இந்தியாவில் வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் அதிகரிப்பு: அமெரிக்க அமைச்சர்| Dinamalar

வாஷிங்டன் : இந்தியாவில் மக்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கு இந்தியா சார்பில் பதிலடி தரப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டோனி பிளிங்கன், சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆண்டறிக்கையை வெளியிட்டு பேசியதாவது: உலகளவில் மத சுதந்திரத்திற்கு அமெரிக்கா தொடர்ந்து துணை நிற்கும். இதற்காக சர்வதேச நாடுகள், நிறுவனங்கள், சிவில் அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுவோம். அடுத்த மாதம் பிரிட்டன் அமைச்சரவை கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. … Read more

தானியங்களை திருடி விற்கும் ரஷ்யா: துருக்கிக்கான உக்ரைன் தூதர் குற்றச்சாட்டு

உலகளாவிய உணவு நெருக்கடியை ரஷ்யா ஏற்படுத்தியிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உக்ரைன் மீது படையெடுத்திருக்கும் ரஷ்யா, அந்நாட்டிலுள்ள தானியங்களை திருடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. உலக அளவில் கோதுமை மற்றும் சூரியகாந்தி எண்ணெயின் முக்கிய ஏற்றுமதியாளராக இருந்து வருகிறது உக்ரைன் என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு, அந்நாட்டின் ஏற்றுமதியை சீர்குலைத்துள்ளது, இது உலகளாவிய உணவு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் தானியங்களை திருடி துருக்கி உட்பட வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக துருக்கிக்கான உக்ரைன் தூதர் வாசில் போட்னர் வெள்ளிக்கிழமையன்று (2022, … Read more

இம்ரான் கான் மீது தேசத் துரோக வழக்கு?| Dinamalar

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்டோர் மீது தேசத் துரோக வழக்கு தொடருவது குறித்து, அந்நாட்டின் அமைச்சரவை சிறப்பு குழு கூடி விவாதித்தது.கடந்த மே 25ம் தேதி, இம்ரான் கான் தலைமையில் அவரது கட்சியினர், பாக்., தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பிரமாண்ட பேரணி நடத்தினர். பாக்., அரசை கலைத்து விட்டு பொதுத் தேர்தல் நடத்தக் கோரி நடந்த இந்த பேரணியில், போராட்டக்காரர்கள் – போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது வெடித்த வன்முறையில், ஏராளமான பொதுச் … Read more

அழித்தொழிப்புக்கு உதாரணம் பாகிஸ்தான்; ஐ.நா., கவுன்சிலில் இந்தியா காட்டம்| Dinamalar

நியூயார்க் : ‘பாகிஸ்தான் சொந்த மக்களின் அழித்தொழிப்புக்கு உதாரணமாக விளங்குகிறது’ என, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா காட்டமாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், பாக்., காஷ்மீர் பிரச்னையை எழுப்பியதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. இதில் ஐ.நா.,வுக்கான இந்திய துாதரக குழுவின் சட்ட ஆலோசகர் டாக்டர் காஜல் பட் பேசியதாவது:தற்போது வங்கதேசமாக உள்ள கிழக்கு பாகிஸ்தானில், சொந்த மக்கள் என்றும் பாராமல், 50 ஆண்டுகளுக்கு முன்னால் … Read more

இலங்கையில் 21வது சட்ட திருத்தம் தலைவர்கள் இடையே ஒருமித்த கருத்து| Dinamalar

கொழும்பு:இலங்கையில் அதிபரின் அதிகாரங்களை குறைத்து, பார்லிமென்டுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் 21வது சட்ட திருத்தம் தொடர்பாக நடந்த இரண்டாம் கட்ட கூட்டத்தில், முக்கிய தலைவர்கள் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது.நம் அண்டை நாடான இலங்கையில் அதிபருக்கு வானளாவிய அதிகாரங்கள் கொடுக்கப் பட்டதால் தான், நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக எதிர்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதனால், பார்லிமென்டுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் அப்போதைய பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவால் கொண்டு வரப்பட்டது. அரசியலமைப்பின் 19வது சட்டத் … Read more

