இந்திய வம்சாவளி மாணவனின் கழுத்தை நெரித்த அமெரிக்க மாணவன்.. நீதிமன்றத்தை நாட பெற்றோர் முடிவு..!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் இந்திய வம்சாவளி சிறுவனின் கழுத்தை சக மாணவன் நெறித்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். வகுப்பறை பெஞ்சில் அமர்ந்திருந்த இந்திய வம்சாவளி சிறுவனை, அமெரிக்க சிறுவன் ஒருவன் அங்கிருந்து எழுந்திருக்கும்படி கூறியுள்ளான். அதற்கு இந்திய சிறுவன் மறுக்கவே, அவனது கழுத்தை அமெரிக்க சிறுவன் முழங்கையால் நெரித்துள்ளான். சக மாணவனால் செல்போனில் பதிவு செய்யப்பட்ட இந்த காணொலி இணையத்தில் வைரல் ஆனது. இந்த சம்பவத்தை விசாரித்த பள்ளி நிர்வாகம் அமெரிக்க … Read more

70 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த 3.25 அடி நீள முதலையின் புதைபடிவம் கண்டுபிடிப்பு..!

தென் அமெரிக்க நாடான பெருவில் 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முதலையின் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதைபடிவங்களுக்கு பெயர் பெற்ற கடற்கரை நகரமான அரிகுய்பா-வில் இந்த மூனேகால் அடி நீள புதைபடிவத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் கடலுக்கடியில் வாழ்ந்து வந்த முதலைகள் எப்படி நிலத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு இடம்பெயர்ந்தன என்பதை அறிய இந்த புதைபடிவம் உதவியதாக அவர்கள் தெரிவித்தனர். Source link

ரஷியாவை விட்டு வெளியேறும் மெக்டோனல்ட்ஸ்- பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்

மாஸ்கோ: கம்யூனிச நாடுகளின் கூட்டமைப்பான சோவியத் ஒன்றியம் 1990-களில் பிரிந்தபோது ரஷியாவிற்கு மெக்டோனல்ட்ஸ் உணவகம் வந்தது. இது அமெரிக்க முதலாளித்துவத்தின் அடையாளம் என பேசப்பட்டது.  1990-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி மத்திய மாஸ்கோவில் புஷ்கின் சதுக்கத்தில் இந்த உணவகம் தொடங்கப்பட்டபோது. இதில் விற்கப்படும் பிக் மேக் என்ற பர்க்கரை வாங்குவதற்கு 30,000 பேர் கூடியிருந்தனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த இந்த மெக்டோனால்ட்ஸ் உணவகங்கள் தற்போது ரஷியாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது. உக்ரைனுக்கு எதிராக … Read more

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சீன தலைநகரில் மக்கள் நடமாட்டம் முடக்கம்

பெய்ஜிங்: கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சீன தலைநகர் பெய்ஜிங்கில் மக்களின் நடமாட்டம் முடக்கப்பட்டிருக்கிறது. சுமார் 2.15 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் நாள்தோறும் 1,000 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் வர்த்தக நகரான ஷாங்காயில் வைரஸ் பரவல் அதிகரித்ததால் அந்த நகரில் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. அங்கு 6 வாரங்களுக்கும் மேலாக ஊரடங்கு நீடிக்கிறது. தற்போது வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் ஊரடங்கு … Read more

அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க கரன்சி அச்சடிக்க திட்டம்: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை விற்கும் முடிவில் இலங்கை

கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக சமீபத்தில் பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்க தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு நேற்று முன்தினம் உரையாற்றினார். அப்போது அவர் கூறும்போது, “இலங்கை அரசுக்கு சொந்தமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது. மார்ச் 2021 நிலவரப்படி 4,500 கோடி டாலர் நஷ்டத்தை சந்தித்தது. விமானத்தில் பயணம் செய்யாத ஏழை மக்கள், விமான நிறுவனம் எதிர்கொண்டுள்ள நஷ்டத்தை ஏற்க வேண்டிய அவசியமில்லை. இதைக் கருத்தில் கொண்டு இந்நிறுவனத்தை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல … Read more

