ரியாலிட்டி ஷோ படபிடிப்பின் போது ஆபத்தான மலையில் கடும் வெப்பத்தில் சிக்கி வெயில் தாங்காமல் மயக்கமடைந்த படக்குழுவினர்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள மலை ஒன்றில் ரியாலிட்டி ஷோ படம்பிடித்துக் கொண்டிருந்த குழுவினர் கடும் வெப்பத்தில் சிக்கியதால் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். கடல் மட்டத்திலிருந்து 2704 அடி உயரத்தில் அமைந்துள்ள அந்த மலை செங்குத்தான பாறைகளை கொண்டதாகும். அங்கு கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அந்த குழுவினர் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், வெயிலின் தாக்கம் 108 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியதால் அவர்களில் சிலர் மயங்கி விழுந்தனர். ட்ரோன்கள் மூலம் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். … Read more

தந்தைக்கும் எனக்கும் இனி எந்த ஒட்டு உறவு இல்லை – பாலினம் மாறிய எலன் மஸ்க்கின் மகன் ஆவேசம்

கடந்த 2000 ஆம் ஆண்டு எலன் மஸ்க்கும் ஜெனிபர் ஜஸ்டீன் வில்சன் என்ற பெண்ணுக்கும் திருமணம் முடிந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு இரட்டை குழந்தைகள் உள்ளன. பின்னர் 2008ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்துக்கொண்டனர். இந்நிலையில் எலன் மஸ்க்கிற்கு முதலாவதாக பிறந்த இரட்டை குழந்தைகள்  சேவியர், கிரிப்ஃபின் என பெயரிடப்பட்டனர். இதில் மூத்த மகன் தான் சேவியர் மஸ்க். இவர்கள் இருவரும் சில நாட்களுக்கு முன் தங்களது 18வது பிறந்த நாளை கொண்டாடினார்கள். பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு … Read more

கழிவுநீரில் போலியோ வைரஸ் – மீண்டும் தலைதூக்குகிறதா போலியோ?

பிரிட்டன் நாட்டின் லண்டன் நகரில் கழிவுநீரில் போலியோ வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 1970 மற்றும் 1980-களில் உலகையே புரட்டிப் போட்ட நோய் இளம்பிள்ளை வாதம். தீவிர மருத்துவ நடவடிக்கைகளினாலும், பரவலான தடுப்பூசி பயன்பாட்டினாலும் போலியோ தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டன் நகரின் கழிவுநீரில் தற்போது வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லண்டனில் கடந்த 1984 ஆம் ஆண்டு கடைசியாக போலியோ … Read more

ஆப்கானிஸ்தான் தலைநகரில் இந்திய தூதரகம் மீண்டும் திறப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகரில் கடந்த ஆண்டு மூடப்பட்ட இந்திய தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட்டில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியபோது காபூலில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகள் டெல்லி திரும்பினர். இந்நிலையில், இந்திய தொழில்நுட்பக்குழுவினர் காபூல் சென்றதன் மூலம் அங்குள்ள தூதரகம் செயல்பட்டிற்கு வந்துள்ளது. இது குறித்து தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ஆப்கானிஸ்தானுக்கு அளிக்கப்படும் மனிதாபிமான உதவிகள் முறையாக சென்றடவதை கண்காணிக்கவும், அதனை ஒருங்கிணைக்கவும் இந்திய குழு காபூல் சென்றதாக குறிப்பிட்டுள்ளது. Source link

தரையிறங்கும் போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளான ராணுவ சரக்கு விமானம்.. 4 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவின் ரியாசான் நகருக்கு அருகே இராணுவ சரக்கு விமானம் தரையிறங்கும் போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். Ilyushin Il-76 என்ற சரக்கு விமானத்தில் மொத்தமாக 9 பேர் பயணித்துள்ளனர். ரியாசான் பகுதியில் தரையிறங்கும் போது எதிர்பாராத விதமாக விமானம் தீப்பற்றியதில் அதில் சிக்கி 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விமானத்தின் என்ஜின் கோளாறால் இந்த விபத்து நேர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. Source link

