'நாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டோம்' – முகத்தை மூடி செய்தி வாசித்த ஆப்கன் பெண் செய்தியாளர்கள் வேதனை

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்களை உத்தரவை ஏற்று பெண் நிருபர்களும், செய்தி வாசிப்பாளர்களில் தங்கள் முகத்தை துணியால் மூடி செய்தி வழங்கி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் வீட்டைவிட்டு பெண்கள் வெளியே வரும்போது, உடலை முழுவதும் மூடக்கூடிய நீலநிற புர்கா அணிந்தே வரவேண்டும். அவ்வாறு முகத்தை மறைக்காமல் வரும் பெண்களின் தந்தை அல்லது நெருங்கிய ஆண் உறவினர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். அரசாங்க வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தலிபான் அரசின் தலைவரான ஹிபத்துல்லா அகுந்த்ஸாடா உத்தரவிட்டார். தலிபான்களின் இந்த உத்தரவுக்கு சர்வதேச … Read more

நீண்ட இடைவேளைக்கு பிறகு சுரங்கப்பாதைகளில் இருந்து குடியிருப்புக்கு திரும்பும் கார்கீவ் மக்கள்.!

ரஷ்யா நடத்திய தாக்குதலால் உக்ரைனின் கார்கீவில் ரயில் சுரங்கப்பாதைகளில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள ரயில் நிலையம் ஒன்றின் சுரங்கப்பாதையில் கடந்த 2 மாதங்களாக பதுங்கி இருந்தனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு கார்கீவில் கடந்த வாரம் பொதுப்போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில் சுரங்கப்பாதைகளில் உள்ள மக்கள் மீண்டும் தங்களது குடியிருப்புக்கு திரும்பி வருகின்றனர்.  Source link

'அமெரிக்க அழுத்தத்திற்கு பணியாத இந்தியா'- பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு இம்ரான் கான் பாராட்டு

அமெரிக்க அழுத்தத்திற்குப் பணியாமல் ரஷ்யாவிலிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து எரிபொருள் விலையை இந்தியா குறைத்துள்ளது என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் பதவியில் இருந்தபோதே பிரதமர் மோடியை பல தருணங்களில் பாராட்டியிருக்கிறார். இதற்காக உள்நாட்டில் எதிர்ப்பையும் சம்பாதித்திருக்கிறார். இந்நிலையில் மீண்டும் ஒருமுறை தனது பாராட்டை அவர் பதிவு செய்துள்ளார். முன்னதாக நேற்று பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு … Read more

மே 28 வரை மீண்டும் முழு ஊரடங்கு – அரசு அதிரடி அறிவிப்பு!

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இன்று மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்த வைரஸ் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும், அது, … Read more

இஸ்ரேல் நாட்டிலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பல்வேறு மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து இஸ்ரேலிலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கத்திய ஐரோப்பாவுக்கு சென்று அங்கு குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட ஒருவரை பார்த்துவிட்டு திரும்பிய, 30 வயதுடைய நபருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அறிகுறிகள் இருந்ததன் பேரில் டெல் அவிவ் நகரில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது அவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  Source link

அதிபர் ஜோ பைடன் உள்பட 963 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட 963 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. ரஷ்ய வெளியுறவுத்துறை இணையதள பக்கத்தில் தடை விதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், உக்ரைன் போரை தொடர்ந்து அமெரிக்கா எடுத்த விரோத நடவடிக்கைகள் அந்நாட்டுக்கு எதிராகவே திரும்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Source link

கிரிப்டோவில் ஒரு டாலர் கூட முதலீடு செய்யவில்லை; காரணத்தை விளக்கும் பில் கேட்ஸ்

கிரிப்டோ முதலீட்டில் சிறு முதலீட்டாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் கூட முதலீடுகளின் அளவை பார்க்கும் போது பெரும் பணக்காரர்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் தான் அதிகம். பிட்காயின் உட்பட அனைத்து முன்னணி கிரிப்டோகரன்சியின் மதிப்புகள் தற்போது சரிந்துள்ள வேளையில் பில் கேட்ஸ் தற்போது தான் ஏன் கிரிப்டோகரன்சியில் ஒரு டாலர் கூட முதலீடு செய்யவில்லை என விளக்கம் கொடுத்துள்ளார். மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் சமீபத்தில் Reddit தளத்தில் ‘Ask Me Anything’  என்ற … Read more

இந்தியாவில் ஐபோன் தயாரிப்பை அதிகரிக்க ஆப்பிள் திட்டம்

இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சீனாவில் கடுமையான கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் உள்ளதால், பிற நாடுகளில் உள்ள ஆலைகளில் உற்பத்தியை அதிகரிக்கும்படி ஆப்பிள் நிறுவனம் அதன் ஒப்பந்த நிறுவனங்களிடம் கூறியுள்ளது. கொரோனா சூழலில் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பொறியாளர்களையும் வல்லுநர்களையும் அந்நாட்டுக்கு அனுப்பி வைப்பதை ஆப்பிள் நிறுவனம் நிறுத்திக் கொண்டது. கடந்த ஆண்டில் ஆப்பிள் ஐபோன்களில் 90 விழுக்காடு சீனாவிலும், 3 விழுக்காடு இந்தியாவிலும் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஐபோன் … Read more

கனடாவை உலுக்கிய கடும் புயலுக்கு 4 பேர் பலி… 9 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு

மான்ட்ரியல்: கனடாவின் கிழக்கு மாகாணங்களான  ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் நேற்று கடுமையான புயல் தாக்கியது. இடி மின்னலுடன் பலத்த மழையும் பெய்தது.  இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 9 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. புயல், மழை தொடர்பான விபத்துகளில் 4 பேர் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன. 

அமெரிக்க அதிபர் ரஷ்யாவுக்க்குள் செல்ல நிரந்தரத் தடை: விளாடிமிர் புடின்

ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடி கொடுக்க அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் எடுத்த நடவடிக்கை சர்வதேச கவனங்களை ஈர்த்துள்ளது. ரஷ்யாவிற்குள் நுழைவதற்கு, அமெரிக்க அதிபருக்கு நிரந்தர தடை விதித்துள்ளார் புடின். இது மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைக்கு எதிரான ஒரு அடையாள நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க அமெரிக்கர்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை ரஷ்யா வெளியிட்டுள்ளது என்று சிஎன்என் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.  மேலும் படிக்க | மேற்கத்திய நாடுகள் தடைக்கு … Read more