சட்டவிரோதமாக வந்த 2 சீனர்கள் பிடிபட்டனர்| Dinamalar

சிதமர்ஹி : நம் அண்டை நாடான சீனாவை சேர்ந்த லு லாங், 28, யுவான் ஹெய்லாங், 34, இருவரும் பீஹார் மாநிலம் சிதமர்ஹியில் இருந்து நடந்தே நேபாள எல்லைக்குள் நுழைய முயன்றனர். அப்போது, பிடிபட்ட அவர்களிடம் பீஹார் போலீசார் விசாரித்தனர். சீன நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருந்த இருவரும் விசா இல்லாமல் நம் நாட்டுக்குள் நுழைந்து, தலைநகர் டில்லி அருகே நொய்டாவில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்துஉள்ளனர்.

பின், பீஹார் வழியாக நேபாள நாட்டுக்கு செல்ல முயன்ற போதுதான் பிடிபட்டனர்.முதற்கட்ட விசாரணையில், இவர்கள் நிதி மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இருவரையும் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.