நிலவு துகள்கள், கரப்பான்பூச்சிகள் ரூ.4 கோடிக்கு ஏலம்; மறுத்து முரண்டுபிடிக்கும் நாசா

1969 ஆம் ஆண்டு நாசாவின் அப்போலோ 11 மிஷனாக நிலவில் இருந்து  இருந்து  47 பவுண்டுகள் (21.3 கிலோகிராம்) எடை கொண்ட பாறை பூமிக்கு கொண்டு வரப்பட்டது.  இந்த பாறையின் துகள்களை வைத்து நிலவின் மண் மற்றும் பாறைகளில் நச்சுத்தன்மையுள்ளதா என்ற ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன. அதன் ஒரு பகுதியாக சில பூச்சிகள், மீன்கள் மற்றும் பிற சிறிய உயிரினங்களுக்கு அந்த நிலவு பாறையின் துகள்கள் உணவாக அளிக்கப்பட்டன. பின்னர் அவை சாகும் வரை அவற்றை கண்காணித்தனர்.  பின்னர் … Read more

‘‘மறப்போம் மன்னிப்போம்’’ -ஜமால் கஷோகி படுகொலைக்குப் பின்பு முதன்முறை பயணம்: பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் துருக்கிக்கு உதவும் சவுதி இளவரசர்

அங்காரா: பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலைக்குப் பிறகு துருக்கி நாட்டிற்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் முதன்முறையாக பயணம் மேற்கொண்டார். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் துருக்கி, ஜமால் கஷோகி படுகொலையை மறந்து சவுதியின் உதவியை கைகுலுக்கி வரவேற்றுள்ளது. சவுதி அரேபியா அரசையும் அந்த நாட்டு மன்னர் மற்றும் இளவரசர்களையும் கடுமையாக விமர்சித்து கட்டுரைகளை எழுதி வந்தவர் புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஜமால் கஷோகி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி … Read more

வானில் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கும் 7 கிரகங்கள்.. இன்று முதல் 27 ஆம் தேதிவரை வானில் ஏற்படும் அற்புத நிகழ்வு

வானில் இன்று முதல் வருகிற 27 ஆம் தேதி வரை 7 கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கும் அற்புதம் நிகழவுள்ளது. வெள்ளி, புதன்,செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய 7 கிரகங்கள் 18 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கின்றன. இந்த கிரகங்களின் அணிவகுப்பில் நெப்டியூன் மற்றும் யுரேனஸ்-ஐ தவிர ஏனைய 5 கிரகங்களையும் 24 ஆம் தேதி முதல் சூரிய உதயத்திற்கு முன்னால் வெறும் கண்ணால் பார்க்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். … Read more

கழிவு நீரில் போலியோ வைரஸ் : மீண்டும் பரவுகிறதா போலியோ?

1970  மற்றும் 1980-களில் உலகையே புரட்டிப்போட்ட நோய் இளம்பிள்ளை வாதம். தீவிர மருத்துவ நடவடிக்கைகளினாலும், பரவலான தடுப்பூசி பயன்பாட்டினாலும் போலியோ தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் லண்டன் நகரின் கழிவு நீரில் தற்போது வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் நகரில் கடந்த 1984-ம் ஆண்டு கடைசியாக போலியோ தொற்று கண்டறியப்பட்டது. 2003-ம் ஆண்டு பிரிட்டன் போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. தற்போது 40 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டன் நகரில் போலியோ பரவும் அபாயம் உள்ளதாக … Read more

ஆப்கன் நிலநடுக்கம்; உடைகளை இழந்த மக்கள்: உதவிக் கோரும் தலிபன்கள்

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களை உடைமைகளை இழந்துள்ளனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பலரும் அம்மக்களுக்கான உதவியை கொண்டு சேர்ப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளனர். கிழக்கு ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை காலை 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து சுமார் 44 கி.மீ. தொலைவில் பூமியில் 51 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்க ஆய்வு மையம் தெரித்தது, இந்த … Read more