நிலக்கரி வாங்க பணமில்லை; 18 மணிநேரம் மின்வெட்டால் தவிக்கும் பாகிஸ்தான்: மக்கள் போராட்டம் 

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கிராமப்புறங்களில் ஒரு சில பகுதிகள் ஒரு நாளைக்கு சுமார் 18 மணிநேரம் நீடித்த மின்வெட்டு அமலில் உள்ளது. இதனால் மக்கள் போராட்டங்கள் தொடங்கியுள்ளன. பாகிஸ்தானிலும் கடுமையான நிதி நெருக்கடி நிலவி வருகிறது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததாலும், கடுமையான விலை உயர்வாலும் பாகிஸ்தான் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இந்த பொருளாதார நெருக்கடி காரணமாகவே இம்ரான் கான் அரசு பதவி விலக வேண்டும் என எதிர்ப்பு எழுந்தது. பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் … Read more

இலங்கையில் தொழிலாளர் தின விழாவில் பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்பு

கொழும்பு: இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, இன்று நுவேரா எலியாவில் நடைபெற்ற தொழிலாளர் தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.  இதுதொடர்பாக அண்ணாமலை கூறியிருப்பதாவது:- இலங்கையின் நுவேரா எலியாவில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) மே தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். நமது பிரதமர்  மோடி அவர்கள், தமிழர்களுக்காகவும், இலங்கைக்காகவும் செய்யும் உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆயிரக்கணக்கான மலையகத் தமிழர்கள் இன்று இங்குக் கூடியிருந்தனர்.  2017ஆம் ஆண்டு … Read more

90வது பிறந்த நாளில் திருப்பியளிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் விசென்சா : இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இத்தாலிய சிறுமி ஒருவரின் 13வது பிறந்தநாள் கேக்கை அமெரிக்க வீரர்கள் திருடிச் சென்றுள்ளனர். கடந்த ஏப்.,28 அன்று 90வது பிறந்த நாள் கொண்டாடிய அவருக்கு அமெரிக்க ராணுவத்தினர் கேக் வழங்கி தங்களால் ஏற்பட்ட வடுவை மறக்கச் செய்தனர். இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க வீரர்கள் இத்தாலியின் விசென்சாவில் ஜெர்மன் வீரர்களுடன் சண்டையிட்டனர். அதில் அமெரிக்க டாங்கிகள் அழிக்கப்பட்டு 19 வீரர்கள் … Read more

"மரியுபோல் வாசிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட வேண்டும்" – கீவ் வாசிகள் போராட்டம்

கீவ், உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷியா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் வீரர்கள் துளியும் அஞ்சாமல் ரஷியாவுக்குத் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாகவே போர் இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தொடர்கிறது. இந்த நிலையில், உக்ரைனில் மரியுபோல் நகர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி கீவ் வாசிகள் போராட்டம் நடத்தினர்.  தங்கள் உறவுகள் மரியுபோலில் … Read more

#லைவ் அப்டேட்ஸ்: நீண்ட காலத்திற்கு கெர்சானில் வலுவான செல்வாக்கை செலுத்த விரும்பும் ரஷியா..!!

கீவ்,  உக்ரைன் மீதான ரஷிய போர், உலகளவில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:- மே 01,  12.05 p.m நீண்ட காலத்திற்கு உக்ரைனின் கெர்சானில் வலுவான செல்வாக்கை செலுத்த ரஷியா விரும்புகிறது: இங்கிலாந்து மாஸ்கோ சார்பு நிர்வாகத்தை நிறுவுவதன் மூலம் கெர்சன் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷியா தனது கட்டுப்பாட்டை சட்டப்பூர்வமாக்க முயன்றதாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. புதிய அரசாங்கம் உக்ரைன் … Read more

