உக்ரைன் போர்- அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்து 20 பேர் வெளியேற்றம்

மரியுபோல்: உக்ரைனின் மரியுபோல் நகரை நீண்ட போராட்டத்துக்கு பிறகு ரஷிய படை கைப்பற்றி உள்ளது. அங்குள்ள அசோவ்ஸ்டல் உருக்காலையில் தஞ்சம் அடைந்திருந்த பொதுமக்களை வெளியேற்றும் பணி தொடங்கியது. இன்று அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்து 20 பொதுமக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக உக்ரைன் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.  குழந்தைகள் பெண்கள் உட்பட 20 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும், அவர்கள் உக்ரைனின் ஜப்போரிஜியா நகரத்துக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்று நம்புவதாகவும் வீடியோவில் பேசிய ராணுவ வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  ஐ.நா. சபையின் திட்டமிடப்பட்ட … Read more

'வட கொரியாவை மிரட்டினால் அணு ஆயுதம் பாயும்!' – அதிபர் கிம் ஜாங் உன் வார்னிங்!

”வட கொரியாவை மிரட்டினால் அணு ஆயுதங்களால் பதிலடி கொடுப்போம்” என வட கொரிய அதிபர் கிம் ஜங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிழக்கு ஆசியா நாடான வட கொரியாவின் 90வது ஆண்டு ராணுவ தின விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், நீர்மூழ்கி கப்பலை தகர்க்கும் ஏவுகணைகள் உட்பட நவீன ஆயுதங்களின் ராணுவ அணிவகுப்பு நடந்தது. இவ்விழாவில் ‘ராணுவ பலத்தை மேலும் அதிகரிக்க வேண்டும்’ என, அந்நாட்டு அதிபர் கிம் … Read more

“பீனிக்ஸ் கோஸ்ட் தற்கொலை ட்ரோன்”களை உக்ரைனுக்கு வழங்குகிறது அமெரிக்கா

ரஷ்யாவை கட்டுப்படுத்த உக்ரைனுக்கு சூசைட் ட்ரோன் என்ற அழைக்கப்படும் நூற்றுக்கணக்கான பீனிக்ஸ் கோஸ்ட் ட்ரோன்களை அமெரிக்கா வழங்குகிறது. கிழக்கு உக்ரைனில் ஆதிக்கம் செலுத்தம் ரஷ்யாவிற்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா வழங்கும் ட்ரோன்களை அப்பகுதியில் உக்ரைன் நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவை சேர்ந்த இவேக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பீனிக்ஸ் கோஸ்ட் ட்ரோன் பெயருக்கு ஏற்றார் போல் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் சக்தி கொண்டது என கூறப்படுகிறது. உக்ரைனுக்கு 121 ட்ரோன்களை அமெரிக்கா வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி … Read more

அமெரிக்காவின் மிசிசிபி நகரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

மிசிசிபி: அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. போலீசாரை குறிவைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் துப்பாக்கி விநியோகத்தில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.     இதையடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துப்பாக்கிச் சூடு சம்பவங்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். ஆனாலும், துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்கின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் மிசிசிபி நகரில் … Read more

7 நாட்களில் 2 குழந்தைகளுக்கு போலியோ தொற்று – பீதியில் பெற்றோர்கள்!

பாகிஸ்தானில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், இரண்டு குழந்தைகளுக்கு போலியோ தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. பச்சிளம் குழந்தைகளை அதிகம் தாக்கும் மிகவும் கொடூரமான தொற்று நோயான போலியோ (இளம் பிள்ளைவாதம்) நோய், உலகின் பெரும்பாலான நாடுகளில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட போதிலும், பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் போன்ற ஒருசில நாடுகளில் இன்னமும் போலியோ பாதிப்பு உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் 7 நாட்களில் 2 குழந்தைகளுக்கு போலியோ தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கைபர் பக்துங்வா மாகாணத்தின் வடக்கு … Read more

