குழந்தை கடத்தலில் ஈடுபடும் ரஷியா- ஜெலன்ஸ்கி பரபரப்பு குற்றச்சாட்டு

கீவ்: ரஷிய ராணுவம் இதுவரை 2 லட்சம் குழந்தைகளை கடத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 100-வது நாளை நெருங்கி வருகிறது. இந்த போர் உலக அளவில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போரினால் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் இந்த போர் குறித்து  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- ரஷிய ராணுவம் உக்ரைனில் இருந்து 2 லட்சம் குழந்தைகளை கட்டாயமாக கடத்தி சென்றுள்ளது. … Read more

“கொரோனா பரவலால் வடகொரியா நிலைமை மோசமாகி வருகிறது” – உலக சுகாதார அமைப்பு

கொரோனா பரவலால் வடகொரியாவின் நிலைமை மோசமாகி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் அவசரநிலைக்கான இயக்குநர் மைக் ரையன், வடகொரியாவில் நிலவும் உண்மையான நிலையை கண்டறிவதில் சிக்கல்கள் நீடிப்பதாகவும் வடகொரிய அரசு முழுமையான தரவுகளை வழங்காததால் சீனா, தென் கொரியா போன்ற அண்டை நாடுகளின் மூலம் அந்நாட்டின் நிலையை கண்காணித்து வருவதாகவும் கூறினார். மேலும் வடகொரிய மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தாதது குறித்து கவலை தெரிவித்த மைக் ரையன், … Read more

ஒட்டு மொத்த பெண்களுக்கும் பின்னடைவு : ஆம்பர் ஹேர்ட் வருத்தம்!

பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படங்களில் கேப்டன் ஜாக் ஸ்பேரோ கதாப்பாத்திரத்தில் நடித்து உலக அளவில் பிரபலமானவர் ஜானி டெப். இவர், அமெரிக்க நடிகையான ஆம்பர் ஹேர்ட்டை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் படிக்க |Monkeypox Virus: கொரோனாவை தொடர்ந்து அச்சுறுத்தும் அடுத்த வைரல், எச்சரிக்கை விடுத்த ICMR  இந்நிலையில், ஜானி டெபின் பெயரை குறிப்பிடாமல் ஆம்பர் ஹேர்ட் தான் பட்ட பாலியல் … Read more

ஆஸ்திரேலியாவில் 4500 ஆண்டுகள் பழமையான தாவரம் கண்டுபிடிப்பு..!

ஆஸ்திரேலியாவில் நீருக்கு அடியில் 4,500 ஆண்டுகள் பழமையான மிகப்பெரிய தாவரத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள ஷார்க் விரிகுடாவில் உள்ள இந்த தாவரம் சுமார் 200 சதுர கிமீ பரப்பளவில் விரிந்து காணப்படுகிறது. முதலில் இந்த செடியைப் பார்க்கும் போது கடல் புல்வெளி என்று நினைத்ததாகவும், பின்னர், ஆராச்சியில் ஒரு விதையில் இருந்து பரவிய தாவரம் என கண்டறியப்பட்டுள்ளது.  Source link

கொலம்பியாவில் நிலக்கரி சுரங்க வெடி விபத்து – ஒருவர் பலி..!

கொலம்பியாவின் நோர்ட்டே டி சாட்டண்டர் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இடிபாடுகளிடையே சிக்கிக்கொண்டிருக்கும் 14 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 200 மீட்டர் ஆழம் வரை தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்களுக்கு காற்றோட்ட வசதியை ஏற்படுத்தித்தர 55 மீட்டர் ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டு வருவதாக மாகாண சுரங்கத்துறை அமைச்சர் ஆலிவர்ஸ் தெரிவித்துள்ளார். மீத்தேன் கசிவு காரணமாக வெடிவிபத்து நிகழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது. Source link

இலங்கைக்கு 65 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா வழங்க இந்தியா ஒப்புதல்

கொழும்பு, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் உணவு பொருள் உற்பத்தி மற்றும் விநியோகத்தை சீரமைக்க புதிதாக பொறுப்பேற்று ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதே சமயம் இலங்கை மக்களுக்கு தேவையான உணவு, எரிபொருள், மருந்து மற்றும் உரம் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கி இந்தியா உதவி வருகிறது. இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று இலங்கை விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீரா, இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லேவை சந்தித்து பேசினார். அப்போது … Read more

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அடுத்தடுத்து நடவடிக்கை.. வெளிநாட்டு பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தியது இலங்கை..!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இறக்குமதி பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 369 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாட்டை தளர்த்தியதாக இலங்கை நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்நிய செலாவணி செலவை குறைக்கவே வெளிநாட்டு பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டிருந்தது. அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய வங்கிகளுடன் சேர்ந்து, இறக்குமதியாளர்களுக்கு போதுமான அந்நியச் செலாவணியை பெற உறுதிப்படுத்துவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.  Source link

லைவ் அப்டேட்ஸ்: அமெரிக்க அதிபரை சந்திக்கும் நேட்டோ அமைப்பின் தலைவர்

02.06.2022 10.26: ரஷிய, உக்ரைன் போர் 100-வது நாளை எட்டியுள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆயுதம், நிதியுதவிகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் இந்த போரில் ரஷியாவிற்கு எதிரான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த நேட்டோ அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் இன்று சந்திக்கவுள்ளார். 04.50: ரஷியாவிற்கு எதிராக போரிட ராணுவ ஆயுத உதவி அளிக்கும் அமெரிக்காவிற்கு உக்ரைன் வரவேற்பு தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு 700 மில்லியன் டாலர் … Read more

முன்னாள் மனைவிக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கு: நடிகர் ஜானி டெப் வெற்றி…!

வாஷிங்டன், பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படங்கள் கேப்டன் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் நடித்து உலக அளவில் பிரபலமானவர் நடிகர் ஜானி டெப். இவர் லோரி அனி அலிசன் என்ற பெண் ஒப்பனை கலைஞரை 1983-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் 2 ஆண்டுகள் கழித்து 1985-ம் ஆண்டு இந்த தம்பதி பிரிந்து விவகாரத்து பெற்றனர். இதனை தொடர்ந்து ஜானி டெப் திருமணம் செய்துகொள்ளாமல் பல நடிகைகளுடன் திருமணம் அற்ற உறவில் நீடித்து வந்தார். இதையடுத்து, 2015-ம் … Read more

மெக்சிகோவை தாக்கிய “அஹதா” சூறாவளி.. 11 பேர் பலி – 33 பேர் மாயம்..!

மெக்சிகோவின் தெற்கு பகுதியில் உள்ள அஹ்சகா மாகாணத்தில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மணிக்கு 169 கி.மீ வேகத்தில் வீசிய சுறாவளிக் காற்றில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்து குடியிருப்புகள் சேதமடைந்தன. கடுமையான சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால், பல்வேறு மாகாணங்களில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காணாமல் போன 33 பேரை தேடும் பணிகள் … Read more