ஆப்கன் பயணிகள் பேருந்து குண்டுவெடிப்பு: ஐஎஸ் பொறுப்பேற்பு

ஆப்கானிஸ்தானில் பயணிகள் பேருந்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ ஆப்கனில் கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர் குண்டு வெடிப்பு நடத்தி வருகின்றன. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் 10 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர் மற்றும் பஸ்ஸில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ஒரு பெண் உயிரிழந்தார். 3 பேர் பலியாகினர். இந்த நிலையில் பஸ்ஸில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் … Read more

எகிப்தில் கால்வாயில் ரிக்சா கவிழ்ந்ததில் 8 குழந்தைகள் உயிரிழந்த சோகம்

கெய்ரோ, எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் இருந்து வடக்கே பெஹைரா மாகாணத்தில் உள்ள நகரத்தில் தொழிற்சாலையில் பணியாற்றியவர்களை ஏற்றி கொண்டு ரிக்ஷா ஒன்று அவர்களை வீட்டில் விடுவதற்காக புறப்பட்டு சென்று உள்ளது. அந்த ரிக்சா வண்டி அந்நாட்டின் நைல் ஆற்றின் டெல்டா பகுதியில் நீர்ப்பாசன கால்வாய் வழியே செல்லும்போது, திடீரென அதில் கவிழ்ந்தது. இதில் ரிக்சாவில் பயணித்த 12 பேரில் 8 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்.  மீதம் இருந்த 4 பேர் உயிர் தப்பியுள்ளனர். ரிக்சாவை ஓட்டி … Read more

”சீனாவில் கொரோனா சமூக பரவல் திறம்பட கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” – ஷாங்காய் மாநகர நிர்வாகம்

சீனாவின் ஷாங்காயில் கொரோனா தொற்று பாதிப்பு சமூக பரவலாக மாறியுள்ள நிலையில், அது திறம்பட கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக, ஷாங்காய் மாநகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொற்று தடுப்பு பணியில், கூட்டாக ஒத்துழைப்பு அளித்த அனைத்து துறையினருக்கும், பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ள ஷாங்காய் நகர நிர்வாகம், அண்மைக்கால தொற்று பாதிப்பு அதிகரிப்பை கட்டுப்படுத்துவதில் முதற்கட்ட முன்னேற்றத்தை அடைந்திருப்பதாக கூறியுள்ளது. இதனிடையே ஷாங்காயில் ஒரே நாளில் புதிதாக 788 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. Source link

உக்ரைன் போர்- அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்து 20 பேர் வெளியேற்றம்

மரியுபோல்: உக்ரைனின் மரியுபோல் நகரை நீண்ட போராட்டத்துக்கு பிறகு ரஷிய படை கைப்பற்றி உள்ளது. அங்குள்ள அசோவ்ஸ்டல் உருக்காலையில் தஞ்சம் அடைந்திருந்த பொதுமக்களை வெளியேற்றும் பணி தொடங்கியது. இன்று அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்து 20 பொதுமக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக உக்ரைன் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.  குழந்தைகள் பெண்கள் உட்பட 20 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும், அவர்கள் உக்ரைனின் ஜப்போரிஜியா நகரத்துக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்று நம்புவதாகவும் வீடியோவில் பேசிய ராணுவ வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  ஐ.நா. சபையின் திட்டமிடப்பட்ட … Read more

'வட கொரியாவை மிரட்டினால் அணு ஆயுதம் பாயும்!' – அதிபர் கிம் ஜாங் உன் வார்னிங்!

”வட கொரியாவை மிரட்டினால் அணு ஆயுதங்களால் பதிலடி கொடுப்போம்” என வட கொரிய அதிபர் கிம் ஜங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிழக்கு ஆசியா நாடான வட கொரியாவின் 90வது ஆண்டு ராணுவ தின விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், நீர்மூழ்கி கப்பலை தகர்க்கும் ஏவுகணைகள் உட்பட நவீன ஆயுதங்களின் ராணுவ அணிவகுப்பு நடந்தது. இவ்விழாவில் ‘ராணுவ பலத்தை மேலும் அதிகரிக்க வேண்டும்’ என, அந்நாட்டு அதிபர் கிம் … Read more