கீவ் நகரைவிட்டு ரஷ்யப் படைகள் பின்வாங்கவில்லை என்றும், இடம் மாறியுள்ளது என்றும் அமெரிக்கா கருத்து.!

உக்ரைனின் கீவ் நகரைவிட்டு ரஷ்யப் படைகள் பின்வாங்கவில்லை என்றும், இடம் மாறியுள்ளது என்றும் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைனுடனான பேச்சுக்களை அடுத்து நல்லெண்ண நடவடிக்கையாகக் கீவ், செர்னிக்கிவ் நகரங்களை முற்றுகையிட்ட படைகளைத் திரும்பப் பெறுவதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. இது குறித்து அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது குறைந்த எண்ணிக்கையிலான படையினரை ரஷ்யா திரும்பப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். இது கூட உண்மையான படைவிலக்கம் இல்லை என்றும், … Read more

நாங்கள் அப்பாவி அல்ல: படைகளை குறைப்பதாக ரஷியா கூறிய நிலையில் ஜெலன்ஸ்கி கருத்து

ரஷியா – உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் மறுபுறம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நேற்று துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உக்ரைன்- ரஷியா பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது போரை உடனே நிறுத்த வேண்டும் என்று உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதற்கிடையே உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் செர்னிஹிவ் நகரில் போர் பகுதியில் இருந்து ரஷிய ராணுவத்தின் சில பிரிவுகள் வெளியேறும் என்று ரஷியா தெரிவித்தது. இதனால் தலைநகர் கீவ், செர்னிஹில் நகரில் ரஷியாவின் … Read more

ஆதரவை விலக்கிய கூட்டணி கட்சி; பெரும்பான்மையை இழந்தது இம்ரான் அரசு| Dinamalar

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கட்சியுடன் கூட்டணியில் இருந்து எம்.க்யூ.எம் கட்சி ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து, இம்ரான் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், பார்லிமென்டில் மார்ச் 28-ல் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது, ஓட்டெடுப்பு ஏப்.,3-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மொத்தமுள்ள 342 எம்.பி.,க்களில், 172 பேர் … Read more

குறிவைத்து தாக்கப்படலாம்; ரஷ்யாவிலிருந்து வெளியேறுங்கள்: நாட்டு மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரித்துள்ளது அமெரிக்கா. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கி ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிவிட்டது. இந்தச் சூழலில் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா, நேட்டோ நாடுகள் மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவும் ரஷ்யாவைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தியது. இதில் ஓரளவு பலனும் கண்டுள்ளது. அமெரிக்காவின் நட்பு நாடுகள் பலவும் ரஷ்யாவுடனான தங்களின் நட்பை முறித்துக் கொண்டுள்ளன. ரஷ்யா சென்ற அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி … Read more

இம்ரான் கானுக்கு பெரும்பான்மை போச்சு.. கவிழும் ஆட்சி.. இந்தியாவுக்கு ஆபத்தா?

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான தெஹரீக் இ இன்சாப் கூட்டணி அரசுக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பறி போய் விட்டது. இம்ரான் கான் கூட்டணியில் இடம் பெற்றிருந்த முட்டாஹிதா குவாமி பாகிஸ்தான் இயக்கம் என்ற கட்சி, எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன் கை கோர்த்து விட்டது. இந்த கூட்டணி காரணமாக இம்ரான் கான் கட்சிக்கு பெரும்பான்மை பலம் பறி போய் விட்டது. இதனால் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முட்டாஹிதா கட்சியுடனான கூட்டணி குறித்து … Read more

உக்ரைனில் அரசு கட்டிடத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 7 பேர் பலி.!

உக்ரைனில் அரசு கட்டிடத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 7 பேர் கொல்லப்பட்டதாகவும், 22 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு நகரமான மைகோலேவ் பகுதியில் உள்ள பிராந்திய அரசு கட்டிடத்தின் மீது ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பெரிய துளையுடன் அந்தக் கட்டடம் சிதைந்தது புகையுடன் பற்றி எரியும் தீயின் நடுவே மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளில் இருந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். ரஷ்யாவின் படையெடுப்பால் அச்சமடைந்து ஏராளமான பொதுமக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறி … Read more

உக்ரைனின் மைகோலைவ் நகரில் அரசு கட்டிடம் மீது ஏவுகணை தாக்குதல்: 12 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் தாக்குதல் ஒரு மாதத்துக்கு மேல் நீடித்து கொண்டிருக்கிறது. ரஷியாவின் ஏவுகணை, வான்வழி தாக்குதலில் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் உக்ரைனின் தெற்கு நகரமான மைகோலைவ்லில் உள்ள பிராந்திய அரசு கட்டிடத்தை குறிவைத்து ரஷிய படைககள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின. 9 மாடி கொண்ட அந்த கட்டிடம் ஏவுகணை தாக்குதலில் இடிந்து விழுந்தது. அதில் 12 பேர் பலியானார்கள். 33 பேர் படுகாயம் அடைந்தனர். … Read more

கிவ் நகரின் மீது ராணுவ நடவடிக்கையை குறைப்பதாக அறிவித்த ரஷ்யாவிடம் யாரும் ஏமாற வேண்டாம் – அமெரிக்கா

கிவ் நகரின் மீது ராணுவ நடவடிக்கையை குறைப்பதாக அறிவித்த ரஷ்யாவிடம் யாரும் ஏமாற வேண்டாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, திடீரென படைகளைக் குறைப்பதாக ரஷ்யா அறிவித்திருப்பதை விமர்சித்தார். சிறிய அளவிலான படைகள் கிவ் நகரை விட்டு வெளியேறி இருப்பதாக தகவல் வெளியானது என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் இது படைகளை இடம் மாற்றும் உத்தி தான் என்றும் அவர் கூறினார். … Read more

இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல, கூட்டாளிகள்: சீன வெளியுறவு மந்திரி

பீஜிங் : சீன வெளியுறவு மந்திரி வாங் யி, திடீர் பயணமாக கடந்த 25-ந் தேதி இந்தியா வந்தார். தலைநகர் டெல்லியில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவால் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் சீன தலைநகர் பீஜிங்கில் பத்திரிகையாளர்களை சந்தித்த வாங் யி, தனது இந்திய பயணம் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இருதரப்பு உறவுகளின் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பது, இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று அச்சுறுத்தலாக இல்லை … Read more

ரஷ்யா போரை நிறுத்தும் வரை, அமெரிக்க அழுத்தம் தொடரும்! சொல்கிறார் துணை தூதர் ஜூடித் ரேவின்| Dinamalar

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து, ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. இதில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் என்னென்ன? இது தொடர்பாக, சென்னையிலுள்ள அமெரிக்க துணைத் துாதர் ஜூடித் ரேவின் நமது நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டி: கடந்த இருபது ஆண்டுகளில், செசன்யா, ஜார்ஜியா, கிரிமியா போன்ற ரஷ்ய எல்லையோரப் பகுதிகளில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் வேறுசில பகுதிகளிலும், ரஷ்யா இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவற்றைத் தொடர்ந்து, அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும், ரஷ்யா மீது … Read more