ஸ்பெல்லிங் பீ போட்டியில்இந்திய வம்சாவளி சிறுமி வெற்றி| Dinamalar

ஹூஸ்டன்: அமெரிக்காவில் சொற்களை சரியாக கூறும் ‘ஸ்பெல்லிங் பீ” போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, ஹரிணி லோகன்,14, சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ‘ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ’ இறுதிப் போட்டி நடந்தது.இதில், எட்டாவது படிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹரினி லோகன், 90 வினாடிகளில், 22 ஆங்கிலச் சொற்களை சரியாகச் சொல்லி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.அவருக்கு, ஸ்கிரிப்ஸ் கோப்பை, 35 லட்சம் ரூபாய் பணம், மெரியம் – வெப்ஸ்டர் மற்றும் என்சைக்ளோபிடியா பிரிட்டானிக்கா … Read more

ரயில் விபத்து4 பேர் பலி| Dinamalar

பெர்லின்:ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் ரயில் தடம் புரண்டதில், நான்கு பேர் உயிரிழந்தனர். ஜெர்மனியின் தெற்கு பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் என்ற இடத்தில், பயணியர் ரயில் நேற்று தடம் புரண்டது. இரண்டு அடுக்கு பெட்டிகள் உடைய இந்த ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர். படு காயம் அடைந்தவர்கள் ரயில் பெட்டிகளில் இருந்து மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பெர்லின்:ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் ரயில் தடம் … Read more

அமெரிக்கா ஸ்பெல்லிங் பீ போட்டியில் பட்டம் வென்ற இந்திய வம்சாவளி மாணவி

வாஷிங்டன்: அமெரிக்காவில், ஆங்கில வார்த்தைகளுக்கான சரியான, ஸ்பெல்லிங் சொல்லும், தேசிய ஸ்பெல்லிங் பீ போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடப்பது வழக்கம். இந்தப் போட்டிகளில் உலக நாடுகளைச் சேர்ந்த, நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியர்கள் பங்கேற்பர். அவர்களில் மிகச் சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறுதிச்சுற்றுப் போட்டிக்கு அனுமதிக்கப்படுவர்.   இந்நிலையில், அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவி ஹரிணி லோகன் ஸ்பெல்லிங் பீ என்ற ஆங்கில உச்சரிப்புப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். 2022-ம் ஆண்டிற்கான ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ பட்டத்தை … Read more

டெஸ்லாவில் 10 சதவீத ஆட்குறைப்பு: எலான் மஸ்க் அதிரடி| Dinamalar

வாஷிங்டன்: டெஸ்லா நிறுவனத்தில் 10 சதவீதம் ஆட்குறைப்பு செய்ய அதன் நிறுவனர் எலான் மஸ்க் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான ‘டெஸ்லா’வின் நிறுவனர் எலான் மஸ்க் கூறியது, பொருளாதாரம் மிக மோசமான நிலையை எட்டலாம் என உள்ளுணர்வு உள்ளது. இதனை சமாளிக்க டெஸ்லாவில் தற்போதுள்ள ஊழியர்களில் 10 சதவீதம் ஆட்குறைப்பு திட்டமிட்டுள்ளோம். வீட்டில் இருந்து பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் . இனி, வாரத்திற்கு … Read more

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனில் இருந்து 68 லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம்

4.6.2022 00.50: ரஷிய ராணுவத்தின் தாக்குதல் காரணமாக உக்ரைனில் இருந்து இதுவரை 68 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போலந்தில் மட்டும் 36 லட்சம் பேர் குடியேறியுள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் அந்நாட்டின் மக்கள் தொகை கடந்த 3 மாதங்களில் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுதவிர ருமேனியா, ஹங்கேரி, மால்டோவா மற்றும் சுலோவாகியா நாடுகளுக்கும் உக்ரைன் மக்கள் அகதிகளாக சென்றுள்ளனர்.