ஜெர்மனியில் 30 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட பிரதமர் மோடியின் புகைப்படம் இணையத்தில் வைரல்

பெர்லின் : கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் பல்வேறு நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. உக்ரைன்-ரஷிய போர் காரணமாக ஐரோப்பிய பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் அவர் நேற்று முன்தினம் ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றார். அங்கு அவர் அந்த நாட்டின் பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸை சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் ஜெர்மனி பயணத்தை … Read more

கட்டாயப்படுத்தி கொரோனா பரிசோதனை…அதிர்ச்சியூட்டும் காணொலி

சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியதை அடுத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதோடு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வீட்டை விட்டு வெளியே வர முடியாததால் ஏராளமானோர் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இன்றித் தவிப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.  ஷாங்காயைப் போல பெய்ஜிங் நகரிலும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெய்ஜிங்கிலும் 40க்கும் மேற்பட்ட சுரங்கப்பாதைகள், … Read more

காங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ்: கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை

காங்கோ: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையில் காங்கோ அரசு ஈடுபட்டுள்ளது. காங்கோவில் உள்ள ஈக்வடார் மாகாணத்தில் பண்டகா பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி, ஒருவருக்கு எபோலா வைரஸ் உறுதிச் செய்யப்பட்டுள்ளது. எபோலா தாக்கிய நபர் ஏப்ரல் 21 ஆம் தேதி உயிரிழந்தார். இதனை காங்கோவின் சுகாதாரத் துறை அமைச்சகம் உறுதிச் செய்துள்ளது. எபோலாவால் உயிரிழந்தவருடன் தொடர்பில் இருந்த 267 பேர் … Read more

ஷாங்காயில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் பொதுமக்கள் அவதி!

சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்றால் விதிக்கப்பட்டுள்ள கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகள் விநியோகித்த உணவுப்பொருட்கள் தரமற்று இருந்ததால் அதை சாப்பிட்ட சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, சீனாவில் புதிதாக 360 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் 261 பேர் ஷாங்காய் நகரத்தை சேர்ந்தவர்கள் என்றும் அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.  Source … Read more

பிரதமர் மோடிக்கு டென்மார்க் ராணி விருந்து

கோபன்ஹேகன் : பிரதமர் மோடி தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் 2-வது கட்டமாக நேற்று முன்தினம் டென்மார்க் சென்றார். அந்த நாட்டின் பிரதமர் மெட்டே பிரடெரிக்சனுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பிலும் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. அதைத்தொடர்ந்து கோபன்ஹேகனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அமலியன்போர்க் அரண்மனைக்கு பிரதமர் மோடி சென்றார். ராணி இரண்டாம் மார்கிரேத்தை சந்தித்து, அவர் பட்டத்துக்கு வந்ததன் பொன்விழாவையொட்டி, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு ராணி விருந்து அளித்து … Read more

உக்ரைனை கைப்பற்றும் ரஷ்யாவின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது – ட்வீட் போட்ட பிரிட்டன்!

உக்ரைனில் ராணுவம் அல்லாத இலக்குகள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவில், உக்ரைனை கைப்பற்றும் ரஷ்யாவின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதால் பள்ளிகள், மருத்துவமனைகள், குடியிருப்புகள், போக்குவரத்து மையங்கள் உள்ளிட்ட ராணுவம் அல்லாத இலக்குகளின் மீது ரஷ்ய படைகள் ஏவுகணைகள் மூலம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக கூறியுள்ளது. கருங்கடலில் இருந்து செல்வதற்கு ஏதுவாக அதனை ஒட்டியிருக்கும் ஒடேசா, கெர்சன், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை … Read more

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு டிரைவிங் லைசென்சு வழங்க தடை

காபூல்: ஆப்கானிஸ்தான் தலீபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு பெண்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தனியாக பெண்கள் பயணம் செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. எந்த நேரமும் தலீபான்கள் வீதிகளில் துப்பாக்கியுடன் ரோந்து சுற்றி வருகிறார்கள். இதனால் ஒரு வித பீதியுடன் பொதுமக்கள் உள்ளனர். இந்த நிலையில்  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சில பெண்கள் வாகனங்களை ஓட்டி வந்தனர். இதையறிந்த தலீபான்கள் தற்போது அங்கு பெண்களுக்கு டிரைவிங் லைசென்சு … Read more

வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவாக அமெரிக்காவில் 10 லட்சத்தை தாண்டிய கொரோனா உயிரிழப்பு.!

வேறெந்த நாட்டிலும் இல்லாத இழப்பாக அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது. கடந்த ஒருநாளில் 63 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தொற்று பரவியத் தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 75 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு கொரோனா பாதித்துள்ளதாக அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொற்று விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில், படுக்கைகள், வெண்டிலேட்டர்கள், பணியாளர் … Read more

ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி படிப்படியாக குறைக்கப்படும்- ஜரோப்பிய நாடுகள் அறிவிப்பு

பாரீஸ்: உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து 2 மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. இந்த போர் காரணமாக ஐரோப்பிய யூனியன் ரஷியாவுக்கு எதிராக ஏற்கனவே பொருளாதார தடை விதித்து உள்ளது. ரஷியாவில் இருந்து நிலக்கரி இறக்கு மதிக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் தடை விதித்து உள்ளது. இதன் தொடர்ச்சியாக கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்க முடிவு செய்து உள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய யூனியன் துணைத்தலைவர் உர்தலா லொண்டெர் லெயேன் கூறியதாவது: ரஷியா … Read more

சனி கிரகத்தில் இன்னொரு பூமி: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு| Dinamalar

வாஷிங்டன்: சூரிய குடும்பத்தில் சனி கிரகம் அருகே பூமியை போல தோற்றமளிக்கும் இன்னொரு பூமியை அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலை விஞ்ஞானி மேத்யூ வபோட்ரா தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது. சூரியனில் இருந்து ஆறாவதாக சனி கோள் உள்ளது. சூரியன் – சனி இடையிலான துாரம் 147 கோடி கி.மீ. பூமிக்கு ஒரு நிலவு இருப்பது போல சனி கிரகத்துக்கு 82 நிலவுகள் உள்ளன. இதனால் சனி கிரகமும் ஒரு சிறிய சூரியகுடும்பம் போல உள்ளது. இந்த 82 நிலவுகளில் … Read more