ஆசிரியரை 101 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சைக்கோ மாணவன்!

பெல்ஜியம் நாட்டில் ஹெரெண்டல்ஸ் பகுதியில் வசித்து வந்த மரியா வெர்லிண்டன் (57) என்ற ஆசிரியை கடந்த 2020 நவம்பர் மாதம், தமது வீட்டில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீஸார், ஆசிரியையின் உடம்பில் 101 முறை கத்திய குத்தப்பட்ட காயங்கள் இருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இவ்வளவு கொடூரமான முறையில் கொலை செய்த சைக்கோ யார் என்று 100க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்து போலீசார் … Read more

எதிரி நாட்டு செயற்கை கோள்களை விண்ணிலேயே அழிக்க லேசர் ஆயுதம்… அதிரடி காட்டும் சீனா

தைப்பே, நவீன உலகில், தொலைதூர நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருந்தபடி முறையே காணவும் மற்றும் கண்காணிக்கவும் முடியும்.  தொலைக்காட்சி, செல்போன் போன்ற மின்னணு பொருட்களை இயக்க வசதியாகவும், பருவகால மாற்றங்களை கண்டுணரவும் செயற்கைக்கோள்கள் உதவி புரிகின்றன. இவற்றை பல்வேறு நாடுகளும் தங்களது நாட்டில் இருந்தபடி விண்ணுக்கு அனுப்பி தேவைக்கேற்ப பயன்படுத்தி கொள்கின்றன.  விண்ணில் இருந்தபடி செயல்களை கவனிக்க ஏதுவாக சர்வதேச விண்வெளி நிலையமும் செயல்பட்டு வருகிறது.  சர்வதேச விண்வெளி மையத்தின் செயல்பாடுகளில் அமெரிக்கா, … Read more

பறவைக் காய்ச்சல் பீதி எதிரொலி – 50 லட்சம் கோழிக்குஞ்சுகளை கொல்ல முடிவு

கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், பறவைக் காய்ச்சலும் பரவி வருகிறது. அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் வேகம் பன்மடங்காக உள்ளது. இதுதொடர்பான புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு பீதி ஏற்பட்டுள்ளது. மேலும், பறவைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த அனைத்து மாகாணங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. அமெரிக்காவின், அயோவா மாகாணத்தில் 5 மில்லியனுக்கும் அதிகமான கோழிக்குஞ்சுகள் கொல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது. . பறவைக் காய்ச்சல் புகார் அயோவா மாகாணத்தில் உள்ள கோழிப்பண்ணையில் பறவை காய்ச்சல் உறுதி … Read more

ரஷ்ய எல்லையில் சீன ராணுவம் நிற்பது போன்ற புகைப்படம் வைரல் – புகைப்படம் உண்மையல்ல என சீனா மறுப்பு.!

ரஷ்ய எல்லையில் தங்கள் வீரர்கள் இருப்பது போன்று இணையதளங்களில் உலா வரும் புகைப்படம் உண்மையல்ல என சீனா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைக்கு இடையே ராணுவம் மற்றும் பொருளுதவி வழங்குமாறு சீனாவிடம் ரஷ்யா கேட்டதாக வெளியான செய்தியை சீனா மறுத்தது. இந்நிலையில் ரஷ்ய எல்லையில் நவீன ஆயுதங்கள், டாங்கிகள் உள்ளிட்ட வாகனங்களுடன் சீன ராணுவம் அணிவகுத்து நிற்பது போன்ற புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியானது. ரஷ்யாவுக்கு எந்த படைபலத்தையும் வழங்கவில்லை என தெரிவித்துள்ள சீனா, புகைப்படங்கள் உண்மையல்ல … Read more

உக்ரைன் மீது புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் ரஷியா தாக்குதல்

