாட்டு சதி இருக்கிறது எனக்கூறிய இம்ரான் கான், ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றதை ஏற்க மறுத்து வருகிறார். பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஐ-இன்சாப் கட்சியின் ஆதரவாளர்களை திரட்டி இம்ரான்கான் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே, பாகிஸ்தான் … Read more

போலீஸ் துப்பாக்கிச் சூடு; பிரேசிலில் 28 பேர் பலி| Dinamalar

ரியோ டி ஜெனிரோ,-குற்றவாளிகளை பிடிக்க போலீசார் நடத்திய அதிரடி சோதனையின் போது நடந்த, துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் உயிரிழந்தனர்.தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில், பிற மாகாணங்களை சேர்ந்த கொள்ளையர், போதைப் பொருள் கடத்தல்காரர்கள் ஏராளமானோர் பதுங்கியுள்ளனர். குற்ற வாளிகளைப் பிடிக்க நேற்று முன் தினம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 41 வயது பெண் உட்பட 28 பேர் கொல்லப்பட்டனர்.அதிரடி சோதனை தொடர்ந்து நடக்கிறது. … Read more

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 3வது உலகப் போருக்கு வழிவகுக்கும் – அமெரிக்க தொழிலதிபர்

26.5.2022 02.00: டாவோசில் நடைபெற்று வரும் உலக வர்த்தக மாநாடு நடைபெற்றது. இதில் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ சொரோஸ் பங்கேற்று பேசினார்.  அப்போது பேசிய அவர், உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு மூன்றாவது உலகப் போரை நோக்கி இட்டுச் செல்லலாம். அத்தகைய போர் மனித குலத்தை முழுமையாக அழித்துவிடும். எனவே, மனிதகுலம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் இப்போர் விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும். விளாடிமிர் புதின் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றார்.

ரூ.12 லட்சத்தில் நாயாக மாறிய ஜப்பான் இளைஞர்| Dinamalar

டோக்கியோ,-ஜப்பானைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு, ஏதாவது ஒரு விலங்காக மாற வேண்டும் என்ற வினோத ஆசை ஏற்பட்டது. இதற்காக, 12 லட்சம் ரூபாய் செலவழித்து, அவர் நாய் போல் மாறியுள்ளார். ஆசிய நாடான ஜப்பானைச் சேர்ந்த, டோகோ என்ற இளைஞர், சமீபத்தில் சமூக வலைதளம் ஒன்றில் ‘வீடியோ’ ஒன்றை வெளியிட்டார். அதில், அழகான நாய் ஒன்று நடப்பது, குறைப்பது, உருள்வது என, பல சேட்டைகளை செய்கிறது.இறுதியில் அந்த நாய் பேசத் துவங்குகிறது. அதன்பிறகுதான், டோகோ என்ற அந்த … Read more

ஆப்கானிஸ்தான் – இரு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 14 போ் பரிதாப பலி

காபூல்: ஆப்கானிஸ்தானின் காபூல் நகரத்தில் உள்ள ஹஸ்ரத் ஜகாரியா மசூதியில் நேற்று மாலை பலா் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா். அப்போது மசூதி மீது பயங்கரவாதிகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினா். இதில் 5 போ் பாிதாபமாக உயிாிழந்தனா். மசூதியில் நடைபெற்ற தாக்குதலில் 5 போ் உயிாிழந்துள்ளதாகவும், 22 போ் காயமடைந்துள்ளதாக மருத்துவ நிா்வாகம் சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, நாட்டின் வட பகுதியில் உள்ள மசார்-இ-ஷெரீப் என்ற நகரத்தில் மினி பஸ் மீது 3 குண்டுகள் வீசப்பட்டதில் 9 … Read more

ஊரடங்கின்போது மது விருந்துமன்னிப்பு கேட்டார் பிரதமர்| Dinamalar

லண்டன்,-கொரோனா ஊரடங்கு காலத்தில் விதிகளை மீறி மது விருந்தில் பங்கேற்றதற்காக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீண்டும் மன்னிப்பு கேட்டார். கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்தபோது, ஐரோப்பிய நாடான பிரிட்டனில், 2020ல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடும் கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், பல்வேறு மது விருந்து நிகழ்ச்சிகளில் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டோர் பங்கேற்றதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக மூத்த அரசு அதிகாரியான ஸ்யூ கிரே விசாரணை நடத்தினார். பிரதமர் போரிஸ் ஜான்சன், நிதி அமைச்சரான … Read more

அமெரிக்கா-தென்கொரியா வீரர்கள் கூட்டாக ஏவுகணை பயிற்சி

வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய நிலையில், அமெரிக்க படையினருடன் இணைந்து தென்கொரியா ஏவுகணை பயிற்சிகளை நடத்தியிருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. ஜோ பைடன் ஆசியாவை விட்டு வெளியேறிய சில மணி நேரத்தில் வடகொரியா அடுத்தடுத்து 3 ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா வீரர்கள் இணைந்து ஏவுகணை பயிற்சிகளை இன்று மேற்கொண்டனர்.  Source link

அமெரிக்கா துவக்க பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 சிறுவர்கள், 2 ஆசிரியர்கள் உள்பட 21 பேர் உயிரிழப்பு.!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் பள்ளியில் 18 வயது இளைஞனால் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு நிகழ்வில், 19 சிறுவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். டெக்சாசின் ராப் துவக்க பள்ளியில், கைத்துப்பாக்கி மற்றும் ரைபிளுடன் நுழைந்த சல்வடொர் ராமொஸ் என்ற இளைஞர் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில், 19 சிறுவர்கள், பள்ளி ஆசிரியர்கள் இருவர் என மொத்தம் 21 பேர் உயிரிழந்தனர். போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் கொலையாளி சுட்டுக்கொல்லப்பட்டான். துப்பாக்கிச்சூடு நிகழ்வுக்கு முன், அந்த இளைஞர் துப்பாக்கியுடன் கூடிய … Read more

பாகிஸ்தானில் சாமானியர் ஏன் அரசியல் முடிவுகளால் பாதிக்கப்பட வேண்டும்- முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் காட்டம்

பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹாசீப், பாகிஸ்தானில் சாதாரண மனிதர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி டுவிட்டரில் காட்டமாக கருத்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்து முகமது ஹாசீப், “லாகூரில் உள்ள எந்த பெட்ரோல் நிலையத்திலும் பெட்ரோல் கிடைக்கவில்யைா ? ஏடிஎம் இயந்திரங்களில் பணமில்லையா? ஒரு சாமானியர் ஏன் அரசியல் முடிவுகளால் பாதிக்கப்பட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்த பதிவில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானையும், தற்போதைய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் சில அரசியல்வாதிகளை டேக் … Read more