ரஷ்யாவின் எச்சரிக்கையை மீறி நேட்டோவில் இணைய பின்லாந்து விண்ணப்பம்

ரஷ்யாவின் கடுமையான எச்சரிக்கைகளை மீறி பின்லாந்து நாடாளுமன்றம் நேட்டோ கூட்டமைப்பில் இணையும் பரிந்துரைக்கு ஆதரவாக வாக்களித்தது. இதனைத் தொடர்ந்து நேட்டோ உறுப்பினராக சேர்வதற்கு பின்லாந்து விண்ணப்பிக்க வழிவகுக்கப்பட்டுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாயந்த இந்த வாக்கெடுப்பில் 188 எம்பிக்கள் நேட்டோவில் இணையும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தநர். எட்டு பேர் மட்டுமே எதிர்த்தனர். பின்லாந்துக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நீண்ட கால நட்பை சுட்டிக் காட்டி ரஷ்யா வலியுறுத்திய போதும் உக்ரைன் போருக்குப் பிறகு எல்லாமே மாறிவிட்டதாக பின்லாந்து பதில் அளித்துள்ளது. … Read more

தாய்க்கு தெரியாமல் செல்போனில் 31 பர்கர்களை ஆர்டர் செய்த 2 வயது குழந்தை

டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கிங்ஸ்வில்லே பகுதியை சேர்ந்தவர் கெல்சி புர்க்கால்டர் கோல்டன். இவரது 2 வயது மகன் பார்ரெட். இவன் தாயின் செல்போனை வாங்கி விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது செல்போனில் இருந்த உணவு ஆர்டர் செய்யும் ஆப் மூலம் மெக்டொனால்டு கடையில் 31 சீஸ் பர்கர்களை குழந்தை பார்ரெட் ஆர்டர் செய்தான். சிறிதுநேரத்தில் 31 சீஸ் பர்கர்களுடன் ஊழியர் கெல்சி வீட்டுக்கு வந்தார். தான் பர்கர் ஆர்டர் செய்யாததால் திகைத்த கெல்சி, மகனிடம் இருந்த செல்போனை … Read more

காதலியைக் கொன்று சடலத்தை புதைக்கும் போது இறந்த காதலன்

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில், காதலியை கொன்ற ஒருவர் இறந்த விசித்திர சம்பவம் ஒன்று நடந்துள்ளது.  காதலியை கொன்று புதைக்கும் செய்யும் போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போன சம்பவம் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காதலியின் கழுத்தை நெரித்து கொலை இந்த விசித்திர சம்பவம் அமெரிக்காவில் நடந்ததாக, ‘நியூயார்க் போஸ்ட்’ நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது. தென் கரோலினாவைச் சேர்ந்த ஜோசப் மெக்கின்னன் என்ற 60 வயது என்பவர் தனது 65 வயது காதலியான பாட்ரிசியா டென்ட்டை கழுத்தை நெரித்து … Read more

அதிகரிக்கும் கரோனா: கடந்த வார நிலவரம் குறித்து உலக சுகாதார நிறுவன இயக்குநர் கவலை

ஜெனீவா: உலகளவில் கடந்த வாரம் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதோனம் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்,”கடந்த வாரம் உலக சுகாதார அமைப்பின் 6 பிராந்தியங்களில் 4ல் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. சோதனைகளும், மரபணு பகுப்பாய்வு சோதனைகளும் கூட உலகளவில் குறைந்துள்ளன. இதனால், கரோனா வைரஸ் இப்போது எந்தப் பகுதியில் ஆதிக்கம் செலுத்துகிறது. அது எவ்வாறாக உருமாறி வருகிறது என்பதை அறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வட கொரியாவில் … Read more

132 பேரை பலிகொண்ட சீன விமானம் திட்டமிட்டே விபத்துக்குள்ளாக்கப்பட்டதா? கருப்புப் பெட்டியின் பதிவுகளை ஆய்வு செய்த அமெரிக்க நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்..!

கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி 132 பயணிகளுடன் விழுந்து நொறுங்கிய சீன விமான விபத்து குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. விமானத்தின் கருப்புப் பெட்டியை ஆய்வு செய்த அமெரிக்க அதிகாரிகள் அந்த விமானம் இறுதிக் கணங்களில் வேண்டுமென்றே செங்குத்தாக தரையை நோக்கி செலுத்தப்பட்டதாக கண்டறிந்துள்ளனர். விமானியின் அறையில் உள்ள யாரோ கட்டளையிட அந்த விமானம் அப்படி தரையை நோக்கி செலுத்தப்பட்டது என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 29 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து 90 … Read more