மாஸ்கோ, நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி 24ந்தேதி அந்நாடு மீது ரஷியா படையெடுத்தது.  உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை என ரஷிய அதிபர் புதின் கூறினார்.  உக்ரைனின் ராணுவ உட்கட்டமைப்பு மீதே தாக்குதல் நடைபெறுகிறது என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போரானது தொடர்ந்து 24வது நாளாக நீடித்து வருகிறது.  இந்த போரில், குடிமக்களில் 600 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து … Read more

உக்ரைனில் இந்தியத் தூதரகம் தொடர்ந்து செயல்படும் – போலந்து இந்திய தூதரகம்

உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து செயல்படும் என்றும், உதவி தேவைப்படும் இந்தியர்கள் தகவலளிக்கலாம் என போலந்து இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. போலந்தின் வார்ஷாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில், உக்ரைனில் ஏனைய இந்தியர்களுக்காக கீவ் நகரில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து செயல்படும் என்றும், உதவிகள் தேவைப்படுபவர்கள் தூதரகம் வெளியிட்டுள்ள 24 மணிநேரமும் செயல்படக்கூடிய பிரத்யேக வாட்ஸ்அப் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவிக்கு +380933 559958, +919205 … Read more

பிரேசிலில் டெலிகிராம் செயலிக்கு தடை விதிப்பு..!

பிரேசிலியா, பிரேசிலின் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவில்லை என்ற காரணத்தினால் பிரேசிலில் டெலிகிராம் செயலிக்கு தடை விதித்துள்ளார். அக்டோபரில் நடைபெற இருக்கும் மறுதேர்தலுக்கு டெலிகிராமை ஒரு கருவியாக பயன்படுத்த நினைத்த பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோவுக்கு இந்த தடை அதிர்ச்சியாக அமைந்துள்ளது. டெலிகிராமில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் அவரை பின்தொடர்கின்றனர். இதுகுறித்து நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் தன்னுடைய தீர்ப்பில், பிரேசில் அதிகாரிகளின் கோரிக்கைகளை டெலிகிராம் பலமுறை புறக்கணித்துள்ளது. குறிப்பாக சில … Read more

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்பைச் சந்தித்த புகைப்படம் பெரும் சர்ச்சை.!

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்பைச் சந்தித்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 2016ம் ஆண்டு துபாய் சென்ற பர்வேஸ் முஷரப் அதன் பின்னர் பாகிஸ்தான் திரும்பவில்லை. முஷரப் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதே அதற்கு காரணமாகும். இந்த நிலையில் சக்கர நாற்காலில் முஷரப் அமர்ந்திருக்கும் நிலையில் அவர் அருகே பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நிற்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. இருவரும் எப்படி, … Read more

இந்திய பெண்கள் மூன்றாவது தோல்வி: அரையிறுதியில் ஆஸி.,| Dinamalar

ஆக்லாந்து: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட்டில், இந்திய பெண்கள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறியது. நியூசிலாந்தில் பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. ஆக்லாந்தில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா மோதின. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங் தேர்வு செய்தது. மந்தமான ஆட்டம் இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா (10), ஷபாலி (12) ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. பின் யஸ்திகா, கேப்டன் மிதாலி ராஜ் … Read more

புதின் பேச்சு பாதியிலேயே நிறுத்தம்; ரஷிய தொலைக்காட்சியால் பரபரப்பு

மாஸ்கோ,  உக்ரைன் மீது ரஷிய படைகள் 24 நாட்களாக தீவிர தாக்குதல் தொடுத்து வருகிறது.  ரஷியா கடந்த 2014ம் ஆண்டு கிரிமியாவை தனது நாட்டுடன் இணைத்தது மற்றும் உக்ரைனில் ரஷிய ராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கை ஆகியவற்றுக்கு ஆதரவாக ரஷிய அதிபர் புதின் நாட்டு மக்கள் முன் உரையாற்றினார். இதற்காக, அந்நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் கலந்து கொண்டார்.  லுஸ்னிகி மைதானத்தில் நடந்த இந்த பொதுக்கூட்டத்தில், மைதானத்துக்கு உள்ளேயும், வெளியேயும் 2 … Read more