எரிபொருள், எரிவாயு இறக்குமதியில் ஐரோப்பிய நாடுகளுக்கு நிலவும் சிக்கல்

எரிபொருள் மற்றும் எரிவாயுக்கு ரஷ்யாவை நம்பியுள்ள ஐரோப்பிய நாடுகள், ரூபிள் பணப் பரிமாற்றத்தால் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றன. ரூபிளை கொண்டு எரிவாயு வாங்க ஒத்துக் கொள்ளாததால் போலந்து மற்றும் பல்கேரியாவுக்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்திய ரஷ்யாவின் நடவடிக்கையை அச்சுறுத்தலாக கருதுவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. 2019ல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மொத்த எரிவாயு இறக்குமதியில் 41 சதவீதத்தை கொண்டிருந்த ரஷ்யா, சப்ளையை நிறுத்தினால் ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட இறக்குமதி மூலம் எரிவாயுவை பூர்த்தி செய்யும் நாடுகளை … Read more

இனி ட்விட்டர் பயன்படுத்தக் கட்டணம்…ஆப்பு வைத்த எலான் மஸ்க்..

மின்சாரக் கார் தயாரிப்பு, விண்வெளி ஆராய்ச்சி என பல துறைகளில் தடம் பதித்து உலகின் மிகப்பெரிய பணக்காரராக உள்ள எலான் மஸ்க், சமூக ஊடகத்துறையிலும் கால் பதித்துள்ளார். அதுவும் சாதாரணமாக அல்லாமல், முன்னணி சமூக ஊடகமான ட்விட்டரை முழுமையாக வாங்கியுள்ளார். கடந்த வாரம் உலகம் முழுக்க மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதே. முதலில் ட்விட்டரின் 9 சதவீத பங்குகளை வாங்கிய எலான் மஸ்க், அதன் மூலம் நிர்வாக முடிவுகளில் ஆதிக்கம் செலுத்த இயலாது … Read more

மீண்டும் முழு ஊரடங்கு – பிரதமர் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த, பிரதமர் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் – 19 எனப்படும் கொரோனா தொற்று பரவியது. இந்தத் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும் அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருகிறது. இந்நிலையில், சீனா, ஆஸ்திரியா, நெதர்லாந்து உள்ளிட்ட ஒருசில நாடுகளில், தற்போது, கொரோனா … Read more

வெடிகுண்டுடன் விமான நிலையம் வந்த தம்பதி… அலறியடித்து ஓடிய சக பயணிகள்… பரபரப்பு வீடியோ!

இஸ்ரேலில் வெடிகுண்டுடன் விமான நிலையத்திற்கு வந்த அமெரிக்க தம்பதியை கண்டு சக பயணிகள் அலயறிடித்துக் கொண்டு ஓடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கோலன் பகுதிக்கு சுற்றுலா சென்ற அமெரிக்காவை சேர்ந்த தம்பதி, கீழே கிடந்த ஒரு பொருளை எடுத்து, தங்கள் நாட்டுக்கு  கொண்டு செல்ல முயன்றுள்ளது. விமான நிலையத்திற்கு அப்பொருளை தம்பதி கொண்டு சென்ற நிலையில், பாதுகாப்பு சோதனையில் அது வெடிக்காத குண்டு என கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கண்ட சக பயணிகள் நிலையத்திற்குள் அலறியடித்து … Read more

நியூ மெக்சிகோ மாகாணத்தில் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீ.!

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் காட்டுத்தீ பற்றி எரிந்து வேகமாக பரவி வருகிறது. காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால்,  தீ  மளமளவென கல்லினாஸ் பள்ளத்தாக்கு வழியே லாஸ் வேகாஸ் மற்றும் தெற்குப்பகுதியை நோக்கி பரவி வருகிறது. ஒரு வாரத்திற்கு முன்பாக காஃப் பள்ளத்தாக்கில் பரவிய தீயும்,  ஹெர்மிட் மலைப்பகுதிகளில் பரவிய தீயும் ஒன்று சேர்ந்ததாகவும் அப்போது முதல்  97 ஆயிரத்து 64 ஏக்கர் பரப்பிலான வனப்பகுதி தீயில் எரிந்து கருகியதாகவும், 32 சதவீதம் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் … Read more